திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
ஞாயிறு, 26 ஜனவரி, 2025
எட்டு எட்டாக வாழ்வை பிரித்துக் காட்டினார்கள்!
சாகாக்கல்வி நூலிலிருந்து : 45
🔥 ஒப்பற்ற ஞானம் ! 🔥
கடவுள், பக்தி என்று சாமியாராய் போகச் சொல்லவில்லை !
"களவும் கற்றுமற"
நல்ல உபதேசமல்லவா ?
ஞானம் இது என அறிய வேண்டாமா ?
நான் யார் என உணர வேண்டாமா ?
ஓர் எட்டில் வளர்ச்சி.
ஈரெட்டில் கல்வி.
மூவெட்டில் இல்லறம்.
நாலெட்டில் பிள்ளைப்பேறு.
ஐயெட்டில் சம்பாத்யம்.
ஆறெட்டில் கடமைசெய்தல்.
ஏழெட்டில் தீர்த்தயாத்திரை.
எட்டெட்டில் சந்நியாசம்.
இப்படி சித்தர்கள் நம் வாழ்வை எட்டுஎட்டாக பிரித்து அக்காலங்களில் செய்ய வேண்டியவைகளை மெய்யுள்ளபோது சிறப்பாக செய்ய அறிவுறுத்தினர் !
எட்டிலிருக்கும், மெய்யிலுள்ள மெய்ப்பொருளைத்தான் ! புரிந்து கொள்ள எட்டுஎட்டாக வாழ்வை பிரித்துக் காட்டினார்கள் !
மனிதா, ஏன் 10 பத்தாக பிரித்திருக்கக் கூடாதா ?
மெய்ப்பொருளை சொல்லும் எட்டாக, எப்படியாவது எட்டை ஞாபகத்தில் கொள்ள வேண்டி, மெய்ப்பொருள் நம் அறிவுக்கு எட்டவேண்டி எட்டு எட்டு என கட்டுரைத்தனர். சுட்டிக்காட்டினர்.
இது மெய்தானே !
பக்தியில் பலர் உடலை வருத்தி பல சாதனைகள் செய்கின்றனர் !
மனோதிடம் இல்லாத கடினமானவர்கள் செய்ய வேண்டியது தான் !
ஆனாலும் இது சரியல்ல !
அன்பே வடிவான இறைவனை, கருணைக்கடலான கடவுளை, அருள்மயமான ஆண்டவனை அடைய கடினபோக்கு தேவையில்லை !
அன்பே கடவுள் என்றனர் ஆன்றோர் ! கடவுளை அடைய அன்பு ஒன்றே வழி !
👁️ மெய்யினுள் மெய்ப்பொருளை அன்பால் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்வதே சும்மா இருக்கும் நிலையே ஒப்பற்ற ஞானம் !
👁️ மெய்யை வருத்தாது, மெய்யிலுள்ள மெய்ப்பொருளை மெய்ஞ்ஞான சற்குருமூலம் அறிந்து உணர்ந்து மேன்மை பெறலாம் !
இது மெய் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
ஞாயிறு, 24 நவம்பர், 2024
🔥 திருமூலர் கூறும் ஞானம் 🔥
🔥 திருமூலர் கூறும் ஞானம் 🔥
"திருவடியே சிவ மாவது தேரில்
திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில்
திருவடியே செல் கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள்தெளி வார்க்கே"
திருமந்திரம் - 138
இறைவனின் திருவடியே நமது கண்கள் !
சற்குரு உபதேசம் பெற்று தவம் செய்தால் நம் உள்ளம் புரிந்து கொண்டால் நம் கண்களே சிவமாகிய ஒளி உள்ளது என தெளிவாக உணரலாம் ! தேறிட்டாம்பா ! என நம் உறுதியை பார்த்து மற்றவர் கூற வேண்டும் !
திருவடியாகிய நம் கண்களே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்கு நம்மை அழைத்துச் செல்லுமாதலால் அதுவே சிவலோகம் அல்லவா ?
எப்படிபோகும் ? நாம் கண்ணில் மணியில் ஒளியை வைத்து சிந்தித்தால் அல்லவா செல்லும் !
மணியில் மனதை இருத்து !
திருவடியே நமக்கு கதி மோட்சம் தருவதாகும்.
திருவடி மூலமாகத் தானே சிவலோகம் சேரலாம் !
சேர்ந்து சிவ நடனம் காணலாம் ! கண்டால் தானே கதி மோட்சம் !
திருவடியே தஞ்சம் என பரிபூரண சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும் ! அதாவது வினைகளற்று பரிசுத்தமாகும் ! அழுக்காகிய மும் மலம் அகன்று ஆத்மா தெளிவாக துலங்கும் !
▪️எல்லாவற்றுக்கும் தேவை திருவடி !
▪️எல்லாம் பெற தேவை திருவடி !
▪️நாம் நாட வேண்டியது திருவடி !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
திங்கள், 5 ஆகஸ்ட், 2024
🔥திருவடிப் புகழ்ச்சி - திருஅருட்பா🔥
பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம்
பதித்துவ பரோபரீணம்
பஞ்சகிர்த்திய சுத்த கர்த்தத்துவம் தற்
பரம் சிதம்பர விலாசம்
பகர்சுபாவம் புனிதம் அதுலம் அதுலிதமம்
பராஅம்பர நிராலம்பனம்
பரவு சாக்ஷாத்கார நிர் அவயவம் கற்
பனாதீத நிருவி காரம்
பரிபவ விமோசனம் - பரிபவம் + விமோசனம் அவரவர் பரிபக்குவத்திற்கு, வினைக்குதக்கபடி வாழ்வுக்கு தக்கபடி அமையும் நிலையிலின்று மீட்டு விமோசனம் உயர்வு கொடுப்பது நம் கண்மணியே !
குணரகிதம் - குணங்களின் தொடர்பு அற்றது !
விசுவம் - உலகம் !
பதித்துவம் - பதியாய் விளங்கும் தன்மை பெற்றது !
பரோபரீணம் - எண்ணிய உடனேயே உலகெங்கும் செல்லும் ஆற்றல் பெற்றது !
பஞ்சகிர்த்தியம் -படைத்தல் காத்தல் மறைத்தல் அருளல் அழித்தல் என்று இறைவன் தொழில் ஐந்து !
சுத்தகர்த் தத்துவம் - அனைத்தினுக்கும் கர்த்தாவான சுத்தபரம்பொருள் !
தற்பரம் - பரம்பொருளைவிட மேலானது இல்லை !
சிதம்பர விலாசம் - சின்ன இடத்தில் மேடையில் துலங்கி விளங்குவது ! வெளியிலே ஒளி !
பகர்சுபாவம் - தானாக சுயமாக தோன்றி துலங்கும் ஒளி எல்லோரும் சொல்வது !
புனிதம் - பரிசுத்தம் - தூய்மை !
அதுலம் அதுலிதம் - அது - பரம்பொருள் எதோடும் ஒட்டாதது. அது எதற்கும் ஒப்புமாகாது !
அம்பராம்பரம் - ஆகாயத்தையும் தன்னுள் கொண்ட அகண்டவெளி !
நிராலம்பனம் - நிர் + ஆலம்பனம் எவ்வித பற்றும் ஆதாரமும் இல்லாதது ஆனால் எல்லாவற்றிற்கும் ஆதாரமானது !
பரவுசாக்ஷாத்காரம் - சும்மா இருந்தால் சாக்ஷாத் அந்த பரம் பொருளையே நம்முன் எங்குமாய் பரந்து இருப்பதை காணலாம் !
நிர்அவயவம் - நம்போல் உருவம் அவயவங்கள் இல்லாதது ! ஒளிக்காட்சி !
கற்பனாதீதம் - கற்பனைக்கு எட்டாதது !
நிருவிகாரம் - விருப்புவெருப்பு அற்றவன் விகாரம் ஆசை அற்றவன் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
செவ்வாய், 31 அக்டோபர், 2023
தனிஒருவன் மாறனும் ! - சநாதனதர்மம்
🔥 தனிஒருவன் மாறனும் ! 🔥
அறியாமையில் உழலும் மக்களை மிருக நிலையில் வாழும் மக்களை திருத்தி மனிதனாக வாழ வைப்பதே ஞானிகளின் ஒரே செயல். அதற்கு அவர்கள் குருவை பற்றிக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.
நல்வழி காட்டும் நல்ல ஒரு குரு தேவை.
நன்னெறி நடத்தும் வல்ல ஒரு குரு தேவை.
ஞான குரு வேண்டும் !
இறைவனை உணர்த்தும் குரு வேண்டும் !
எவன் ஒருவன் பேதம் பார்க்கிறானோ
அவன் இறைவனை அடைய முடியாது !
எவன் ஒருவன் தீயபழக்கம் உடையவனோ
அவன் இறைவனை அடைய முடியாது !
எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணுபவன் எவனோ எல்லாவுயிரும் இன்புற்றிருக்க
அவனே ஞானவான் !
அரபியில் சொன்னாலும், ஹீப்ரூவில் சொன்னாலும், சமஸ்கிருதத்தில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் எல்லோராலும் சொல்லப்பட்டது - இறைவனைப் பற்றி மட்டுமே !
மொழியை பார்க்காதீர்கள் !
உபதேச மொழியை பாருங்கள் !?
இனத்தை நாட்டை பார்க்காதீர்கள் !
மனித இனம்தான் என உணருங்கள் !?
ஒவ்வொருவரும், நான் மனிதன் ! உலகிலுள்ள அனைவரும் என்
மதத்தை பரப்ப நினைக்காதீர்கள் !
மதம் எனும் ஆணவம் கொண்டு அலையாதீர்கள் மனிதனாக பாருங்கள் !
மனிதகுலம் தழைக்க பாடுபடுங்கள் !
எல்லோரிடமும் அன்பாக இருங்கள்.
🔥 இதெல்லாம் வர வேண்டுமானால் அதற்கு ஒவ்வொரு வரும் தன்னை
தனி ஒருவன் மாறினாலே, சமுதாயம் மாறும் !
திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
தனிமனிதன் மாறவே தவஞானிகள் அருள்புரிகிறார்கள். காப்பாற்றுகிறார்கள்.
நான் நல்லவனாக இருக்க வேண்டும் !
என எல்லோரும் எண்ண வேண்டுமே !? இதற்கெல்லாம் தான் குரு வேண்டும்!
உலகுக்கே ஆதி குரு முதல் குரு "ஸ்ரீ தட்சிணாமூர்த்தி"தான் !
இதுவே உண்மை !
அதன்பின் தந்தைக்கே உபதேசித்தான் தனயன் !? ஆறுமுகங் கொண்டவன் !
அகத்தியருக்கும் உபதேசித்தான் !
அருணகிரிக்கும் உபதேசித்தான் ! அழகனே !
இந்த வழிவந்த, வாழையடி வாழையென வந்தவர்தான்
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
செவ்வாய், 5 செப்டம்பர், 2023
🔥 பிறவிக்கு வித்து எது ? 🔥 நூல் : சநாதனதர்மம்
🔥 பிறவிக்கு வித்து எது ? 🔥
அங்கமதில் முதல்முதலாய் தோன்றிய தலம் எது ? அதை சொல்லி, அதில் உயிர் இருக்கும் தன்மையை சொல்பவனே உண்மையான குரு என அகஸ்தியர் கூறுகிறார்.
தாயின் கருப்பையிலே முதன்முதலாக உருவாவது கண். தந்தையின் சுக்கிலமும் தாயின் சுரோணிதமும் சேரும்போது முதலில் உருவாவது ஒரு கண்.
அது இரண்டாகி இரு கண்களாகிறது. சுக்கில சுரோணித ஒளியே இருகண்களில் துலங்கி, அந்த ஒளியே வெதுப்பி வெதுப்பி பிண்டம் வளருகிறது.
பிண்ட உற்பத்தி ஓரளவு வளர்ச்சியடைந்த பின்னரே,
உயிர் வினையால் மூடப்பட்டு இறைவனால் உடலில் சேருகிறது.
பிறப்பின் இரகசியம் இதுவே !?
உடல் வளர்ந்து உயிர் சேர்ந்த பின்னரே மனிதன் பிறக்கிறான் வினைகளுக்கு தகுந்தபடி !
பிறவிக்கு வித்து கர்மவினைகளே !
கர்ம வினைகள் இருக்கின்றவரை பிறவி உண்டு !
பிறப்பு நிகழக் கூடாதென்றால் கர்மவினை இருக்கக்கூடாது !
வினையால் உயிர் பிறக்கிறது !
பிறப்பறுக்க வந்ததுவே இம்மானிட பிறவி !
ஏன் பிறந்தோம் ? இனி பிறவாமல் இருக்க !
பிறப்புக்கு காரணமான வினைகளை தெரிந்து அதை இல்லாமலாக் குவதே சாதனை !
வினைகளை அழிக்க வேண்டுமாயின், அதை கொடுத்த உயிரான அந்த இறைவனை சரண் அடைவதைத்தவிர வேறு வழிகிடையாது !?
எல்லாம்வல்ல, எங்கும் நிறைந்த சர்வமுமான அந்த இறைவனே ஊசிமுனை அளவு நெருப்பாக - ஜோதியாக - நம் உடலில் கண்களில் உயிராக துலங்கு கின்றான் !
ஞானிகள் உரைத்த சத்திய வார்த்தை இது !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
வள்ளல்பெருமான் மலரடிகள் போற்றி !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
திங்கள், 26 டிசம்பர், 2022
🔥 மெய் அனுபவம் பெற வேண்டுமா ? 🔥
நமது மெய் சூடாக இருக்கிறதல்லவா ? ஏன் ?
பேரொளியான இறைவன் சிற்றொளியாகி நம் உயிராகி நம் உடலினுள் இருப்பதால்தான் !
சராசரி மனிதனின் உயிர் உஷ்ணம் ஒரே சீராக இருக்க வேண்டும் !
கூடினால் ஜுரம் குறைந்தால் ஜன்னி காலனை பார்க்க போய்விட வேண்டியதுதான் !
உயிரின் தன்மை உஷ்ணம் தான், சூடு தான் ஒளிதான் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.
உயிர் இருக்கின்ற நம் உடல் சூடாக இருக்கிறது.
உயிர் போன உடல் குளிர்ந்து போய் விடுகிறதல்லவா ?
உயிர் இருந்தால் சூடு இருக்கிறது. அப்படியானால் உயிரின் தன்மை சூடு தானே ! உயிர் ஒளி தானே !
மெய்ப்பொருளில் கண்மணியில் ஒளி இருக்கிறது, உயிர் துலங்குகிறது என்பது மெய்யே !
" சூடு கொண்ட திருவாவடுதுறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே "
என துறையறி விளக்கத்தில் அகஸ்திய மாமுனிவர் கூறியருளியது மெய்தானே !
திருவாகிய இறைவன் ஆடிக்கொண்டிருக்கும் துறை - இடமான, சூடு கொண்ட இரு கண்களுமே பார்க்கும்போது அனுபவத்தில் உணரலாம் !
வலது கண் சூரியனாகவும் இடது கண் சந்திரனாகவும் தோன்றி ஒளி ஒன்றாகும்.
இங்கு தவ நிலையையும் கூறியருள்கிறார் அகத்திய மாமுனிவர் :
நம் இரு கண்களையும் சூடு கொள்ள, உணர்வால் சூடு பெருகிட செய்து பார்க்கையில் சூரிய சந்திரனாகிய இரு கண் ஒளி ஒன்றுசேர்ந்துவிடும். அக அனுபவம் கிட்டும் !
வள்ளல்பெருமான், நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து விழித்திருந்து தவம் செய்ய சொல்கிறார் !
மெய் அனுபவம் பெற வேண்டுமாயின் மெய்யிலே விளங்கும் மெய்ப்பொருளைப் பற்ற வேண்டும் !
மெய்ஞ்ஞானம் இது எனவே சித்தரும் முத்தரும் உரைத்ததை அடியேன் எழுதியிருக்கிறேன் !
இது ஒன்றே மெய் !
மெய்யாலுமே இதுவே மெய் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.