செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

இனி எப்பிறவி வாய்க்குமோ?

மனிதனாக பிறந்த நீ இப்பிறவியிலாவது என்னை வந்து
அடைகிறாயா பார்ப்போம் இறைவன் நமக்கு கொடுத்த வாய்ப்பு
இம்மானிட பிறவி!

இப்பிறவி தப்பினால் இனி எப்பிறவி வாய்க்குமோ??
மனிதா! இப்பொழுதாவது விழித்தெழு!

----------------------------------------------------------------------------------------


*"இருக்கின்ற மந்திரம் சிவன் திருமேனி"*
நமது தலை நடு உள் இருக்கின்ற ஒளியே சிவத்திருமேனி அதுவே மந்திரமாகும்!
*மனம் திரங்கொண்டாலே அடையமுடியும்!*

மனம் திரமாக திடமாக திருவடியில் இருந்தாலே மந்திரம் சிவம் ஒளி கைக்கூடும்!
மந்திர சித்தியாகும்!
----------------------------------------------------------------------------------------
"பத்து முகமுடையாள் நம் பராசக்தி"
பத்தாகிய ஆத்மஸ்தானத்தை அடைந்தபோதே தாயை பரத்துடன் சேர்ந்த சக்தி பராசக்தியை காணலாம்!
பத்தாமிடம், எட்டும்(வலது கண்) இரண்டும்(இடது கண்) சேர்ந்தாலே அடையும் இடம்!

அதைத்தான் *பத்து முகம் கொண்டவள் பராசக்தி என்றார் திருமூலர்!*

----------------------------------------------------------------------------------------




-ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts