திங்கள், 27 ஜூன், 2022

அகஸ்தியர் கூறும் ஞானதவம்


🔥 அகஸ்தியர் கூறும் ஞானதவம் 🔥


"கண்ணில் நின்ற ஒளிபாரு வெளியைப் பாரு
காலடங்கி யாடுகின்ற கருவைப்பாரு
விண்ணில் நின்று பொருள்சொன்ன குருவைப் போற்றி”
- அகஸ்தியர் மெய்ஞ்ஞான சூத்திரம்




வெளிப்படையாகவே கூறிவிட்டார் அகத்தியர் !
கண்ணில் நின்ற ஒளிபாரு ! இதுவே ஞானதவம் !

கண் ஒளியை பார்த்து பார்த்து உணர்ந்து உணர்ந்து கண்மணி நடுவே ஊசி முனைவாசல் வழி உட்புகுந்து உள்ளே வெட்ட வெளியைப்பாரு !


நீ உள்முகமாய் உணர்வோடு சும்மா இருக்கும் போது வெளியே கண்இரண்டும் 
அடங்கிப்போகும் ! இரு கண்ணும் உள்ளே உள்ள உன் கருவாம் 
உன் உயிரைப் பார்த்து அதோடு லயிக்கும் !!
இதை விண்ணில் நின்று, எல்லாமே வெட்டவெளிதான் என உணர்ந்து 
அங்கிருந்து உபதேசம் தீட்சை செய்தகுருவை போற்று !

🙏உன் ஞானசற்குருவை எப்போதும் போற்றி பணிந்து தொண்டுசெய் !🙏
"குருவினடி பணிந்து கூடுவதல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்"

- ஒளவைக்குறள் !

குரு நமக்கு அவர் உயிரை கொடுத்தல்லவா நம் உயிரை நமக்கு உணர்த்துகிறார் ?!

நமக்கு இரண்டாவது பிறப்பு தரும் குருவை வணங்காமல் 
இருப்பது கொடும் பாவமல்லவா ?

குருவைப் பணி !

குரு பார்க்க கோடிவினை தீரும் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள்!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts