செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

தெய்வத்தால் ஆகாது ??


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
 
தெய்வத்தால் ஆகாது - எல்லாம் அவன் செயல் என்று சொல்கிறோம். அப்போ திருவள்ளுவர் தெய்வத்தால் ஆகாது என்று சொல்லுகிறார். நம்ம கிட்ட இருக்கு(தெய்வம்) உள்ளே இருக்குது அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏன்? வினையில் act பண்ணி கொண்டு இருக்கிறோம். உள் இருக்கும் தெய்வத்தால் ஆகாமல் வினை ஆட்டுவிக்கின்றது. அப்போ இந்த வினையை தீர்த்தால்
முயற்சி செய்து தவம் செய்து தீர்த்தால் .. தெய்வத்தால் எல்லாம் ஆகும். இதுதான் திருக்குறளுக்கு விளக்கம். யாராவது சொல்லி இருக்காங்களா? இதுதான் ஞானம். உண்மை பொருள் மெய்ப்பொருளை சிந்திக்க வேண்டும். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. மெய்ப்பொருள் என்றால் கண் ஒளி தான். இறைவன் துலங்க கூடிய இடம் தான் கண்ணை தான் மெய்ப்பொருள் என்பது..


ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
www.tamil.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts