ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்

மந்திர மணி மாலை

"ஆயத்துள் நின்ற அறுசமயங்களுங்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே"
பாடல் - 1530 (pg-121)


வெறும் சடங்கு சம்பிரதாயங்களைக் கூறும் ஆயக்கட்டுகளான
அறு சமய நூற்கள் உலக மக்களுக்கு பிரயோஜனமில்லை! 
நேரம் போகாதவர்கள் பேசலாம் படிக்கலாம்!
இது போன்று இன்றைக்கு உருப்படாத சாமியார்கள்
பலர் உள்ளனர்! கேடு கெட்ட ஆசிரமங்கள் பல உள்ளன! கஷ்டம்!

காயமாகிய உடலில் நம் உயிராக இருப்பது அந்த இறைவன். பேரொளிதான் நம் கண் வழி தவம் செய்து காண முடியும் என்பதை அறியாதவர்கள் அவர்கள்!

கண்ணிருந்தும் குருடர்களே! அப்படிப்பட்ட அறிவிலிகள் மாயை எனும் மும்மல சகதியில் வீழ்வர்! வினையால் அலை கழிக்கப்படுவர்!வீடுவாசல் மனைவி மக்கள் என்று பாசம் வைத்து நாசம் அடைவர்!

அறியாமையில் ஊழலும் அவர் பதைபதைப்புடன் பரிதவிப்புடன் தான் வாழ்வர் நிம்மதி என்பதே இருக்காது!

உண்மை ஞானம் அறியாத வரைக்கும் சன்மார்க்க நெறி நடக்காத வரைக்கும் துன்பமே சோகமே அவர் வாழ்க்கை!

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts