🔥திருமந்திரம் 373 - ஞானவிளக்கம்🔥
"வானே ழுலகுறும் மாமணி கண்டனை
யானே அறிந்தேன் அவன் ஆண்மையாலே"
வானேழுலகுறும் - இப்பிரபஞ்சம் எல்லையில்லாமல் விரிந்து பரந்த வான் வெளிதானே !
எல்லாமே வான் வெளியில் வெட்ட வெளியில் தானே கொட்டிக்கிடக்குது !
அப்படிப்பட்ட வான்வெளி எங்கும் நிறைந்திருக்கும் ஒவ்வொரு அணுவிலும் அணுவாக ஒளியாக இருப்பவனல்லவா ஆண்டவன் ! ஆண் - மகன் !
ஒவ்வொரு அணுவையும் ஆண்டு கொண்டு இருப்பவன் ! இப்பிரபஞ்சத்தின் ஒரே ஆண் ! புருஷோத்தமன் இறைவனே !
பரமாத்மாவாகிய இறைவனே ஆண் !
ஜீவாத்மாவாகிய நாமனைவருமே பெண் !
அந்த ஆணுடன், ஆண்- டவன், ஆண்அவனுடன் சேர்வதே பெண்ணாகிய நமக்கு பெருமை ! பெண்ணாகிய நம் வாழ்வும் பூரணமாகும் !
ஞானம் எவ்வளவு சுவையானது பாருங்கள் !
🙏இந்த ஆண்மகன் என் மணியிலும் கண்மணியின் உள்ளிலும் இருப்பதை யான்
அறிந்தேன் குரு உபதேசத்தாலே ! அறிவித்தான் என் கண்மணியான ஒளியே !🙏
அவன் அருளாலே அவன் திருவடியை என் கண்மணியை அறிந்து உணர்ந்து அவனையே அடைந்தேன் !
எல்லாம் அவன் செயல்தானே !
அவனே - சிவனே என் கண்ணாக இருந்து அறிவித்து தன்னோடு என்னை சேர்த்தும் கொண்டான் !
அவன் அருளாலே அவன் திருவடியை என் கண்மணியை அறிந்து உணர்ந்து அவனையே அடைந்தேன் !
எல்லாம் அவன் செயல்தானே !
அவனே - சிவனே என் கண்ணாக இருந்து அறிவித்து தன்னோடு என்னை சேர்த்தும் கொண்டான் !
எல்லாம் அவன் செயலே தான் ! சந்தேகமேயில்லை !
"அவனருளாலே அவன் தாள் பணிந்து" என மணிவாசகர் மணிவாசகம் - திருவாசகத்தில் பகர்ந்ததை உணர்க !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
"அவனருளாலே அவன் தாள் பணிந்து" என மணிவாசகர் மணிவாசகம் - திருவாசகத்தில் பகர்ந்ததை உணர்க !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக