செவ்வாய், 20 டிசம்பர், 2011

தலைக்கு அடி - திருவடி கண்கள் !

தலையடி யாவ தறியார் காயத்தில்
தலையடி உச்சியில் உள்ளது மூலந்
தலையடி யான அறிவை அறிந்தோர்
தலையடி யாகவே தானிருன் தாரே -

நமது காயத்தில் - உடம்பில் தலைஎது கால் எது - அடி எது
என தெரியாமல் இருக்கிறார்கள்! எண்சாண் உடம்புக்கு சிரசே
பிரதானம் ! சிரசே பஞ்சேந்திரியங்கள் உள்ள முக்கியமான பகுதியாகும்!
நம் தலையே நம் உடம்பில் தலையாய இடமாகும்!

நம் உயிர் இருப்பது தலை உள் நடுவில் தான்! பரம்பொருளே நம்
ஜீவாத்மாவாக நம் சிரநடுவில் ஒளியாக துலங்குகிறார். ஞானத்திற்கு
நாம் பார்க்க வேண்டியது தலையில் மட்டுமே! மூலம் எது ? எங்கிருக்கிறது
என்றால் "தலையடி உச்சியில் உள்ளது மூலம்"

தலைக்கு அடி - திருவடி -கண்கள் ! அதன் உச்சி என்பது என்பது அதன்
மத்திய பகுதி. அங்குள்ளதே மூலம்! கண்மணி மத்தியில் மூல துவாரம்
உள்ளது. அதனுள் ஊசிமுனை அளவு நெருப்பு உள்ளது. அதுவே மூலம்!
ஆதி மூலம்! கண்மணி மத்தியில் உள்ள ஒளி ! தலைக்கு அடி -
திருவடியானது நம் கண்களே என்பதை ஞான சற்குருவின் மெய்பொருள்
உபதேசம் மூலம் அறிந்தோர் தலையடி - கண்மணியிலுள்ள ஒளியாகவே
தானிருந்தார்! ஆத்மா ஜோதியாகவே இருந்தார் அறிந்தார்!

"உலகம் படைத்தவன் பேர் நந்தி தன்தாளினை
என் தலைமிசை யானதே"

இந்த உலகத்தை படைத்தவன் இறைவன் ! அவன் தான் ஜீவனாக
நம் தீயாக நம்முள் துலங்குகிறான்! அந்த நந்தியின் இரு திருவடிகளும்
நம் தலையில் உள்ளது ! இருகண்ணாக!

-மந்திரமணி மாலை - 191

4 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இராமலிங்க அடிகள் உலக மக்களை மரணமில்ல பெருவாழ்வை அடைய அழைத்தார். பல சித்தர்
    பாடல்களில் திருவடி யை வெளிப்படையாக சொல்லி உள்ளார்கள்....

    பதிலளிநீக்கு
  3. யோவ் சாமி அலகப்பன் போதும் யா.....மறை பொருள் வெச்சுண்டு என்னத புடிங்கினாறு உன் குரு??????போடங்கோ......உன்ன மாதரி ஆளுங்க தான் யா குடுக்க குடுக்க கூடாது..........தேடி தேடி அலைந்து வர்களுக்கு ஆண்டவன் எல்லாம் குடுப்பான் யா......

    பதிலளிநீக்கு
  4. யோவ் அலகப்பன்.....ராமலிங்க சுவாமிகள் ஒரு சித்தர் யா....அவரே வழி ய சொலிட்டாறு...நீ யாருய்யா தடுப்பதற்கு........எந்த சித்ததர் உனக்கு வாக்கு குடுத்தாரு.....அதை இங்கு தெரியபடுதுயா.........நீ மட்டும் ஞானம் அடைஞ்சு ..உனக்கு பின்னாடி நூறு கூட்டம் ஜால்ரரா அடிக்கனம்......அதுக்கு தானே சண்டை போடற.......

    பதிலளிநீக்கு

Popular Posts