செவ்வாய், 31 அக்டோபர், 2023

தனிஒருவன் மாறனும் ! - சநாதனதர்மம்

நூல் : சநாதனதர்மம் 20

🔥 தனிஒருவன் மாறனும் ! 🔥

 அறியாமையில் உழலும் மக்களை மிருக நிலையில் வாழும் மக்களை திருத்தி மனிதனாக வாழ வைப்பதே ஞானிகளின் ஒரே செயல். அதற்கு அவர்கள் குருவை பற்றிக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

நல்வழி காட்டும் நல்ல ஒரு குரு தேவை.
நன்னெறி நடத்தும் வல்ல ஒரு குரு தேவை.
ஞான குரு வேண்டும் !
இறைவனை உணர்த்தும் குரு வேண்டும் !

எவன் ஒருவன் பேதம் பார்க்கிறானோ
அவன் இறைவனை அடைய முடியாது !
எவன் ஒருவன் தீயபழக்கம் உடையவனோ
அவன் இறைவனை அடைய முடியாது !

எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணுபவன் எவனோ எல்லாவுயிரும் இன்புற்றிருக்க 
எண்ணுபவன் எவனோ எல்லாவுயிரிடத்தும் அன்பு காட்டுபவன் எவனோ 
அவனே இறைவனை அடைவான் !

அவனே ஞானவான் !

அரபியில் சொன்னாலும், ஹீப்ரூவில் சொன்னாலும், சமஸ்கிருதத்தில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் எல்லோராலும் சொல்லப்பட்டது - இறைவனைப் பற்றி மட்டுமே !

மொழியை பார்க்காதீர்கள் !
உபதேச மொழியை பாருங்கள் !?

இனத்தை நாட்டை பார்க்காதீர்கள் !
மனித இனம்தான் என உணருங்கள் !?

ஒவ்வொருவரும், நான் மனிதன் ! உலகிலுள்ள அனைவரும் என் 
சகோதர சகோதரிகள் என என்றைக்கு உணருகிறார்களோ அன்றுதான் உலகம் சுபிட்சமடையும் !

மதத்தை பரப்ப நினைக்காதீர்கள் !
மதம் எனும் ஆணவம் கொண்டு அலையாதீர்கள் மனிதனாக பாருங்கள் !

மனிதகுலம் தழைக்க பாடுபடுங்கள் !
எல்லோரிடமும் அன்பாக இருங்கள்.

🔥 இதெல்லாம் வர வேண்டுமானால் அதற்கு ஒவ்வொரு வரும் தன்னை 
உணர்வதுதான் ஒரே வழி ! இறைவனை உணர்வதுதான் !🔥

தனி ஒருவன் மாறினாலே, சமுதாயம் மாறும் !
திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

தனிமனிதன் மாறவே தவஞானிகள் அருள்புரிகிறார்கள். காப்பாற்றுகிறார்கள்.

நான் நல்லவனாக இருக்க வேண்டும் !
என எல்லோரும் எண்ண வேண்டுமே !? இதற்கெல்லாம் தான் குரு வேண்டும்!

உலகுக்கே ஆதி குரு முதல் குரு "ஸ்ரீ தட்சிணாமூர்த்தி"தான் !
இதுவே உண்மை !

அதன்பின் தந்தைக்கே உபதேசித்தான் தனயன் !? ஆறுமுகங் கொண்டவன் !

அகத்தியருக்கும் உபதேசித்தான் !

அருணகிரிக்கும் உபதேசித்தான் ! அழகனே !

இந்த வழிவந்த, வாழையடி வாழையென வந்தவர்தான் 
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts