ஞாயிறு, 11 டிசம்பர், 2011

மூன்றாவது கண் எது?

 லாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம்
ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும்
சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒரு வண்ண ஜோதி சூழ்ந்திருகிறது
இதை மூன்றாவது கண் மூலம் காண இயலும் என்பது அந்த
நூலின் மைய கருத்து.


இரு புருவ நடுவிலும் உள்ள நெற்றியில் ஒரு ஆப்பை அடித்து அதற்கான
மருத்துவ சிகிச்சை செய்து புண் ஆரிய பின்பு அந்த ஆப்பை சுழற்றி
கொண்டு விடுவதே மூன்றாவது கண்ணை திறந்து விட்டதாகவும் என்பது
அந்த நூலில் குறிப்பிட பெற்றிருக்கிறது. ஆனால் அதை விஞ்ஞான
பூர்வமாகவோ மெய்ஞான பூர்வமாகவோ நம்ப முடியாது. நமது
தென்னாட்டு சித்தர்களும் வடநாட்டு மகரிஷிகளும் இப்படி மூன்றவது
கண்ணை திறந்துகொள்ளவில்லையே!

வள்ளலார் இப்படியா நெற்றிக்கண்ணாகிய மூன்றாவது
கண்ணை திறந்து கொண்டார்!
இறைவனுக்கு முக்கண்ணன் என்றும்
நெற்றிகண்ணன் என்றும், கண்ணன் என்றும் பெயர். இவை உண்மைப் பெயர்களே.


இந்த மூன்றாவது கண்ணின் ரகசியம் குரு மூலமாக தெரிந்து கொள்ளவேண்டியது.


நெற்றிகண் ஆப்பு அடித்து திறப்பது இல்லை. மெய் ஞானிகள் யாரும் இப்படி
கூறவே இல்லை. விஞ்ஞானிகளும் இப்படி கூறவில்லை. எதற்காக
திபேத்தியே லாமா இப்படி கதை கட்டியிருக்கிறார் என்பது புரியவில்லை.

மெய்ஞானியான திருவள்ளுவர் தன் நாதாந்த திறவுகோலில் மூன்றாவது கண்
குருவினால் திறந்து கொள்ளவேண்டும் என்பதை

உச்சியினி டமாம் நின்றவுதயமா சோதிபாதம்
நச்சியேயிருப்பானந்த நாதாந்த வெளியில் தானே
வச்சிரவெளியானந்த வாசியாலடர்ந்த வன்னி
குச்சியாலுச்சாத்தனை குருவினாற் திறந்து கொள்ளே!

சிவவாக்கியர்
அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.

காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.


உதிக்கநின்றது எவ்விடம்? ஒடுங்குகின்றது எவ்விடம்?
கதிக்கநின்றது எவ்விடம்? கண்ணுறக்கம் எவ்விடம்?
மதிக்கநின்றது எவ்விடம்? மதிமயக்கம் எவ்விடம்?
விதிக்கவல்ல ஞானிகள், விரிந்துரைக்க வேணுமே.

வள்ளலார்
கையறவிலாது நடுக் கண் புருவப் பூட்டு
கண்டு களி கொண்டு திறந்துண்டு நடுநாட்டு
ஐயர் மிக உய்யும் வகை அப்பர் விளையாட்டு
ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.


என்று ஞானிகளின் பரிபாஷையால் கூறி சென்றார். லாமா சொல்லி இருப்பது
உண்மை ஆனால் எத்தனையோ டாக்டர்கள் மூன்றாவது கண்ணை திறந்து
இருப்பார்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts