வெள்ளி, 13 அக்டோபர், 2023

🔥 ஆன்மநேயம் ? 🔥 சநாதனதர்மம்


நாம் செய்த முற்பிறவி பிராரத்துவ வினையால் பிறந்த நாம்,,,

இப்பிறப்பில் மேலும் மேலும் பாவஞ்செய்யாமல், நல்ல குருவை பணிந்து, திருவடி தீட்சை பெற்று இப்போது செய்கின்ற கர்மங்களை பகவான் பாதத்தில் அர்ப்பணித்து எல்லாம் நீயே என பரிபூரண சரணாகதி அடைந்து வாழ்வோமானால் ஆகாமியகர்மம் நம்மை சேராது.

இப்படி வாழ்வதுதான் வாழ்க்கை !
" கர்மாவை செய் பலனை என்னிடம் விட்டுவிடு "

என பகவத் கீதையில் கண்ணன் உரைத்ததை சிந்திக்கவும்.

" எல்லாம் அவன் செயல் "
என்பதை முழுமையாக உணர்ந்து வாழ்வதே வாழ்க்கை !

" என் செயலாவது யாதொன்றுமில்லை "
என முழுமையாக இறைவனிடம் - திருவடியில் சரணடைந்து வாழ்வதுதான் வாழ்க்கை.

" நான் யார் "
என்பதை அறிய முற்படுவதே அதற்காக பிரயர்த்தனபடுவதே வாழ்க்கை !

சமுதாயத்தில் ஒவ்வொருவரும் அவரவர் கடமையை செவ்வனே செய்ய வேண்டும். எல்லோரும் சேர்ந்ததுதான் சமுதாயம். பெரியவன் சிறியவன் எல்லாம் கிடையாது.

எல்லாதொழில் செய்பவரும் வேண்டும் !

எல்லோரும் எல்லா தொழிலையும் செய்ய முடியாது ! எல்லோரும் தத்தம் கடமையை சரிவரச் செய்தாலே நாடு சுபிட்சமடையும், மனித வாழ்க்கை மேம்படும்.

இப்போது நமக்கு கிடைத்த வாழ்க்கை எப்படிபட்டதாயினும் சரி, அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து சிறப்புடன், அர்ப்பணிப்பு மனபாவத்துடன் வாழ்ந்தால் ! யாரும் வாழ்வாங்கு வாழலாம் !

நமக்கு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதுவும் செய்துவிட முடியுமா ?

போலீஸ், கோர்ட்டு இதெல்லாம் எதற்கு ?

நம் சுதந்திரம் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். பிறரை துன்புறுத்தாத செயல்களை செய்யத்தான் நமக்கு சுதந்திரம் இருக்கிறது.

நம்மால் ஒரு சிறு உயிருக்கும் எப்போதும் எந்த துன்பமும் வராமல் வாழ்வதுதான் உன்னதமான வாழ்க்கை !

இன்றைய உலகில் எல்லோரும் மனிதநேயம் வேண்டும். மனிதநேயம் உலகம் முழுவதும் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

இந்திய ஞானிகள் என்றோ இதைவிட மேலாக உபதேசித்துள்ளனர்.


"ஒன்றேகுலம் ஒருவனே தேவன்"
"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க"
"எவ்வுயிரும் தம்முயிர் போல் கருதுக"


இப்படி மனிதநேயத்தைவிட மிக உயர்ந்த ஆன்ம நேயத்தை போதித்தனர் !

மனிதனை மட்டும் நேசிக்க சொல்லவில்லை !
எல்லா ஜீவராசிகளையும் உன் உயிர்போல் அன்புகாட்டு என்பதே ! சிறந்தது.

உலகுக்கே இந்திய நாடு ஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்துகின்றது.
இதுவே இந்தியாவின் பெருமை.

மனம் விரிந்து பரந்து இருக்க வேண்டும். எல்லா ஆத்மாவும் இறை சொரூபந்தான் என்பதை உணர வேண்டும்.

அதுதான் வாழ்க்கை.


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts