செவ்வாய், 5 செப்டம்பர், 2023

🔥 பிறவிக்கு வித்து எது ? 🔥 நூல் : சநாதனதர்மம்

நூல் : சநாதனதர்மம் 4

🔥 பிறவிக்கு வித்து எது ? 🔥

அங்கமதில் முதல்முதலாய் தோன்றிய தலம் எது ? அதை சொல்லி, அதில் உயிர் இருக்கும் தன்மையை சொல்பவனே உண்மையான குரு என அகஸ்தியர் கூறுகிறார்.

தாயின் கருப்பையிலே முதன்முதலாக உருவாவது கண். தந்தையின் சுக்கிலமும் தாயின் சுரோணிதமும் சேரும்போது முதலில் உருவாவது ஒரு கண்.

அது இரண்டாகி இரு கண்களாகிறது. சுக்கில சுரோணித ஒளியே இருகண்களில் துலங்கி, அந்த ஒளியே வெதுப்பி வெதுப்பி பிண்டம் வளருகிறது.
பிண்ட உற்பத்தி ஓரளவு வளர்ச்சியடைந்த பின்னரே,
உயிர் வினையால் மூடப்பட்டு இறைவனால் உடலில் சேருகிறது.

பிறப்பின் இரகசியம் இதுவே !?
உடல் வளர்ந்து உயிர் சேர்ந்த பின்னரே மனிதன் பிறக்கிறான் வினைகளுக்கு தகுந்தபடி !
பிறவிக்கு வித்து கர்மவினைகளே !
கர்ம வினைகள் இருக்கின்றவரை பிறவி உண்டு !
பிறப்பு நிகழக் கூடாதென்றால் கர்மவினை இருக்கக்கூடாது !

வினையால் உயிர் பிறக்கிறது !
பிறப்பறுக்க வந்ததுவே இம்மானிட பிறவி !
ஏன் பிறந்தோம் ? இனி பிறவாமல் இருக்க !

பிறப்புக்கு காரணமான வினைகளை தெரிந்து அதை இல்லாமலாக் குவதே சாதனை !

வினைகளை அழிக்க வேண்டுமாயின், அதை கொடுத்த உயிரான அந்த இறைவனை சரண் அடைவதைத்தவிர வேறு வழிகிடையாது !?

எல்லாம்வல்ல, எங்கும் நிறைந்த சர்வமுமான அந்த இறைவனே ஊசிமுனை அளவு நெருப்பாக - ஜோதியாக - நம் உடலில் கண்களில் உயிராக துலங்கு கின்றான் !

ஞானிகள் உரைத்த சத்திய வார்த்தை இது !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
வள்ளல்பெருமான் மலரடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts