மனிதனாக பிறந்த நீ இப்பிறவியிலாவது என்னை வந்து 
 அடைகிறாயா பார்ப்போம் இறைவன் நமக்கு கொடுத்த வாய்ப்பு 
இம்மானிட பிறவி!  
 இப்பிறவி தப்பினால் இனி எப்பிறவி வாய்க்குமோ??
மனிதா! இப்பொழுதாவது விழித்தெழு!  
 ----------------------------------------------------------------------------------------  
 *"இருக்கின்ற மந்திரம் சிவன் திருமேனி"* 
 நமது தலை நடு உள் இருக்கின்ற ஒளியே சிவத்திருமேனி அதுவே மந்திரமாகும்! 
 *மனம் திரங்கொண்டாலே அடையமுடியும்!*  
 மனம் திரமாக திடமாக திருவடியில் இருந்தாலே மந்திரம் சிவம் ஒளி கைக்கூடும்! 
 மந்திர சித்தியாகும்! 
 ---------------------------------------------------------------------------------------- 
 "பத்து முகமுடையாள் நம் பராசக்தி" 
 பத்தாகிய ஆத்மஸ்தானத்தை அடைந்தபோதே தாயை பரத்துடன் சேர்ந்த சக்தி பராசக்தியை காணலாம்! 
 பத்தாமிடம், எட்டும்(வலது கண்) இரண்டும்(இடது கண்) சேர்ந்தாலே அடையும் இடம்!  
 அதைத்தான் *பத்து முகம் கொண்டவள் பராசக்தி என்றார் திருமூலர்!*  
 ----------------------------------------------------------------------------------------     
 -ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா  
www.vallalyaar.com