புதன், 14 டிசம்பர், 2011

கந்தகுரு கவசம்-திருவடி

கந்தகுரு கவசத்தில் எனக்கு புரிந்த ஞான குறிப்புகள்.

ஒலி வடிவில் கேட்க...இங்கே சொடுக்கவும்


திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
கஞ்சமலை(சேலம்) சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
பழனியில் நீயும் பரம்ஜோதி ஆனாய் நீ
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக .
பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts