புதன், 30 ஆகஸ்ட், 2023

🔥 பிறவி ? 🔥 நூல் : சநாதனதர்மம்



நூல் : சநாதனதர்மம் 1

🔥 பிறவி ? 🔥

மனிதனாக பிறக்கவே மாதவம் செய்திடல் வேண்டும் என்றார்கள்.
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பது ஒளவையார் வாக்கு.
மனிதனாக பிறந்த நாம்தானே மற்றெல்லா உயிர்களையும் அடக்கி ஆள்கிறோம்.
நாம் பிறந்த தேதி மாதம் வருடம் தெரியும் எங்கிருந்து பிறந்தோம் ?
தாயின் கருப்பையில் 10 மாதம் இருந்தது தெரியுமா நமக்கு ?

பிறந்து வளர வளரத்தானே ஒவ்வொன்றாக அறிகிறோம்.
தாய் தந்தை சுற்றம் உலகம் இப்படி ஒவ்வொன்றாக அறிந்து வளருகிறோம்.
அறிவிக்கப்படுகிறது. தெரிவிக்கபடுகிறது. சூழ்நிலையாலும் மாறுபடுகிறது.
அறிவிப்பவர் அறிவுக்கு தகுந்தபடி ! புகட்டப்படுகிறது. இவையெல்லாம் எப்படி நிகழ்கிறது ?
ஆணும் பெண்ணும் சேர்ந்தால் கரு உருவாகிறது !
உருவாகும் கரு எல்லாம் உருப்பெறுவது இல்லை !

கல்யாணமாகி குழந்தையில்லை என ஏங்குவோர் கோடி கோடியாக உள்ளனரே !
ஆணும் பெண்ணும் சேர்ந்தால் பிண்ட உற்பத்தி மட்டும் தான் !
உடல் என்னும் அற்புதமான இயந்திரத்தை உருவாக்கியவன் யார் ?
உடல் இயங்க அதற்கு உயிர் அவசியமல்லவா ? உயிரை கொடுத்தது யார் ?
மனிதனால் உயிரை கொடுக்க முடியுமா ? உயிர் என்றால் என்ன ?
கருவிலிருந்து வெளிவரும் குழந்தைக்கு உயிர் இருந்தால் தானே நாம் மகிழ்வோம்.

பிறக்கின்ற குழந்தை அழுதால் நாம் மகிழ்வோம் !
பிறக்கின்ற குழந்தை அழவில்லையெனில் நாம் அழுவோம் !
கருவிலே உருவாகும் பிண்ட உற்பத்தி, அதன்பின் உயிர் சேர்தல் எப்படி நடக்கின்றது ? யாரால் ?
உருவானால் !? பத்திரமாக வளர்க்கத்தான் நம்மால் முடியுமே தவிர உருவாக்க முடியாது !?
நமக்கு அப்பார்ப்பட்ட ஒரு சக்தி இதையெல்லாம் நடத்துகிறதல்லவா ?
அந்த சக்தி எது ? எதன் அடிப்படையில் நடக்கின்றது ?
இதற்கெல்லாம் விடை, உலகில் ஞானபூமியாக விளங்கும்
இந்திய நாட்டின் ஞானிகள் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.

இந்த உலகம் எப்போது தோன்றியதோ ! மனிதன் எப்போது தோன்றினானோ ?!
கணக்கிட முடியாத காலத்திற்கும் முன்னது இங்கே இருந்த ஞானிகள் வாழ்க்கை !
உபதேசம் ! நூல்கள் !

உலகமனைத்திற்கும்,,,
ஒரே நெறி ! ஒரே வாழ்க்கைமுறை ! ஒரே கடவுள் ! ஒரே பண்பாடு !

அதுவே "சநாதனதர்மம் !"
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts