திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
வியாழன், 4 ஏப்ரல், 2024
திருமந்திரம் ஞானவிளக்கம்
🔥திருமந்திரம் 373 - ஞானவிளக்கம்🔥
"வானே ழுலகுறும் மாமணி கண்டனை
யானே அறிந்தேன் அவன் ஆண்மையாலே"
வானேழுலகுறும் - இப்பிரபஞ்சம் எல்லையில்லாமல் விரிந்து பரந்த வான் வெளிதானே !
எல்லாமே வான் வெளியில் வெட்ட வெளியில் தானே கொட்டிக்கிடக்குது !
அப்படிப்பட்ட வான்வெளி எங்கும் நிறைந்திருக்கும் ஒவ்வொரு அணுவிலும் அணுவாக ஒளியாக இருப்பவனல்லவா ஆண்டவன் ! ஆண் - மகன் !
ஒவ்வொரு அணுவையும் ஆண்டு கொண்டு இருப்பவன் ! இப்பிரபஞ்சத்தின் ஒரே ஆண் ! புருஷோத்தமன் இறைவனே !
பரமாத்மாவாகிய இறைவனே ஆண் !
ஜீவாத்மாவாகிய நாமனைவருமே பெண் !
அந்த ஆணுடன், ஆண்- டவன், ஆண் அவனுடன் சேர்வதே பெண்ணாகிய நமக்கு பெருமை ! பெண்ணாகிய நம் வாழ்வும் பூரணமாகும் !
ஞானம் எவ்வளவு சுவையானது பாருங்கள் !
🙏இந்த ஆண்மகன் என் மணியிலும் கண்மணியின் உள்ளிலும் இருப்பதை யான்
அறிந்தேன் குரு உபதேசத்தாலே ! அறிவித்தான் என் கண்மணியான ஒளியே !🙏
அவன் அருளாலே அவன் திருவடியை என் கண்மணியை அறிந்து உணர்ந்து அவனையே அடைந்தேன் !
எல்லாம் அவன் செயல்தானே !
அவனே - சிவனே என் கண்ணாக இருந்து அறிவித்து தன்னோடு என்னை சேர்த்தும் கொண்டான் !
எல்லாம் அவன் செயலே தான் ! சந்தேகமேயில்லை !
"அவனருளாலே அவன் தாள் பணிந்து" என மணிவாசகர் மணிவாசகம் - திருவாசகத்தில் பகர்ந்ததை உணர்க !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக