"முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறனெறி நாடில்"
திருமூலர் பாடல் - 20
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த ஒவ்வொரு மனிதனும் என்று பிறக்க வேண்டும் எப்படி அதன் முடிவு அமைய வேண்டும் என்பதை முன்னரே வகுப்பவன் யாராக இருக்க முடியும்? எல்லாவற்றையும் நடத்துபவன் இயக்குபவன் தானே இறைவன்! இதுவே தேவ இரகசியம்! நாம் என்று? எங்கு? யாருக்கு? பிறக்க வேண்டும் என தீர்மானித்து நம்மை இந்த உலகில் பிறப்பிக்க அருள்பவன் இறைவன் அல்லாமல் வேறு யார்? அடிகள் உறையும் அறனெறி நாடு - அடிகள் - திருவடிகள் இறைவனின் திருவடிகள் தான் நம் கண்கள் என பற்பல ஞானிகள் பகர்ந்துள்ளனர். வேதங்களும் அவ்வாறே கூறுகின்றன. அங்ஙனம் திருவடியாகிய நம் கண்களில் உறையும் ஜோதியை உணர்ந்து தவம் செய்வதே உத்தமம்! கண்களில் ஜோதி இருப்பதை உணர்ந்து அதை நினைத்து உணர்ந்து நெகிழ நெகிழ தவம் செய்வதே தூய நெறி என அற நெறி என இறைவனை அடைய வழி காட்டும் ஒப்பற்ற வழி நெறி என்று திருமூலரும் தெளிவாக உரைக்கின்றார்.
"தொடர்ந்து நின்றானைத் தொழுமின்"
திருமூலர் பாடல்-26
நாம் எத்தனை பிறவி எடுத்தோமோ தெரியாது? பிறவி தோறும் நம்மோடு உடனிருந்தவன்! தொடர்ந்து ஒவ்வொரு பிறவியிலும் நம்முடனேயே நம் உடலுள்ளேயே நம் உயிராக இருந்தவன் அவன் தானே! அந்த இறைவன் தான்! எல்லா பிறப்பிலும் நமக்கு உற்ற துணை பரம் பொருளான நம் உயிர் அல்லவா? அதை தொழ வேண்டாமா? அதை அறிய, வேண்டாமா? இப்பிறப்பிலுள்ள அப்பா அம்மா மனைவி மக்கள் சொந்தம் பந்தம் நட்பு எதுவும் நம்முடன் இல்லை! அப்பன் எத்தனை அப்பனோ? அம்மை எத்தனை அம்மையோ இன்னும் எத்தனை பிறவியோ, முன்னும் எத்தனை ஜன்மமோ? யாரறிவார்? ஒன்றுமட்டும் உண்மை எல்லா பிறவியிலும் உயிராக இருந்தது இறைவன் தானே! அப்படியானால் எல்லாம் அவர் அறிவார் அல்லவா? அவரை சரணடைந்தால் நாம் உண்மை அறிய முடியுமல்லவா? எல்லாம் அறிந்த அவரால் நம்மை வழி நடத்த முடியும்? அந்த பரம்பொருளை சரணடைந்தால் தானே நாம் உருப்பட முடியும்! உன்னுள் இருக்கும் ஒண்பதத்தை தொழு! நீ கதி மோட்சம் பெற இது ஒன்றே வழி!
(ஒண்பதத்தை தொழு!)
இறைவன் திருவடியாக விளங்குகின்ற நமது கண்மணியில் உணர்வுடன் தவம் செய்.
ஞான சற்குருவின் திருவடியே சரணம் 🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக