வெள்ளி, 27 அக்டோபர், 2023



நூல் : சநாதனதர்மம் 19

🔥 இப்பிறவி ஆண்டவனை அடையவே! 🔥

இராமலிங்க சுவாமிகளை சத்குருவாக கொண்டுதான் அடியேன் வாழ்கிறேன்.


இராமலிங்க சுவாமிகள் உரைத்த திருவடி ஞானத்தைத் தான் எங்குரு ஜோதி இராமசாமி தேசிகர் எமக்கு உபதேசித்தார், தீட்சை வழங்கினார்.
 
கடந்த இருபத்தைந்து ஆண்டாக சாதனைகள் செய்து, இராலிங்க சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்டு கண்ணியனானேன் !
 
எமக்கு இராமலிங்க சுவாமிகளை சுட்டிக்காட்டி, உணர்த்திய ஞானசித்தர் திருச்சி ஜோதி இராமசாமி தேசிகர் அவர்கள் சமாதி கொள்ளுமுன் அடியேனை அழைத்து குரு பீடத்தை அளித்தார்கள்.
 
அடியேனை பக்குவபடுத்தி, முதல் 12 ஆண்டு முடிவில் " கண்மணி மாலை " எழுதி வெளியிட வைத்தார்கள் !
 
அடுத்த 12-வது ஆண்டிற்குள் என்னை குருபீடத்தில் இருத்தி விட்டார் வள்ளலார்."குச்சண்டி - குச்சண்டி" என்று பாபாவும் அருள்வாக்கு கூறினார்.

 பாலாவின் கோயிலிலேயே அடியேனை குருவாக அமர வைத்தனர்."வலிந்து என்னை ஆட்கொண்டார் வள்ளலார்"

இப்போது 5 வருடங்களாக குருவாக அமர்ந்து எல்லா ஞானிகளும் உரைத்த திருவடி ஞானத்தை உபதேசித்து வருகிறேன், தீட்சை வழங்கி வருகிறேன் இறைவன் அருளால் !

"எல்லாம் அவன் செயல்"
"பாட்டுவித்தால் பாடுகிறேன் பணிவித்தால் பணிகிறேன்"
 "என் செயலாவது யாதொன்றுமில்லை"
 அடியேனை குருவாக இருத்தி, உள் இருந்து தீட்சை வழங்குவதும் அவர்களே !
 சென்னையிலும் நெய்வேலியிலும் பலநூறு அன்பர்கள் அடியேனிடம் தீட்சை பெற்றுள்ளனர்.
 கன்னியாகுமரிக்கு வந்து அடியேனிடம் தீட்சை பெற்றவர்களும் பலர்.
 அடியேன் செய்த புண்ணியம் ! ஞானவான்களின் அருள் கிட்டி இன்று ஞானகுருவாக இருக்கிறேன் அவர்கள் இட்ட பணியை செவ்வனே செய்கிறேன். செம்மையாக செய்ய வைப்பதும் அவர்களே !
 
உலகோரே வாருங்கள் !
உபதேசம் பெறுங்கள் !
தீட்சை பெறுதல் அவசியம் !
 
அரிதான இப்பிறவி ஆண்டவனை அடையவே !
காலந் தாழ்த்தாதீர் கண் திறக்க வாருங்கள் !

குரு யார் என தேர்ந்தெடுப்பதில் பலருக்கும் குழப்பம்.


 🔴தன் ஜாதியில் உள்ள சாமியாரை போற்றுகிறது ஒரு கூட்டம்.

 🔵தன் மதத்தில் உள்ள சாமியாரை கொண்டாடுகிறது மற்றொரு கூட்டம்.

 🔴தன் மொழி பேசும் ஒருவனை பாராட்டுகிறது இன்னொரு கூட்டம்.

 🔵சிற்சில காரியங்கள் நடந்ததை வைத்து ஏமாந்து விடுகிறது பிறிதொரு கூட்டம்.

பணத்துக்காக ஒரு கூட்டம்
புகழுக்காக ஒரு கூட்டம்
நோய்நீங்க ஒரு கூட்டம்
பொழுது போக்கவும் ஒரு கூட்டம்

இப்படியாக உலக மாந்தர்கள் அறியாமையால் அங்கங்கே சிக்கி அல்லலுறுகிறார்கள் !
 ஏமாந்தவர்களை திட்டம் போட்டு ஏமாற்றும் போலிகள்தான் ஏராளமாக இருக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும்.அறியாமையில் உழலும் மக்களை மிருக நிலையில் வாழும் மக்களை திருத்தி மனிதனாக வாழ வைப்பதே ஞானிகளின் ஒரே செயல்.

அதற்கு அவர்கள் குருவை பற்றிக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!\
வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts