வியாழன், 4 ஏப்ரல், 2024

திருமந்திரம் ஞானவிளக்கம்


🔥திருமந்திரம் 373 - ஞானவிளக்கம்🔥


"வானே ழுலகுறும் மாமணி கண்டனை
யானே அறிந்தேன் அவன் ஆண்மையாலே"

 வானேழுலகுறும் - இப்பிரபஞ்சம் எல்லையில்லாமல் விரிந்து பரந்த வான் வெளிதானே ! 
 எல்லாமே வான் வெளியில் வெட்ட வெளியில் தானே கொட்டிக்கிடக்குது ! 
 அப்படிப்பட்ட வான்வெளி எங்கும் நிறைந்திருக்கும் ஒவ்வொரு அணுவிலும் அணுவாக ஒளியாக இருப்பவனல்லவா ஆண்டவன் ! ஆண் - மகன் ! 

 ஒவ்வொரு அணுவையும் ஆண்டு கொண்டு இருப்பவன் ! இப்பிரபஞ்சத்தின் ஒரே ஆண் ! புருஷோத்தமன் இறைவனே ! 

பரமாத்மாவாகிய இறைவனே ஆண் !
ஜீவாத்மாவாகிய நாமனைவருமே பெண் !

அந்த ஆணுடன், ஆண்- டவன், ஆண்அவனுடன் சேர்வதே பெண்ணாகிய நமக்கு பெருமை ! பெண்ணாகிய நம் வாழ்வும் பூரணமாகும் !

ஞானம் எவ்வளவு சுவையானது பாருங்கள் !

🙏இந்த ஆண்மகன் என் மணியிலும் கண்மணியின் உள்ளிலும் இருப்பதை யான் 
அறிந்தேன் குரு உபதேசத்தாலே ! அறிவித்தான் என் கண்மணியான ஒளியே !🙏

அவன் அருளாலே அவன் திருவடியை என் கண்மணியை அறிந்து உணர்ந்து அவனையே அடைந்தேன் !

எல்லாம் அவன் செயல்தானே !

அவனே - சிவனே என் கண்ணாக இருந்து அறிவித்து தன்னோடு என்னை சேர்த்தும் கொண்டான் !

எல்லாம் அவன் செயலே தான் ! சந்தேகமேயில்லை !

"அவனருளாலே அவன் தாள் பணிந்து" என மணிவாசகர் மணிவாசகம் - திருவாசகத்தில் பகர்ந்ததை உணர்க !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts