ஞாயிறு, 18 ஜூன், 2023

காமத்திலிருந்து எப்படி மீள்வது?


காமம் படர்நெஞ் சுடையோர் கனவினும் காணப்படா... பாடல் 9

காமமாகிய பேய் பிடித்தாட்டும் மனிதனுக்கு கனவிலும் காணக்கிடைக்காது அம்பிகை வடிவம்! மாயை - மகாமாயைதான் காமமாதிய துர்க்குணங்களை வினைப்படிதந்து நம்மை ஆட்டுவிக்கிறாள்!? காமத்தை ஆட்சி செய்பவளே அம்பிகைதான்! அதனால்தான் அவளை காமாட்சி என்றனர். காமமில்லாத மனிதனே இல்லை! காமத்திலிருந்து எப்படி மீள்வது? இந்த உலகத்திலேயே யாருக்காவது தாயிடம் காமம் வருமா? எந்த ஒரு பெண்ணையும் தாயாக பார்த்தால் காமம் வராதே!? எல்லா பெண்ணையும் தாயாக பாருங்கள்! அம்பிகையின் வடிவமாக பாருங்கள்! அபிராமி பட்டர் எல்லா பெண்ணையும் அபிராமியாகவே பார்த்தார். அதனால் தான் அமாவாசை அன்று நிலவை காட்டினாள் அம்பிகை. மகா கவி காளிதாசனும், தனக்கு காளியருள் கிடைக்க காரணமான மனைவியையே தாய் என்று அழைத்தான். மகாகவி காளிதாசனுக்காகவும் அமாவாசை அன்று நிலவை காட்டினாள் காளித்தாய்!

ஒரு வயது பெண்ணையும் அம்மாதாயே என்றுதான் அழைக்கணும்! 16 வயது பருவப்பெண்ணையும் அம்மாதாயே என்றுதான் அழைக்கணும்! எந்தப்பெண்ணையும் அம்மா என்றே பார்த்தால், அம்பிகையின் அருள்கிட்டும். காமத்திலிருந்து மீளலாம்! அம்மா தாயே நீயே சரணம் என அம்பிகையின் பாதத்தில் சரணடைந்தால்! அந்த தாய் இந்த பிள்ளையை காத்தருள்வாள்!

இந்த உடலை கொடுத்த தாய் தானே நமக்கு பாலூட்டி சீராட்டி வளர்ப்பாள்! இந்த உடலுக்குள் இருக்கும் உயிர் கொடுத்ததாய் இறைவியே அமுதூட்டி உயிர் வளர்ப்பாள்!? பின்னர்தான் பரம்பொருள்! முக்திகிட்டும்!

தாயைப் பணியாதவன் தறுதலையாவான்! தாயை பணிந்தால், தாயைப்போல் நம்மை அரவணைப்பவர் இவ்வுலகில் வேறு யார் உளர்?! தாயில்லாமல் நானில்லை! யாருமில்லை!? தாயின் மகத்துவம், பெருமை அறிந்தவனே ஞானம்பெறுவான்!

திருஞான சம்பந்தருக்கு 3 வயதில் அமுதூட்டிய தாய்! வள்ளலாருக்கு அண்ணி உருவில் வந்து அமுதூட்டியதாய்! எல்லா சித்தரும் ஞானியரும் போற்றும் தாய் "வாலை! இந்தியாவின் வடக்கே காஷ்மீரிலே வைஷ்ணவி தேவியாய் வாலை! இந்தியாவின் கிழக்கே கல்கத்தாவில் காளியாய் வாலை! இந்தியாவின் மேற்கே பம்பாயில் லட்சுமியாய் வாலை! இந்தியாவின் தெற்கே கன்னியாகுமரியில் கன்னியாகுமரியாய் வாலை! எங்கெங்குகாணினும் சக்தியடா! தாய்ப்பால்தானே பிறந்த குழந்தைக்கு சிறந்தஉணவு! இனி பிறவாமலிருக்க "வாலை" தரும் அமுதம் பருகவேண்டும்! எல்லா

பெண்களையும் தாயாக பார்த்து, வாலையை பணிந்து பக்தியுடன் தவம் செய்தால் கிட்டும் வாலை தரிசனம்! தருவாள் அமுதம்! முக்தியை தர சக்தியின் அருளே அவசியம் தேவை! பிறந்த குழந்தைக்கு தேவை தாய்ப்பால்! இனி பிறவாமலிருக்க நமக்கு தேவை வாலை அமுதம்!

எல்லாம் வல்ல மகாமாயை, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, எவ்வுயிர்க்கும் தாய், ஆதிசக்தி "வாலை" எண்ணிலா ஊர்களில் கோயில் கொண்டிருந்தாலும், பற்பல பெயர்களில் உருக்கொண்டிருந்தாலும் வாலை வாலையாகவே கோயில் கொண்ட புண்ணியதலம்தான், முக்கடலும் சங்கமிக்கும் இந்தியாவின் தென்கோடிமுனையான கன்னியாகுமரி!

அடியேனை இங்கே வரவழைத்து வாழ்வு தந்து குருவாக்கி காட்சி தந்து அருள் புரிந்து படியளக்கும் தாய் கன்னியாகுமரி "வாலை!" இதுவரை இவ்வுலகில் எல்லோராலும் மறைத்து இரகசியம் என்று சொல்லப்பட்ட ஞானத்தை வெட்ட வெளிச்சமாக்கி 26 நூற்களில் ஞானரகசியங்களை வெளிப்படுத்தவைத்து வெளியிடவைத்து

என்னை எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறாள் "வாலை"! வாலையின் பாதத்தில் சரணடைந்ததால் புண்ணியம் பெற்றேன்! கண்ணியனானேன்!

அந்த வாலைத்தாயை நீங்களும் காணவேண்டாமா? வாருங்கள் கன்னியாகுமரிக்கு! வாலை அருள்பெறலாம்! வரம்பல பெறலாம்! வாழ்வாங்கு வாழலாம்!


🙏 ஓம் ஶ்ரீ சிவ செல்வராஜ் அய்யா திருவடிகளே சரணம் 🙏

திருவருட் பாமாலை- பக்கம் 44 - 45


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts