வெள்ளி, 17 அக்டோபர், 2025

“எழுத்தறிவித்தல்” உத்தமமான காரியம் !

இறைவன்🔥 மெய்ப்பொருளாக நம் உடலிலே இருப்பதையும் அதை அடைய👁️🔥👁️ கண் ஒளி மூலம் தவம் செய்ய வேண்டும் என்பதையும் எல்லோருக்கும் உரைப்பதே ஞானதானம்!

ஒளவையார் கூறிய, "தானமும் தவமும் தான் செய்தல் அரிதே" என்பது இந்த ஞானத்தை கூறுவதும், மெய்ப்பொருள்👁️🔥👁️உணர்ந்து தவம் செய்வதுமேயாகும்!

இதை தான் வள்ளலார், ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்" என்றார்.

இதையேதான் மகாகவி பாரதியாரும், " அன்னசத்திரம் ஆயிரம் கட்டலைவிட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்று" என்று அழகாக கூறியிருக்கிறார் !

ஒரு அன்னசத்திரம் கட்டி ஆயிரம்பேர்களுக்கு அன்னதானம் கொடுக்கலாம் ! ஆயிரம் அன்னசத்திரம் கட்டினால் பத்துலட்சம் பேர்க்கு அன்னதானம் கொடுக்கலாமல்லவா ?

இது ஒன்றும் பெரிய விஷயமல்ல !? இதைவிட மேலானது என்ன தெரியுமா ?

பல லட்சம் பேர்களுக்கு அன்னதானம் கொடுப்பதை விட ஒருவனுக்கு “எழுத்தறிவித்தல்” உத்தமமான காரியம் !

👁️🔥👁️

எது எழுத்து ? 👁️அ, உ👁️ ஆகிய எட்டும் இரண்டுமே எழுத்து - ஞான எழுத்தாம் ! இந்த ஞான எழுத்தை அறிவிப்பதே, ஞானதானம் செய்வதே அரிதினும் அரிதாம் !

மனிதனாக பிறப்பது,நல்லபடியாக பிறப்பது,
ஞானக்கல்வி அறிவது உணர்வது ஞானதானம் செய்வது

இதை தான் அரிதினும் அரிதாக சொல்கின்றனர் எல்லா ஞானிகளும்! ஞானதானமே, அரிதினும் அரிதான, அதி உன்னதமான தானத்தில் சிறந்த அன்னதானத்தை விடவும் சிறந்தது ஆகும்.

பக்கம் - 71,72

உலக குருவின் திருவடிகளே சரணம்

ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்







www.vallalyaar.com

வியாழன், 16 அக்டோபர், 2025

ஞானதானம் செய்

ஞானம் பெற பக்தி வேண்டும்! பரிபூரண நம்பிக்கையுடன்,
வைராக்கியத்துடன்,தவம் செய்ய வேண்டும் ! பக்தி,யாரிடமாவது காட்டு!

அப்போது தான்,நீ பண்படுவாய்! பக்தியில்லையேல்,ஞானம் இல்லை !
குருவிடம் பக்தி 🔥செலுத்து ! உருப்படுவாய்! எப்படியோ,

🔥பக்தி வேண்டும்! அதுதான்,உனக்கு பணிவை கொடுக்கும்! ஒழுக்கத்தை கொடுக்கும்!

நல்ல நெறியோடு வாழ்வாய்! இறைவனின் பெரும் புகழை,

மனமுருகி பாடு! ஆடு!

👁️🔥👁️ இறைவனைப் பற்றி, உலகுக்கு எடுத்துக்கூறு !

✨ஞான தானம் செய்!✨

இறைவன்- ஒவ்வொரு மனித உடலிலும், உயிராகவே ஆத்ம ஜோதியாகவே தங்கஜோதியாகவே அருட்பெருஞ்ஜோதியாகவே துலங்குகிறான் என்பதை உலகுக்கு எடுத்துக்கூறு,

இதுவே ஞானதானம் ! இதை விளக்கும், மெய்ஞ்ஞான நூற்களை தானம் செய்!

- பக்கம் 66,67.

உலக குருவின் திருவடிகளே சரணம்
ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்

திங்கள், 13 அக்டோபர், 2025

விழியை தூண்டி உணர்த்துபவர் - குரு



🔥திருமந்திரம் 2854 - ஞானவிளக்கம்🔥

" நோக்குமின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது "


நோக்குங்கள் எதை - நோக்கப்படும் பொருளை !
எதால் பார்க்கிறோமோ அதை பாருங்கள் !
அது மிக மிக நுண்ணிய பொருள் !
எதால் பார்க்கிறோம் ?

கண்ணால்தானே பார்க்கிறோம் !
கண்ணை பார்க்கணும் அதுதான் ஞானம் !
கண்ணாடியில் பார்க்கலாம் என்பீர் !

புறத்தே பார்ப்பதல்ல ?!
கண்ணை நாடி பார்த்தால் நம் கண்ணே ஒரு கண்ணாடிதான் !
பளப்பளப்பான பளிங்கு கண்ணாடிதானே நம் கண்கள் 

நம் கண்களால் பிரபஞ்சத்தையே பார்ப்பதுபோல நம் கண்களை 
என்று காண்கிறோமோ அன்றுதான் ஞானம் பிறக்கும் ! அவனே ஆத்ம சாதகன் !

அதற்குரிய உபாயம் சொல்லித் தந்து வழிகாட்டுபவர் 
விழியை தூண்டி உணர்த்துபவர்தான் குரு !
பாருங்கள் விழித்திருந்து !



இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வெள்ளி, 10 அக்டோபர், 2025

🔥திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம்🔥



🔥திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம்🔥

"அழுமடி யாரிடை யார்த்துவைத்
தாட்கொண் டருளியென்னைக்
கழுமணி யேயின்னுங் காட்டு"

ஞான விளக்கம் :

மாணிக்கவாசகர் ஒவ்வொரு பாடலிலும் தெளிவாக கூறுகிறார் !
அடியார் என்பவர் அழுபவரே!

"அழுதால் பெறலாம் உன்னை” என்று அதனால்தான் பாடி அருளினார் !
அப்படிப்பட்ட மெய்ம்மையார், அழும் அடியார்களோடு என்னை சேர்த்து வைத்து ஆட்கொண்டு அருளினாய் !

அழும் அடியார்களே ஞானதவம் செய்து இறைவனை அடைவர் !

அழுது அழுது கண்ணீரால் என் மணியை கழுவி நன்றாக கழுவி என் அழுக்கையெல்லாம் - மும்மல அழுக்கையெல்லாம் நான் போக்க வேண்டும் இறைவா அருள்புரி !

பக்தியில் கோவிலில் சிவனுக்கு நன்னீரால் கங்கையால் அபிஷேகம் !

ஞானத்தில் உடலில் கண்ணாக சிவனுக்கு கண்ணீரால் அபிஷேகம் ! கண்ணீரால் சிவனை கழுவி கழுவி நம் பாவ வினைகளை நீக்கி நாம் பரிசுத்தமாவோம் !

நம் பாவம் கரைய கரைய உள்ளிருக்கும் பரமன் அருள் கொஞ்சங் கொஞ்சமாக பெருகும் !

அழு ! நன்றாக அழு ! மணியை கழுவு !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

திங்கள், 6 அக்டோபர், 2025

🔥 திருவெண்பா - திருவாசகம் 🔥



🔥 திருவெண்பா - திருவாசகம் 🔥


"வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகாது என்செய்கேன் - செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து"



இறைவன் திருவடித் தாமரையாகிய நம்கண்களில் மணியில் உணர்வோடு தவம் செய்து உள்ளொளி பெருகினால் கொடிய வினையிரண்டும் அந்த தீயால் வெந்து அகன்றுவிடும் !
அப்படியானால் வினையிரண்டும் கண்மணி அருகில்தானே முன்னே உள்ளது ?!

இதுதான் ஞான இரகசியம் !
அந்த தீயில் என் மெய்யுருகி - உடலும் உருகிவிடும் !
ஆனால் பொய்யான உடல் தீயில் போட்டால் எரிந்து சாம்பலாகி விடும் !

இங்கே மெய்யுருகி பெருகும் தீயால் - சுத்த உஷ்ணத்தால் ஊனுருகி எலும்பும் உருகி கரைந்து நம் ஒவ்வொரு நாடி நரம்பும் ஒளிமயமாகி ஒளிருமேயல்லாமல் ஒளியால் எரிந்து சாம்பலாகாது !

இதுவே ஞான இரகசியம் !

சாதாரண தீ அனைத்தையும் பஸ்பமாக்கிவிடும்,
இறைவனாகிய பேரொளி நம்மை ஒளிமயமக்கிவிடும் ! இறைவனாகவே மாற்றிவிடும் !

நாம் செய்யவேண்டியது என்னவெனில் இறைவன் ஒளியாகி திகழும் பெரிய துறையாகிய இரு கண்மணியில் நம் மனதை வைத்து உணர்ந்து நெகிழ்ந்து சும்மா இருக்க வேண்டும் இதுவே ஞானதவம் ! செய்தால் இறைவன் காட்சி கிட்டும் உள்ளே போகலாம் அமுதம் சாப்பிடலாம் ! பேரின்பம் பெறலாம். முக்தியடையலாம் ! அந்த ஒப்பற்ற தேனமுது தரும் இறைவனை மனதால் தழுவாமல் சேராமல் இருந்து விட்டேனே என்கிறார் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

சனி, 20 செப்டம்பர், 2025

அருள் வெளிப்படுவது கண்ணில்



"அருளெங்குங் கண்ணான தாரறிவாரே"


ஞானவிளக்கம் :

அருள் வெளிப்படுவது கண்ணில்தானே !
அன்பு வெளிப்படுவது கண்ணில் தானே !
கருணை வெளிப்படுவது கண்ணில் தானே !
காமகுரோதாதி எல்லாமே கண்ணில்தானே வெளிப்படுகிறது !

கண் பார்ப்பதால் தானே எல்லா செயலும் வினையும் நடக்கிறது !
கண்ணால்தானே எல்லாம் நடக்கிறது.
நமது கண் ! உலக மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியே கண்மணி உள்ளது !
கோலிகுண்டு போல, பூமியைப்போல உருண்டு திரண்ட சதைக்கோளமே கண்மணி !

உலகிலுள்ள 700 கோடி மக்களுக்கும் ஒரே மாதிரி இருக்கும் இந்த கண்மணியின் மத்தியில்தான் ஒளியாக இறைவன் துலங்குகிறான் !

இந்த ஒத்து இருக்கும் கண்ணை அறிந்தவனே உத்தமன் !

மற்றவன் செத்தவன் !
ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கண்ணாடி கண்டு தொழுதால் கலிதீரும் - பீரப்பா

  கண்ணாடி கண்டு தொழுதால் கலிதீரும்

                 பக்கம் -44.

முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து கும்பிட்டால் துன்பம் எல்லாம் போய்விடுமா?அப்படிதான் பலரும் கண்ணாடியை வைத்து பூஜித்தும் வருகிறார்கள்! பக்தி முத்தி போய்விட்டது!

பீரப்பா சொல்வது நம் கண் ஆடியை கண்டு தொழுக என்பதாகும்! நம் கண்களில் ஆடிக்கொண்டிருப்பது ஜோதி தானே! அந்த ஜோதியை கண்டு தொழ வேண்டும் என்கிறார்! அப்படி ஜோதியை கண்டவர்க்கு பாவம் புண்ணியம் என்ற இரு வினைகள் - கலிதீரும் என்கிறார்!இதுவே ஞானம்!

தண்ணாடி  - தன் ஆடி, யாவணியுந் தானாடி - அ உள்ள தான் ஆடி, - அதாவது வலது கண் அதாவது சூரிய கலை.☀️அதில் நின்ற ஒரு - அதன் மூலம் நாம் அடையக்கூடிய விண்ணாடி விண்ணில் ஆகாயத்தில் ஆடிக்கொண்டிருக்கும் பேரொளியை நாம் காண துடிக்கிறோமே!? அதற்கு ஒரே வழி நம் கண்ணில் ஆடிக்கொண்டிருக்கும் நம் ஆத்ம ஜோதியை முதலில் காண்பது தான்!

இதுதான் ஒரே வழி இறைவனை காண இறைவனை அடைய ஒரே மார்க்கம் இதுதான்! இதல்லாமல் வேறு எல்லாம் வீண் பேச்சு! ஒரு பலனும் இல்லை என பீரப்பா கூறுகிறார்கள்.

நமது தமிழ்நாட்டில் உள்ள எல்லா கோவில்களிலும் கண்ணாடி உண்டு! கர்ப்பகிரஹத்தில் இறைவனுக்கு தலைக்கு பின் ஒரு ஜோதி ஏற்றி கண்ணாடி மூலம் பல ஜோதியாக தெரியும் படி வைத்திருப்பார்கள்.ஒரு ஜோதி தான் பல பல ஜோதியாக நமக்குத் தெரிகிறது! இறைவன் ஒருவரே அவர்தான் பற்பல விதமாக தெரிகிறார் என்ற தத்துவத்தை விளக்கத் தான் அந்த ஜோதி! கோவிலுக்குள் செல்லும் நாம் எந்த கோவிலுக்குள் சென்றாலும் இந்த ஒரே இறைவன் தான் பற்பல ஜோதியாக உள்ளான் என்ற தத்துவத்தை நாம் காணலாம்! கண்டு பின் திரும்பும் போது மூலஸ்தானத்திற்கு எதிரில் பெரிய நிலைக்கண்ணாடியை நாம் காணலாம்! ஏன் அர்ச்சகர் தரும் விபூதியை பார்த்து சரியாக பூசிக்கொள்ளவா? தீபாராதனை சமயம் அந்த கண்ணாடி வழியாக கூட்ட நேரத்தில் கண்டு வணங்கவா? இல்லை!? பின் எதற்காக?

கர்ப்பகிரஹத்தில் ஏக இறைவன் தான் என்ற தத்துவத்தை உணர்த்தினர் ஞானிகள்,  திரும்பிய உடன், மேலே பார்க்கையில் கண்ணாடியில் -  மூலஸ்தானத்திலே உள்ள இறைவனும்,நம் உருவமும் தெரியக் காண்கிறோம்!அதாவது கண்ணாடியில் இறைவனும் நம் உருவமும் தெரியும்!? இதுதான் ஞானம்!

ஏ மனிதா! கோவிலில் இறைவனை காண வந்திருக்கிறாயே எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே! - அவரை நீ உன்னில் தான் காண வேண்டும்! உனக்குள் தான் இறைவன் இருக்கிறார்!

  உனக்குள் இறைவன் இருப்பதை கண்ணாடி - கண் - ஆடி வழியாகத்தான் பார்க்க முடியும் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்! இதுவே ஞானம்! கண்ணில் மணியில் மத்தியில் ஜோதியாகிய இறைவன் இருப்பதை உணர்க! என்பதே ஞானிகள் கூற்று.

நிலைக் கண்ணாடியை கும்பிடும் மக்களே, உங்கள் மனம் நிலைக்குமானால் கண்ணிலே - ஆடிக்கொண்டிருக்கும் ஜோதியை காண்பீர்கள்! இதை விளக்க சாட்சி பாவனையே புறத்தில் எல்லா கோயில்களிலும் வைக்கப்பட்டுள்ளது நிலைக்கண்ணாடி!

நிலைக்கண்ணாடியிலே நம் புற உருவம் தெளிவாகத் தெரியுமல்லவா? அதுபோல நம் மனம் கண் -  ஆடி -  ஜோதியிலே 👀 நிலைக்குமானால் நம் அக உருவம் தெளிவாக காணலாம். இந்த பூத உடலுக்குள் உள்ள சூட்சும உடலை காணலாம்! சாதனை சாதனை சாதனை எனத் தொடந்து செய்தால் காணலாம் நம்முள் நம்மையே!!

 👁️🔥👁️


உலக குருவின் திருவடிகளே சரணம்🙏🏻

ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்🙏🏻

அடிகள் உறையும் அறனெறி நாடு



"முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்"

ஞானவிளக்கம் :

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த -

ஒவ்வொரு மனிதனும் என்று பிறக்க வேண்டும் எப்படி அதன் முடிவு அமைய வேண்டும் என்பதை முன்னரே வகுப்பவன் யாராக இருக்க முடியும் ? எல்லாவற்றையும் நடத்துபவன் இயக்குபவன் தானே இறைவன் ! இதுவே தேவ இரகசியம் !

நாம் என்று ? எங்கு ? யாருக்கு ? பிறக்க வேண்டும் என தீர்மானித்து நம்மை இந்த உலகில் பிறப்பிக்க அருள்பவன் இறைவன் அல்லாமல் வேறு யார் ? அடிகள் உறையும் அறனெறி நாடு -

அடிகள் - திருவடிகள் இறைவனின் திருவடிகள் தான் நம் கண்கள் என பற்பல ஞானிகள் பகர்ந்துள்ளனர். வேதங்களும் அவ்வாறே கூறுகின்றன.

அங்ஙனம் திருவடியாகிய நம் கண்களில் உறையும் ஜோதியை உணர்ந்து தவம் செய்வதே உத்தமம் !

கண்களில் ஜோதி இருப்பதை உணர்ந்து அதை நினைத்து உணர்ந்து நெகிழ நெகிழ தவம் செய்வதே தூய நெறி என அற நெறி என இறைவனை அடைய வழி காட்டும் ஒப்பற்ற வழி நெறி என்று திருமூலரும் தெளிவாக உரைக்கின்றார்.


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

எட்டு எட்டாக வாழ்வை பிரித்துக் காட்டினார்கள்!


சாகாக்கல்வி நூலிலிருந்து : 45

🔥 ஒப்பற்ற ஞானம் ! 🔥

கடவுள், பக்தி என்று சாமியாராய் போகச் சொல்லவில்லை !
"களவும் கற்றுமற"
நல்ல உபதேசமல்லவா ?
ஞானம் இது என அறிய வேண்டாமா ?
நான் யார் என உணர வேண்டாமா ?

ஓர் எட்டில் வளர்ச்சி.
ஈரெட்டில் கல்வி.
மூவெட்டில் இல்லறம்.
நாலெட்டில் பிள்ளைப்பேறு.
ஐயெட்டில் சம்பாத்யம்.
ஆறெட்டில் கடமைசெய்தல்.
ஏழெட்டில் தீர்த்தயாத்திரை.
எட்டெட்டில் சந்நியாசம்.

இப்படி சித்தர்கள் நம் வாழ்வை எட்டுஎட்டாக பிரித்து அக்காலங்களில் செய்ய வேண்டியவைகளை மெய்யுள்ளபோது சிறப்பாக செய்ய அறிவுறுத்தினர் !

எட்டிலிருக்கும், மெய்யிலுள்ள மெய்ப்பொருளைத்தான் ! புரிந்து கொள்ள எட்டுஎட்டாக வாழ்வை பிரித்துக் காட்டினார்கள் !

மனிதா, ஏன் 10 பத்தாக பிரித்திருக்கக் கூடாதா ?

மெய்ப்பொருளை சொல்லும் எட்டாக, எப்படியாவது எட்டை ஞாபகத்தில் கொள்ள வேண்டி, மெய்ப்பொருள் நம் அறிவுக்கு எட்டவேண்டி எட்டு எட்டு என கட்டுரைத்தனர். சுட்டிக்காட்டினர்.

இது மெய்தானே !

பக்தியில் பலர் உடலை வருத்தி பல சாதனைகள் செய்கின்றனர் !
மனோதிடம் இல்லாத கடினமானவர்கள் செய்ய வேண்டியது தான் !
ஆனாலும் இது சரியல்ல !

அன்பே வடிவான இறைவனை, கருணைக்கடலான கடவுளை, அருள்மயமான ஆண்டவனை அடைய கடினபோக்கு தேவையில்லை !

அன்பே கடவுள் என்றனர் ஆன்றோர் ! கடவுளை அடைய அன்பு ஒன்றே வழி !

👁️ மெய்யினுள் மெய்ப்பொருளை அன்பால் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்வதே சும்மா இருக்கும் நிலையே ஒப்பற்ற ஞானம் !

👁️ மெய்யை வருத்தாது, மெய்யிலுள்ள மெய்ப்பொருளை மெய்ஞ்ஞான சற்குருமூலம் அறிந்து உணர்ந்து மேன்மை பெறலாம் !

இது மெய் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

Popular Posts