புதன், 10 டிசம்பர், 2025

மரண அவஸ்தை இன்றி உயிர் பிரிய


"இடப்பக்கமே இறை நொந்தது என்றார் கிடக்கப்படுத்தார் கிடந் தொழிந்தாரே"

- பாடல்: 148

மனிதன் பிறந்து வளர்ந்து சொத்து சுகம் சேர்த்து மனைவியோடு கூடி மகிழ்ந்து இன்பமாக கழியும் வேளை நெஞ்சு வலிக்குதே என்றார் வைத்தியரிடம் போகும் முன் உயிர் போயிற்றே என்பர்!

ஒரு கணத்தில் முடிந்து போகின்ற வாழ்க்கை! மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்!

காலன் வருமுன்னே கண் பஞ்சடைமுன்னே கடவுளை👁️🔥👁️காண்! உருப்பட வழி தேடு!

உனக்கு தெரியுமா உன் மரணம் எப்போது என்று?

நீ பிறந்ததும் உனக்கு தெரியாது? ஏன் பிறந்தாய்? எதற்கு பிறந்தாய்? எப்படி பிறந்தாய்? ஏன் வாழ்கிறாய்? எப்படி சாவாய்? சாகாமல் இருக்க முடியுமா? இந்த கேள்விக்கெல்லாம் விடை 🙏🏻சற்குருவிடம்🙏🏻 உபதேசம் பெற்று அறியலாம்!

நல்ல சாவு வருமா உனக்கு?

"நோயில் கிடவாமல் நொந்து மனம் வாடாமல், பாயில் கிடவாமல், பாழும் உடல் துடிதுடிக்காமல் சதா காலமும் நம்மை படைத்த பரம்பொருளை 👁️🔥👁️எண்ணி தவம் செய்து நல்லபடியாக உயிர் பிரியவோ
மரண அவஸ்தை இன்றி உயிர் பிரியவோ, ஆதாரங்களில் உயிர் ஒடுங்கவோ அல்லது ஒளியாகி 🔥இறைவனோடு இரண்டர கலக்கவோ செய்யலாம்! எது வேண்டும் நீயே தீர்மானித்து அதன் படி நட!

பக்கம் :42,43

உலக குருவின் திருவடிகளே சரணம்
ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்

திங்கள், 1 டிசம்பர், 2025

ஜீவ சமாதி Tamilnadu



தேனி, வீரபாண்டி உண்ணவிரத சித்தர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி. சுப்புலாபுரம் மணிக்காசுவாமி சித்தர்
தேனி மலை.பிரமானந்தர்சுவாமிகள் பனையப்பட்டி புல்லான்சுவாமிகள்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தென் திருவண்ணாமலை என்று அழைக்கக்கூடிய அருள்மிகு ஸ்ரீபரமசிவன் மலை கோவில்
அடிவாரத்தில் அமைந்துள்ள ஜீவசமாதிகள் ஸ்ரீமத் கிருஷ்ணாநந்தா சுவாமிகள் மற்றும் முத்து வேலம்மாள் என்ற சடையம்மாள்
அவர்கள் ஜீவசமாதி அமைந்துள்ளது இங்கு வருடம் தோறும் ஐப்பசி மாதம் 1 ஆம் தேதி குருபூஜை

சென்னை திருவொற்றியூர் பகுதி மகான் பட்டினத்தார் சுவாமிகள், மகான் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்,
ரோம மகரிஷி, ஜட்ஜ் சுவாமிகள், வீரராக சுவாமிகள் சடை சாமி சித்தர், மௌன சாமிகள் முத்துகிருஷ்ண சுவாமிகள்,
மகான் மஸ்தான் , செங்கல்தாத்தா என்று அழைக்கப்படுகின்ற வேங்கட சுப்பானந்த சுவாமிகள், வியாசர்பாடி அருகில் உள்ள
சாமியார் தோட்டம் பகுதியில் ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சுவாமிகள் இன்னும் பல சித்தர்களின் ஜீவ ஒடுக்கம் அங்கு அமைந்துள்ளது
இன்னும் பல வெளியில் தெரியாத, ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த சித்தர்களின் ஆலயம் நிறைந்த பகுதி என்பதே தங்களுக்கு
தெரியப்படுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்

ஓம் நமசிவாய ஐயா எங்க ஊர் தாம்பரம் மாடம்பாக்கம் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவா ஆலயம் இருக்கிறது அப்பாவின் பெயர்
தேனுபுரீஸ்வரர் அம்மாவின் பெயர் தேனு காம்பால் தாம்பரம் வேளச்சேரி மெயின் ரோடு மகாலட்சுமி நகர் சச்சிதானந்த சுவாமிகளின்
ஜீவசமாதி உள்ளது தாம்பரம் என்று அழைக்கப்பட்டது இவர் தான் காரணம் என்று சொல்வார்கள் நமசிவாய

காஞ்சிபுரம் சத்குரு சிவசாமி
பாம்பன் சுவாமிகள் திருவான்மியூர்
சக்கரை அம்மாள் திருவான்மியூர்
சுப்பையா சுவாமிகள் திருக்கழுக்குன்றம்
ஶ்ரீ சாதனந்த சுவாமிகள் சாதனந்தபுரம் பெருங்களத்தூர் சென்னை

ஸ்ரீலா ஸ்ரீ சிவாநந்த மெளவுன குரு சுவாமிகள் திருவலம் காட்பாடி TK

பைரவ சுவாமி ஜீவ சமாதி -1888, இடம்:- பூந்தமல்லி, சென்னை
சதானந்த சுவாமிகள், இடம்:- பெருங்களத்தூர், சென்னை

சென்னை ரேட்டில்ஸ். அருகில். கவங்காரை. கண்ணாப்பாஜிவாசமாதி. உள்ள து. இங்கு வாழும் சித்தர்கலும்இருக்கிறார்கள்
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில்ஆற்று பாலம் சுப்பையா சித்தர் ஜீவசமாதி
பச்சை குட்டி சித்தர் பழந்தண்டலம் - kanchipuram dt
அமுத சித்தர்,, தினகரன் பேருந்து நிறுத்தம், வேலூர். திருச்சிற்றம்பலம்.
ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி போங்கோடு ஶ்ரீ ல ஶ்ரீ நாதமுனி சுவாமிகள் சித்தர் பீடம் அமைந்துள்ளது
தேரை சித்தர்.... வாலாஜா அடுத்த குடிமல்லூர் திருமலைச்சேரி ராணிப்பேட்டை மாவட்டம்
வேலும் மாவட்டம் குடியாத்தம்நெல்லூர்பேட்டையில் திரு வையாபுரி சுவாமிகள் ஜீவ சமாதி உள்ளது

கோவை மாவட்டம் தென்கயிலாயம் வெள்ளிங்கிரி மலை அருகில் வெள்ளிங்கிரி சித்தர் சுவாமிகள் ஜீவசமாதி மற்றும் காட்டு சித்தர் கோவில் உள்ளது.
பழனி அருகில் கணகண்பட்டி சற்குரு பழனி சாமி சாக்கடை சித்தர் சாமியார் மானூர் சாதுசாமியார்,
முத்து குமார சாமி சேவூர் அவிநாசி
பொள்ளாச்சி புரவிபாளையம் கோடி தாத்தா சித்தர்
திண்டுக்கல் ஸ்ரீமத் ஒதசாமிகள் என்ற சுப்பையா ஸ்வாமிகள் 13.10.25 குருபூஜை
திண்டுக்கல் துருவ நட்சத்திரம் மகான் கசவண ஜோதி மவஉணகஉரஉ.இடம் கசவணம்படடி.
பூராண்டாம் பாளையம்,முத்துக்குமார சாமிகள்.
Nerur sathasivabramendral.guru peetam.karur.guvadi thiruvadi
Erode bhavani. Sri arulannai jeeva samethi
பொள்ளாச்சி, வேட்டைகாரன்புதூர் அழுக்கு சித்தர்
கோவை விளாங்குறிச்சி ஸ்ரீ மத் வேங்கட ரமண சுவாமி ஜீவ சமாதி அமைத்துள்ளது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் நெருஞ்சிப்பேட்டை ஆயிரவைசிய மடத்தில் திரு ஆலங்காடு இம்முடி அகோர தர்மம் சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம் இரண்டு ஜீவசமாதிகள் சமாதிகள் உள்ளது

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் லிங்கு சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. இதன் அருகில் சாமியாரை பட்டியில் அங்கு ஒரு சாமியார் சமாதி உள்ளது

படியூர் மௌனசித்தர் ஒட்டன்சத்திரம் ராமசாமி
சித்தர் நொய்யல் பாட்டி சித்தர், சென்னிமலை பின்னாக்கு சித்தர் ஓம் நமசிவாய வாழ்க
திருப்பூர் மாவட்டத்தில்... குண்டடம்... ஊதியூர் பொன்னூதி மாமலை...கொங்கணகிரி. கொங்கணச்சித்தர்.& Jeeva samadi near murugan kovil
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் அமைந்த சித்தர் கோவில்கள் :
1.புரவிபாளயம் கோடிஸ்வாமிகள்(Pollachi இருந்து 15 km தூரம்)
2. Chinchu vadi siddar or கோபால்சாமி சித்தர் Pollachi இருந்து 16 km தூரம்)
3. அழுக்குசாமி siddar, வேட்டைக்காரன் புதூர் _ 20 km தூரம் இருக்கும்
4. ஈகை சித்தர் - செல்லப்பம் பாளையம் _Pollachi இருந்து 20 km தூரம்)
5. அர்த்தநாரி பாளையம் - குகை பெருமாள்சாமி கோவில்_Pollachi இருந்து 25 km தூரம்)
இன்னும் பல கோவில் உள்ளது

ஸ்ரீ கருவூரார் சித்தர் ஜீவ சமாதி, ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோவில் வளாகம், கரூர்.
ஸ்ரீ டாடா சித்தர் ஜீவசமாதி தொழில் பேட்டை, கரூர்.
ஸ்ரீ மௌனகுரு சித்தர் ஜீவசமாதி,கிருஷ்ணா கார்டன் அருகில் ,மக்கள் பாதை ,கரூர்.
ஸ்ரீ ஒத்தை வேட்டி சித்தர் ஜீவசமாதி , பழைய பைபாஸ் ரோடு சந்திப்பு ,ஆற்றுஇறக்கம் ,கரூர்.
ஸ்ரீலஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் ஜீவசமாதி குமார கவுண்டன் புதூர், கவுண்டம்பாளையம், பவித்திரம் ,(கரூர்- கோவை ரோடு 12 கிலோ மீட்டரில் உள்ளது) கரூர்.
ஸ்ரீ பாட்டி சித்தர் ஜீவசமாதி,தான்தோன்றி மலை, சுடுகாடு,கரூர் பாளையம் (திண்டுக்கல்) ரோடு, கரூர்.

திருப்பூர் பூண்டியில் இரண்டு ஜீவசாமாதி,
அவிநாசி ஈஸ்வரன் கோவில், திருப்பூர் பூலுவபட்டி பிரிவு,
அவிநாசி அருகில் எட்டிகொட்டை சித்தர்,
கோபி பாரியூர் அருகில்,
கோபி மார்கெட் அருகில்


சேலத்தில் உள்ள ஜீவசமாதிகள்...
மாயம்மா ஜீவசமாதி...
சாந்தானந்த சுவாமிகள்...
கஞ்சமலை சித்தர்...
அப்பா பைத்தியம்...
பாவை அம்மாள்...
கரடிச் சித்தர்...(ஔவையார் வழிப்பட்ட கோயில் ,)
சரபங்க முனிவர்...
அப்பண்ண சுவாமிகள்...சேலம் ஆத்தூரிலிருந்து 15.கி,மீ,தூரத்தில் டவுன் பஸ் மூலம் சென்று வடக்கு மரை கிராமத்
நடேச சுவாமிகள்...
ஆத்தூர் (௮) சின்ன சேலம் வந்து அங்கிருந்து காரியானூர் வந்தால்
சேலம் ஆத்தூரில் இருந்து சின்ன சேலம் செல்லும் சாலையில் அம்மையகரம் என்ற ஊர் உள்ளது இங்கிருந்து 2 கி.மீ தொலைவில்
தென்பொன்பரப்பி என்ற ஊரில் ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் இவரது ஜீவசமாதி அமைந்துள்ளது....
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் தளவாய்பட்டி ஸ்ரீ ல ஸ்ரீ நிர்வாண தேசிக சத்குரு சன்னாசி வரதராஜசுவாமிஅவர்களுக்கு ஜீவசமாதி உள்ளது
சிவஸ்ரீ கேதார சித்தர் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் ஜீவ சமாதி உள்ளது.
ஜீவ சமாதியின் நேராக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை உள்ளது. வட்டம் திருச்செங்கோடு, மாவட்டம் நாமக்கல்

பரசுராம சித்தர் கூரம்பட்டி காவேரிப்பட்டணம் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சல் குறியீடு 635112
கிருஷ்ணகிரியில் வசிக்கிறேன். இங்கு அருள் பாலிக்கும் கெவிஈஸ்வரர் ஆலயத்தில் ஐயா கருமலை சித்தரின் ஜீவசமாதி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
1, சவுரிமுத்து.காட்டிநாயக்கனப்பள்ளி
2, விக்ட்டோ பானந்தா. MTV. நகர்
3, மௌலி சித்தர். கந்திகுப்பம்
4. விஸ்வநாத சுவாமிகள். காவாய்ப்பட்டி காவேரிப்பட்டினம்



காஞ்சி ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதி!
செங்கம் தாலுக்கா, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், ஊர்: காஞ்சி. பின்கோடு:606 702


திருச்சி குழுமியானந்தா சுவாமிகள்,, மாக்கான் சுவாமிகள், குப்பைத்தொட்டி மாணிக்கம் சுவாமிகள், பொன்மலை பாபா சுவாமிகள்,
மைசூர் பாபா சுவாமிகள், மகாலிங்க சுவாமிகள், குன்றுமணி சுவாமிகள் ஆகிய ஜுவ சமாதிகள் உள்ளது.
திருச்சி காவிரி கரை அருகே மா கான் சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது
திருவரம்பூர் மலை கோயில் கட்டக்களின் நாதர் சித்தர் ஜீவ சமாதி
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை அருகே சாத்தனூர் கிராமத்தில் இருக்கும் புடலங்காய் சித்தர் ஜீவசமாதி
வெங்கிடு சுப்பையா சுவாமிகள் ஜீவசமாதி பட்டுக்கோட்டை,
East market Street madurai Siva paitua sittar

புதுக்கோட்டை உலகநாத சுவாமிகள் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் குழந்தையானந்த சுவாமிகள் மாரிமுத்து
சுவாமிகள் மான் பூண்டியா சுவாமிகள் மாமுண்டி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ நாராயண சிவன் இவர்களது சமாதி
Ariyalur district poyyathanallur village bus stop opposite sri arumuga swamy siddhar jeeva samathi temple


திருச்சி உறையூர் காகபுஜண்டர் சித்தர்
திருச்சி திருவல்லரை சித்தர் சிவப்பிரகாச சுவாமிகள்
திருச்சி திருவானைக்காவல் சத்குரு சம்ஹார சாமியாடிகள்
திருச்சி கோர்ட் சற்குரு ஜீவசமாதி
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டை முனி ஜீவசமாதி
திருவாரூர் குரு தெக்ஷ்ணாமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதி! திருவாரூர்
திருச்சி பாலக்கரை உய்யகொண்டன் ஆற்றங்கரையில் சுவாமி குழுமாயினந்த சுவாமி கள் திரையுலக தியாகரஜருக்கு பாகவதருக்கு அருளியவர்
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கல்லக்குடி ஸ்ரீ சத்குரு ஞானானந்தா ஆசிரமம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஓயாமரி அருகில் மௌனகுரு ஆலயம்.
வீபூதி சித்தர்.. திருச்சி திருவானைக்காவல் கோயில்
தவத்திரு புல்லான் சாதுக்கள் ஜீவ சமாதி பனையப்பட்டி புதுக்கோட்டை மாவட்டம்


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் வட்டாரத்தில் ஆண்டி நந்தவனத்தில் அருள் பாலித்து வரும் அய்யா திரு சிவகுருமணிதர
சித்தர் அவர்கள் 854 வருடங்கள் முன்பு ஜீவ சமாதி ஆகியிருக்கிறார்கள பலா மரத்து அய்யா என்றும் அன்போடு அழைத்து வணங்கி வருகிறார்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டம் மகிழங்கோட்டை கிராமம் சித்தர் சிங்காரவேலன் ஜீவ சமாது உள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில்
1, புல்லான் சாது ஜீவசமாதி பனையப்பட்டி
2, தாண்டிஸ்வரம் சத்ரு சம்ஹார முர்த்தி சுவாமி கள்
3,பொம்மாடிமலை பேருந்து நிறுத்தம் எதிராக ஓரு ஜீவசமாதி அமிர்த ஆனந்தம் சுவாமி கள்
4,உலாகநாதர் ஜீவசமாதி புதுக்கோட்டை டவுன்
5, மாரிமுத்து சுவாமி கள் புதுக்கோட்டை டவுன்
6, மாயாண்டி சுவாமி கள் புதுக்கோட்டை டவுன்
7, வெள்ளை வேஷ்டி சித்தர் காரைக்குடி பைபாஸ் ரோடு
8,சுருளி சுவாமி கள் ஊர் சுருளி கோயில் வடுகபட்டி
9,குரும்ப நாயனார் சுவாமி கள் பேரையூர் அருகில் மல்லாங்குடி
10,ஐட்ஜ் சுவாமி கள் புவனேஸ்வரி கோயில் புதுக்கோட்டை டவுன்
11,சிவமணி சுவாமி கள் மதகுபட்டி
12, தேனிமலை மலை அடிவாரத்தில் பெருமானந்த சுவாமி கள் பொன்னமராவதி ரோடு
13, கோடநல்லுர் சுந்தர சுவாமி கள் அரிமளம்
14 புதுக்கோட்டை மாவட்டத்தில் மகான் ஶ்ரீ நாராயணகிரி சித்தர்(சடைசாமி) ஜீவசமாதி மந்திரிபட்டினம்(ECR) கட்டுமாவடி அருகில்


சீர்காழிதாலுக்கா.மயிலாடுதுறை.மாவட்டம்.கிரமம்சட்டநாதபுரம்.கூப்பிவிடன்ஆறுஅருகில்.ஸிடி.கதிர்காமாசித்தர்ஜிவசமதி
கும்பகோணத்தில் அருகில் உள்ள வலங்கைமான்.. இங்கு அருள்மிகு பெரியநாயகி அம்மன் சமேத கைலாசநாதர்... திருக்கோவில் உள்ளது...
இங்கு அருள்மிகு... சித்தர் அண்ணாமலையாரின் ஜீவசமாதி அமைந்துள்ளது

பட்டுக்கோட்டை வெங்கடசுப்பையா சித்தர் கோவில்
நாராயண தாண்டேஸ்வரர், ஜீவசமாதி நன்னிலம், பேருந்துநிலையம் அருகில்,

ஸ்ரீ பாப்பையா சித்தர் ஜீவ சமாதி பீடம், பொறையார், தரங்கம்பாடி தாலுகா, மயிலாடுதுறை வட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருள்மிகு காசி நாதர் சித்தர் பூச்சூடி கிராமம்


உரிகட்டி சுவாமிகள் ரோட்டு சாமிகள் மாதிரி மங்கலம் பாய் கட்டி சுவாமிகள் மயிலாடுதுறை ஜிஹெச் அருகில் 63வர் பேட்டை
சீர்காழி சிற்றம்பல நாடிகள் மயிலாடுதுறையில் உள்ள

மறுக்காலங்குளம் வையாலிங்க சுவாமி, அண்ணாமலை புதூர் பெரியசாமி சித்தர்

நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் என்ற ஊரில் ஸ்ரீ கோரக்க சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ளது.

சங்கரன் கோவில் அங்கே சங்கரன் நாராயணார் கோவில் பின்புறம் வேலப்ப தேசிகர் பாம்பாட்டி சித்தர் கோயில்
உள்ளது அதனை அடுத்து கழுகுமலை மில் மிளகாய் பழ சித்தர் கோயில் உள்ளது.
சங்கரன்கோவில் தாலுக்கா கறி வளர்ந்த நல்லூர் தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் சங்கலிங்க சுவாமிகள் ஒடுக்கம்
நெற்கட்டும்செவல் ராஜா ரிஷி ராம பாண்டியன் .
விஜயாபதி விஸ்வாமித்திரர்

ஸ்ரீ மாயாண்டி சித்தர். இடையமேலூர், சிவகங்கை, சிவகங்கை மாவட்டம்

தூத்துக்குடி மாநகர் இரண்டாம் ரயில்வே கேட்டு அருகில் உள்ளது கைவெள்ளிய சாமி மடம் எங்கு இரண்டு சித்தர்கள் ஜீவசமாதி உள்ளது ஒருவர்
பெயர் சிவஸ்ரீ சிதம்பர சாமிகள் மற்றொருவர் பெயர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவர்கள் சமாதி சிவனாகவும் நந்தியாகவும் உள்ளது

ராஜபாளையம்: - சத்திரப்பட்டி வேதாந்தமடம் ஸ்ரீ காசி பாணலிங்க சுவாமி கோவில்
ராஜபாளையம் விருதுநகர் மாவட்டம் குருசாமி ஜீவசமாது கோவில்
சிவகாமி ஞானியார் கோவில்
கருப்பஞானியார் கோவில்
பொன்னாப்ப ஞானியார் கோவில்
கொம்பையா & வெள்ளியங்கிரி சமாது கோவில்
ஆறுமுகசாமி சமாது கோவில்
பாலத்தடி சாமி சமாது கோவில்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் வடகரை ஸ்ரீ ராமசாமி சித்தர் கோவில் உள்ளது
கோட்டூர் குருசாமி சித்தர் கோவில் உள்ளது விருதுநகர் மாவட்டம்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் கொட்டாம்பட்டி அருகில் சொக்கலிங்க புரம் ராமசாமி சித்தர் மிகவும்

சாத்தூரில் இருந்து கோட்டூர் குருசாமி சித்தர் ஆலயம் உள்ளது. அதன் அருகில் உள்ள ஊர் மெட்டுக்கொண்டு
அங்கு கடப்பார சித்தர் ஐயா ஜீவசமாதி உள்ளது மிகவும் அருமையாக இருக்கும்

ஸ்ரீதரேஷ்வரர் சித்தர் மம்சாபுரம் -626110 திருவில்லிபுத்தூர் வட்டம் விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா மாத்தூர் கிராமத்தில் உயர்திருவெள்ளைச்சாமி ஜீவ சமாதி இங்கே உள்ளது ஆடி மாதம் குருபூஜை
விருதுநகர் ஜக்கம்மாள்பரம் அருணாசலேஷ்வரர்ஜீவசமாதிகோவில்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பெரிய கட்டங்குடி கிராமத்தில் 100 வருட பழமையான ரெட்டி
குல மவுன குரு சாமி சித்தர் கோயில்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் வடகரை கிரகத்தில் ஸ்ரீ ராமசாமி சித்தர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா ஏழையிராம்பண்னை அருகில் சேர்வைக்காரன்பட்டி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான வைரமுத்து சுவாமிகள் திருக்கோவில் அமைந்துள்ளது
அம்மையப்ப சித்தர் விடும் மதுரை பனையூர் வில்லேஜ்

சிவகங்கை இடையமேலூர் ஸ்ரீல ஸ்ரீ மாயாண்டி சித்தர் ஜீவ சமாதி..

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகில் அ.கரிசல்குளம் கிராமத்தில். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகசாமி சித்தர் ஜீவசமாதி உள்ளது 1922
ஆண்டு ஜீவசமாதி அடைந்துள்ளார் கல்வெட்டில் உள்ளது.

பரமக்குடி இங்கு நகரின் மத்தியில் பருத்தியூர்.இராமலிங்கசுவாமிஜீவசமாதி உள்ளது. காக்கா தோப்பு என்னும் இடத்தில்.
ஸ்ரீ வேலு பக்தர் சாமாதி உள்ளது. எமனேஸ்வரம்.ஸ்ரீ சத்தியவாசகர் ஜீவசமாதி உள்ளது. காக்கா தோப்பில்.தமிழ்நாடு தொழில் பயிற்ச்சி
கூடதில் எதிர்புறம் ஒரு ஜீவசமாதி.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் கீழம்பல் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ பொன்னம்பலம் சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது.
இது சுமார் 200 ஆண்டுகள் பழமையானது

தில்லை வாத்தியார் சுவாமிகள் ஜிவசமாதி பெருமாத்தூர் புவனகிரி.


திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் சுவாமிகள் சிவஞான சித்தர் அவர்களின் ஜீவசமாதி கோவில் உள்ளது
திருநெல்வேலி.வல்லநாடு சாது சிதம்பரசாமி
மலையாள சாமி செங்கோட்டை தென்காசி மாவட்டம்
திருச்செந்தூர் வள்ளி நாயக ஜீவசமாதி மூவர் ஜீவசமாதி
ஸ்ரீ கருணை ஆனந்த சித்தர் ஜீவ சமாதி சிவ ஸ்ரீ ராமநாதசுவாமி சித்தர் ஜீவசமாதி சிவகிரி தென்காசி மாவட்டம்
ராஜரிஷி ராமபாண்டி ஐயா சித்தர் ஜீவசமாதி நெற்கட்டான் சேவல் சிவகிரி தாலுகா தென்காசி மாவட்டம்
செண்பக சுவாமி ஜீவ சமாதி குற்றாலம் காசி மேஜர்புரம் ஆறுமுகசாமி ஜீவ சமாதி செங்கோட்டை
தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவல் நிலையம் அருகில் உள்ளது நமது சுவாமி பிரம்ம ஶ்ரீ பிரம்ம நாயகம் சுவாமி ஜீவ சமாதி அமைந்துள்ளது
Tenkasi kannimarammankovilstreet kaythervelupillai jeeva samathi

பசுவந்தனை சங்கு சுவாமிகள் தூத்துக்குடி மாவட்டம்
கழுகுமலை மிளகாய் சித்தர் என்பவர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலையின் கிரிவலப் பாதையில் அமைந்திருக்கும் ஒரு சித்தர் ஆவார்.
ராமநாதபுரம் மாவட்டம் உலகப் புகழ்பெற்ற முதல் சிவாலயம்திரு உத்தரகோசமங்கை அருகில் உள்ள எக்ககுடி கிராமத்தில் சூட்டுக்கோல் ராமலிங்க
சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது அதன் அருகிலேயே தங்கவேல் சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது குருவே சரணம்

தென்காசி மாவட்டத்தில் ஐந்தருவி அருகில் சங்கர ஆனந்த சுவாமிகள் அடுத்து தென்காசியில் சங்கரா சுவாமிகள் அடுத்து செங்கோட்டை
பார்டர் பாலத்துக்கு அருகில் ஆறுமுகச்சாமி ஒடுக்கம் அதற்கடுத்து செங்கோட்டையிலிருந்து கேரளா செல்லும் வழியில் கேரளா சுவாமிகள்
அதற்கு அடுத்து பண்பொழி தாண்டி திருமலை கோவில் அருகில் திருமலை கோவிலை கட்டிய சிவகாமி அம்மையார் அவர்களுடைய சமாதி
அதிலிருந்து கணக்கப்பிள்ளை வழியாக வந்தால் அருணாசல சுவாமிசிவன் கோவில் அருகில் ராமலிங்க சுவாமிகள்அதற்கு அடுத்துமகாலிங்கம் மலை
சாம்பவர் வடகரை அகஸ்தியர் சிவன் கோவிலுக்கு அருகில் அருணாசல சுவாமிகள் பாம்பு கோவில் சந்தை ஊரில் முத்தாநந்த சுவாமிகள்
இப்படி எண்ணற்ற ஜீவ சமாதிகள் இருக்கிறது

கண்ணப்ப சுவாமிகள் சீவநல்லூர் செங்கோட்டை தென்காசி மாவட்டம்

ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையத்தில் சித்தர் ஜிவ சமாதி உள்ளது

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் இங்கு நான்கு ஜீவசமாதிகள் உள்ளன ஒன்று முத்தைய தேசி சுவாமிகள்
இரண்டு சொரூபானந்த சுவாமிகள் 3 தட்சிணாமூர்த்தி சுவாமிகள் மடத்த மடம் சண்முகசாமி மடம் ஐயப்பன் திருக்கோயில் வளவனூர்

வடலூர். எலுமிச்சை சித்தர்
கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் என்ற கிராமத்தில் அழகர் சித்தர் ஆலயம் அமைந்துள்ளது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை... சிவபெருமான் வீரதீர செயல்கள் செய்த.... அட்டவீரட்டானங்களில் மூன்றாவதாக திரிபுர சம்ஹாரம் நடந்த....
திருவதிகை வீரட்டானேஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் நான்கு சித்தர்களின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் பனமலை கிராமத்தில் ஓம் தவத்திரு ஜீவஜோதி சித்தர் ஜீவசமாதி உள்ளது இந்த ஆலயம் சுமார் 1000 ஆண்டுகள் ஆகின்றன

மகான் படேசாகிபு சித்தர் கண்டமங்கலம், விழுப்புரம்
ஸ்ரீமத் வீர சைவ ஸ்வாமிகள் தம்பிப்பேட்டை பாளையம் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா ஜீவசமாதி

திருக்கோவிலூர் அருகில் தபோவனம் சத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள்🙏
மணம்பூண்டி மகான் ஶ்ரீ ரகூத்தமர் சுவாமிகள் மூலபிருந்தாவனம்

ஸ்ரீ ஜெகநாத சுவாமி சன்யாசி சூரக்குப்பம் பண்ருட்டி.
விட்டோபா சுவாமிகள் பூண்டி மாகன்சுவாமிகள் திருவண்ணாமலை மாவட்டம் போளூர்

ரீ வெள்ளை வேட்டி சித்தர் என்கின்ற ஸ்ரீ பாலா சித்தர் ஜீவசமாதி, சதுரகிரி தாணிப்பாறை அருகில், சதுரகிரி.
ஸ்ரீ யாழ்ப்பாண சித்தர்,ஸ்ரீ கருப்ப ஞான சித்தர்,ஸ்ரீ ஆறுமுக சித்தர் ஜீவசமாதிகள் W. புதுப்பட்டி,
முருகன் கோவில் அருகில் வத்திராயிருப்பு அருகில்


மதுரை இரயில்வே junction அருகில்....தலைவிரிச்சான் சித்தர் ஜீவ சமாதி....தலைவிரிச்சான் சந்து... மதுரை.
மானாமதுரையில் சதாசிவ பிரம்மானந்தா சித்தர்கள் ஆனந்த் வள்ளி அம்மன் ஆலயத்தில் இருக்கிறார்

வியாழன், 27 நவம்பர், 2025

இறைவனை குருமொழியால் அறிந்து

திருமந்திரம் - 3052

"இணங்க வேண்டா இனியுல கோருடன்
நுணங்கு கல்வியும் நூல்களும் என்செயும்
வணங்க வேண்டா வடிவை யறிந்தபின்
பிணங்க வேண்டா பிதற்றை யொழியுமே"

மெய்ப்பொருள் உபதேசம் பெற்று தீட்சை பெற்ற ஆத்மசாதகன் தனித்திருக்கவே விரும்புவான் !
உலக சந்தைக் கூட்டத்தை விரும்பவே மாட்டான் !

உலகோருடன் ஒட்டமாட்டான் !
யாருக்கும் பயப்படமாட்டான் !
யாருக்கும் பணிய மாட்டான் !

"நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்"
என திருநாவுக்கரசர் நவில்கிறார் !

"பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்த பின்னே"
என்கிறார் அபிராமிபட்டர் !

🙏இறைவனை பணிந்தபின் இந்த உலகமே துச்சம் ஞானிகளுக்கு ! ஆத்ம சாதகர்களுக்கு !🙏

இது ஆணவமல்ல !! இறைவனை குருமொழியால் அறிந்து அனுபவம் பெற்றபின் இனி நூற்கள் எதற்கு ?

மேலும் மேலும் அனுபவம் பெற சாதனை ! சாதனைதான் வேண்டும் !
காயத்தினுள் கடவுளை கண்டபின் வேறு புறத்தே தெய்வ உருவங்களை வணங்க வேண்டாம் !
ஒளியாக உள்ளே கண்டபின் கல்செம்பு மரத்தை வணங்க வேண்டுமா ?
இதெல்லாம் பக்தியில் செல்லும் குழந்தைகளுக்கு !

ஞான சாதனை புரிபவருக்கல்ல !
முட்டாள்களோடு வாதம் பண்ண வேண்டாம்!
யாரோடும் சண்டை சச்சரவு போட வேண்டாம் !

அமைதியாயிரு ! பசித்திரு ! 👁️விழித்திரு !👁️
சிறு தெய்வ வழிபாடு வேண்டவே வேண்டாம் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

நூல் - மந்திரமணி மாலை
www.vallalyaar.com

சூரியன் 12 கலை சந்திரன் 16 கலை அக்னி 8 கலை

"பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொ டாறும் உயர்கலை பான்மதி
ஒத்த நல் அங்கிய தெட்டெட் டுயர் கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே"

பத்தும் இரண்டும் பகலவன் கலை !
பன்னிரண்டு ஒளிக் கலைகளையுடையது சூரியன் நமது வலது கண் !

பதினாறு ஒளிக் கலைகளையுடையது சந்திரன் நமது இடது கண் !
இவ்விரண்டு கண்ணும் ஒத்து - ஒன்று சேர்ந்து உள்ளே சேரும் இடம் அக்னிகலை !
அது எட்டு கலை எட்டின் விரிவுமாகும் !

இம்மூன்று கலைகளையும் ஒளிக்கதிர்களையும் ஒன்றிணைப்பதே நம் ஞான சாதனையாகும் !

சூரியன் 12 கலை
சந்திரன் 16 கலை
அக்னி 8 கலை

முதலில் இம் மூன்றும் சேர 36 கலையாகும் !
ஆத்மஸ்தானம் அடைந்தவன் 36 கலை பெற்றவன் 36 தத்துவம் வென்றவன் என்பர் !

ஒப்பற்ற உயர்ந்த ஞான சாதனை இது !

சந்திரனின் ஒவ்வொரு ஒளிக் கலையும் சூரியனுடன் ஒவ்வொன்றாக சேரும் 
இப்படி சூரியகலை 12 உடன் சந்திர கலை 12 சேரும் !

எஞ்சிய சந்திர ஒளிக்கலை 4 சூரியனை ஊடுருவி அக்னி கலையுடன் சேரும் !

அங்கே ஏற்கனவே 8 கலை உண்டு இந்த 4ம் அங்கே போய் சேர்ந்ததும் அதுவும் 
12 கலையுடன் மிளிரும் !


இப்போது

சூரியகலை 12
சந்திரகலை 12
அக்னிகலை 12

என மூன்றும் ஒன்றாகவே ஒரே நிலைபெறும் !

இதுவே, " முச்சுடரும் ஒன்றாகி முடிந்ததோர் ஜோதி பாதம் அச்சுதனும் அயனும் காணா அனந்தமாம் பாதம் " என ஞானிகள் கூறுவர் !
அந்த பாதம். பதம் அடைந்தவர் தன்னை அறிந்தவராவார் ? தத்துவம் 36-ம் கடந்த ஆத்ம ஞானியாவார் !
என்னுள்ளிருந்து நந்தி உரைக்க அடியேன் எழுதிவிட்டேன் எல்லா ஞான இரகசியங்களையும் !அனுபவங்களையுமே !

படித்து தெளிந்து உணர்ந்து பண்படுக !


இறைவன் திருவடிகளே நம் கண்கள்!!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

புதன், 19 நவம்பர், 2025

இறைவன் திருவடி பற்றி ஞானிகள் மகான்கள் கூறுவது



1 காளத்தியான் என் கண்ணில் உள்ளான் கான் - அப்பர் பெருமான்

2 கண்ணே சரீரத்தின் விளக்காய் இருக்கிறது - பைபிள்

3 சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ - ஞான கவி பாரதியார்

4 விண்ணொளி யாக விளங்கும் பிரமமே. கண்ணொளி ஆகுமடி குதம்பாய். கண்ணொளி ஆகுமடி.

5 சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - வள்ளலார்

6 விண்ணிறைந்து நின்ற சுடர்போலச் சீவர்கள்கண்ணிறைந்து நிற்குஞ் சிவம். - அவ்வையார்

7 கண்ணின் மணியை கருத்தின் தெளிவை, விண்ணில் நின்று விளங்கும் மெய்யினை

எண்ணி எண்ணி இரவும் பகலுமே நண்ணு கின்றவர் நாந்தொழுந் தெய்வமே" - தாயுமானசுவாமிகள்

வெள்ளி, 17 அக்டோபர், 2025

“எழுத்தறிவித்தல்” உத்தமமான காரியம் !

இறைவன்🔥 மெய்ப்பொருளாக நம் உடலிலே இருப்பதையும் அதை அடைய👁️🔥👁️ கண் ஒளி மூலம் தவம் செய்ய வேண்டும் என்பதையும் எல்லோருக்கும் உரைப்பதே ஞானதானம்!

ஒளவையார் கூறிய, "தானமும் தவமும் தான் செய்தல் அரிதே" என்பது இந்த ஞானத்தை கூறுவதும், மெய்ப்பொருள்👁️🔥👁️உணர்ந்து தவம் செய்வதுமேயாகும்!

இதை தான் வள்ளலார், ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்" என்றார்.

இதையேதான் மகாகவி பாரதியாரும், " அன்னசத்திரம் ஆயிரம் கட்டலைவிட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்று" என்று அழகாக கூறியிருக்கிறார் !

ஒரு அன்னசத்திரம் கட்டி ஆயிரம்பேர்களுக்கு அன்னதானம் கொடுக்கலாம் ! ஆயிரம் அன்னசத்திரம் கட்டினால் பத்துலட்சம் பேர்க்கு அன்னதானம் கொடுக்கலாமல்லவா ?

இது ஒன்றும் பெரிய விஷயமல்ல !? இதைவிட மேலானது என்ன தெரியுமா ?

பல லட்சம் பேர்களுக்கு அன்னதானம் கொடுப்பதை விட ஒருவனுக்கு “எழுத்தறிவித்தல்” உத்தமமான காரியம் !

👁️🔥👁️

எது எழுத்து ? 👁️அ, உ👁️ ஆகிய எட்டும் இரண்டுமே எழுத்து - ஞான எழுத்தாம் ! இந்த ஞான எழுத்தை அறிவிப்பதே, ஞானதானம் செய்வதே அரிதினும் அரிதாம் !

மனிதனாக பிறப்பது,நல்லபடியாக பிறப்பது,
ஞானக்கல்வி அறிவது உணர்வது ஞானதானம் செய்வது

இதை தான் அரிதினும் அரிதாக சொல்கின்றனர் எல்லா ஞானிகளும்! ஞானதானமே, அரிதினும் அரிதான, அதி உன்னதமான தானத்தில் சிறந்த அன்னதானத்தை விடவும் சிறந்தது ஆகும்.

பக்கம் - 71,72

உலக குருவின் திருவடிகளே சரணம்

ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்







www.vallalyaar.com

வியாழன், 16 அக்டோபர், 2025

ஞானதானம் செய்

ஞானம் பெற பக்தி வேண்டும்! பரிபூரண நம்பிக்கையுடன்,
வைராக்கியத்துடன்,தவம் செய்ய வேண்டும் ! பக்தி,யாரிடமாவது காட்டு!

அப்போது தான்,நீ பண்படுவாய்! பக்தியில்லையேல்,ஞானம் இல்லை !
குருவிடம் பக்தி 🔥செலுத்து ! உருப்படுவாய்! எப்படியோ,

🔥பக்தி வேண்டும்! அதுதான்,உனக்கு பணிவை கொடுக்கும்! ஒழுக்கத்தை கொடுக்கும்!

நல்ல நெறியோடு வாழ்வாய்! இறைவனின் பெரும் புகழை,

மனமுருகி பாடு! ஆடு!

👁️🔥👁️ இறைவனைப் பற்றி, உலகுக்கு எடுத்துக்கூறு !

✨ஞான தானம் செய்!✨

இறைவன்- ஒவ்வொரு மனித உடலிலும், உயிராகவே ஆத்ம ஜோதியாகவே தங்கஜோதியாகவே அருட்பெருஞ்ஜோதியாகவே துலங்குகிறான் என்பதை உலகுக்கு எடுத்துக்கூறு,

இதுவே ஞானதானம் ! இதை விளக்கும், மெய்ஞ்ஞான நூற்களை தானம் செய்!

- பக்கம் 66,67.

உலக குருவின் திருவடிகளே சரணம்
ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்

திங்கள், 13 அக்டோபர், 2025

விழியை தூண்டி உணர்த்துபவர் - குரு



🔥திருமந்திரம் 2854 - ஞானவிளக்கம்🔥

" நோக்குமின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது "


நோக்குங்கள் எதை - நோக்கப்படும் பொருளை !
எதால் பார்க்கிறோமோ அதை பாருங்கள் !
அது மிக மிக நுண்ணிய பொருள் !
எதால் பார்க்கிறோம் ?

கண்ணால்தானே பார்க்கிறோம் !
கண்ணை பார்க்கணும் அதுதான் ஞானம் !
கண்ணாடியில் பார்க்கலாம் என்பீர் !

புறத்தே பார்ப்பதல்ல ?!
கண்ணை நாடி பார்த்தால் நம் கண்ணே ஒரு கண்ணாடிதான் !
பளப்பளப்பான பளிங்கு கண்ணாடிதானே நம் கண்கள் 

நம் கண்களால் பிரபஞ்சத்தையே பார்ப்பதுபோல நம் கண்களை 
என்று காண்கிறோமோ அன்றுதான் ஞானம் பிறக்கும் ! அவனே ஆத்ம சாதகன் !

அதற்குரிய உபாயம் சொல்லித் தந்து வழிகாட்டுபவர் 
விழியை தூண்டி உணர்த்துபவர்தான் குரு !
பாருங்கள் விழித்திருந்து !



இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வெள்ளி, 10 அக்டோபர், 2025

🔥திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம்🔥



🔥திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம்🔥

"அழுமடி யாரிடை யார்த்துவைத்
தாட்கொண் டருளியென்னைக்
கழுமணி யேயின்னுங் காட்டு"

ஞான விளக்கம் :

மாணிக்கவாசகர் ஒவ்வொரு பாடலிலும் தெளிவாக கூறுகிறார் !
அடியார் என்பவர் அழுபவரே!

"அழுதால் பெறலாம் உன்னை” என்று அதனால்தான் பாடி அருளினார் !
அப்படிப்பட்ட மெய்ம்மையார், அழும் அடியார்களோடு என்னை சேர்த்து வைத்து ஆட்கொண்டு அருளினாய் !

அழும் அடியார்களே ஞானதவம் செய்து இறைவனை அடைவர் !

அழுது அழுது கண்ணீரால் என் மணியை கழுவி நன்றாக கழுவி என் அழுக்கையெல்லாம் - மும்மல அழுக்கையெல்லாம் நான் போக்க வேண்டும் இறைவா அருள்புரி !

பக்தியில் கோவிலில் சிவனுக்கு நன்னீரால் கங்கையால் அபிஷேகம் !

ஞானத்தில் உடலில் கண்ணாக சிவனுக்கு கண்ணீரால் அபிஷேகம் ! கண்ணீரால் சிவனை கழுவி கழுவி நம் பாவ வினைகளை நீக்கி நாம் பரிசுத்தமாவோம் !

நம் பாவம் கரைய கரைய உள்ளிருக்கும் பரமன் அருள் கொஞ்சங் கொஞ்சமாக பெருகும் !

அழு ! நன்றாக அழு ! மணியை கழுவு !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

திங்கள், 6 அக்டோபர், 2025

🔥 திருவெண்பா - திருவாசகம் 🔥



🔥 திருவெண்பா - திருவாசகம் 🔥


"வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகாது என்செய்கேன் - செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து"



இறைவன் திருவடித் தாமரையாகிய நம்கண்களில் மணியில் உணர்வோடு தவம் செய்து உள்ளொளி பெருகினால் கொடிய வினையிரண்டும் அந்த தீயால் வெந்து அகன்றுவிடும் !
அப்படியானால் வினையிரண்டும் கண்மணி அருகில்தானே முன்னே உள்ளது ?!

இதுதான் ஞான இரகசியம் !
அந்த தீயில் என் மெய்யுருகி - உடலும் உருகிவிடும் !
ஆனால் பொய்யான உடல் தீயில் போட்டால் எரிந்து சாம்பலாகி விடும் !

இங்கே மெய்யுருகி பெருகும் தீயால் - சுத்த உஷ்ணத்தால் ஊனுருகி எலும்பும் உருகி கரைந்து நம் ஒவ்வொரு நாடி நரம்பும் ஒளிமயமாகி ஒளிருமேயல்லாமல் ஒளியால் எரிந்து சாம்பலாகாது !

இதுவே ஞான இரகசியம் !

சாதாரண தீ அனைத்தையும் பஸ்பமாக்கிவிடும்,
இறைவனாகிய பேரொளி நம்மை ஒளிமயமக்கிவிடும் ! இறைவனாகவே மாற்றிவிடும் !

நாம் செய்யவேண்டியது என்னவெனில் இறைவன் ஒளியாகி திகழும் பெரிய துறையாகிய இரு கண்மணியில் நம் மனதை வைத்து உணர்ந்து நெகிழ்ந்து சும்மா இருக்க வேண்டும் இதுவே ஞானதவம் ! செய்தால் இறைவன் காட்சி கிட்டும் உள்ளே போகலாம் அமுதம் சாப்பிடலாம் ! பேரின்பம் பெறலாம். முக்தியடையலாம் ! அந்த ஒப்பற்ற தேனமுது தரும் இறைவனை மனதால் தழுவாமல் சேராமல் இருந்து விட்டேனே என்கிறார் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

சனி, 20 செப்டம்பர், 2025

அருள் வெளிப்படுவது கண்ணில்



"அருளெங்குங் கண்ணான தாரறிவாரே"


ஞானவிளக்கம் :

அருள் வெளிப்படுவது கண்ணில்தானே !
அன்பு வெளிப்படுவது கண்ணில் தானே !
கருணை வெளிப்படுவது கண்ணில் தானே !
காமகுரோதாதி எல்லாமே கண்ணில்தானே வெளிப்படுகிறது !

கண் பார்ப்பதால் தானே எல்லா செயலும் வினையும் நடக்கிறது !
கண்ணால்தானே எல்லாம் நடக்கிறது.
நமது கண் ! உலக மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியே கண்மணி உள்ளது !
கோலிகுண்டு போல, பூமியைப்போல உருண்டு திரண்ட சதைக்கோளமே கண்மணி !

உலகிலுள்ள 700 கோடி மக்களுக்கும் ஒரே மாதிரி இருக்கும் இந்த கண்மணியின் மத்தியில்தான் ஒளியாக இறைவன் துலங்குகிறான் !

இந்த ஒத்து இருக்கும் கண்ணை அறிந்தவனே உத்தமன் !

மற்றவன் செத்தவன் !
ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கண்ணாடி கண்டு தொழுதால் கலிதீரும் - பீரப்பா

  கண்ணாடி கண்டு தொழுதால் கலிதீரும்

                 பக்கம் -44.

முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து கும்பிட்டால் துன்பம் எல்லாம் போய்விடுமா?அப்படிதான் பலரும் கண்ணாடியை வைத்து பூஜித்தும் வருகிறார்கள்! பக்தி முத்தி போய்விட்டது!

பீரப்பா சொல்வது நம் கண் ஆடியை கண்டு தொழுக என்பதாகும்! நம் கண்களில் ஆடிக்கொண்டிருப்பது ஜோதி தானே! அந்த ஜோதியை கண்டு தொழ வேண்டும் என்கிறார்! அப்படி ஜோதியை கண்டவர்க்கு பாவம் புண்ணியம் என்ற இரு வினைகள் - கலிதீரும் என்கிறார்!இதுவே ஞானம்!

தண்ணாடி  - தன் ஆடி, யாவணியுந் தானாடி - அ உள்ள தான் ஆடி, - அதாவது வலது கண் அதாவது சூரிய கலை.☀️அதில் நின்ற ஒரு - அதன் மூலம் நாம் அடையக்கூடிய விண்ணாடி விண்ணில் ஆகாயத்தில் ஆடிக்கொண்டிருக்கும் பேரொளியை நாம் காண துடிக்கிறோமே!? அதற்கு ஒரே வழி நம் கண்ணில் ஆடிக்கொண்டிருக்கும் நம் ஆத்ம ஜோதியை முதலில் காண்பது தான்!

இதுதான் ஒரே வழி இறைவனை காண இறைவனை அடைய ஒரே மார்க்கம் இதுதான்! இதல்லாமல் வேறு எல்லாம் வீண் பேச்சு! ஒரு பலனும் இல்லை என பீரப்பா கூறுகிறார்கள்.

நமது தமிழ்நாட்டில் உள்ள எல்லா கோவில்களிலும் கண்ணாடி உண்டு! கர்ப்பகிரஹத்தில் இறைவனுக்கு தலைக்கு பின் ஒரு ஜோதி ஏற்றி கண்ணாடி மூலம் பல ஜோதியாக தெரியும் படி வைத்திருப்பார்கள்.ஒரு ஜோதி தான் பல பல ஜோதியாக நமக்குத் தெரிகிறது! இறைவன் ஒருவரே அவர்தான் பற்பல விதமாக தெரிகிறார் என்ற தத்துவத்தை விளக்கத் தான் அந்த ஜோதி! கோவிலுக்குள் செல்லும் நாம் எந்த கோவிலுக்குள் சென்றாலும் இந்த ஒரே இறைவன் தான் பற்பல ஜோதியாக உள்ளான் என்ற தத்துவத்தை நாம் காணலாம்! கண்டு பின் திரும்பும் போது மூலஸ்தானத்திற்கு எதிரில் பெரிய நிலைக்கண்ணாடியை நாம் காணலாம்! ஏன் அர்ச்சகர் தரும் விபூதியை பார்த்து சரியாக பூசிக்கொள்ளவா? தீபாராதனை சமயம் அந்த கண்ணாடி வழியாக கூட்ட நேரத்தில் கண்டு வணங்கவா? இல்லை!? பின் எதற்காக?

கர்ப்பகிரஹத்தில் ஏக இறைவன் தான் என்ற தத்துவத்தை உணர்த்தினர் ஞானிகள்,  திரும்பிய உடன், மேலே பார்க்கையில் கண்ணாடியில் -  மூலஸ்தானத்திலே உள்ள இறைவனும்,நம் உருவமும் தெரியக் காண்கிறோம்!அதாவது கண்ணாடியில் இறைவனும் நம் உருவமும் தெரியும்!? இதுதான் ஞானம்!

ஏ மனிதா! கோவிலில் இறைவனை காண வந்திருக்கிறாயே எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே! - அவரை நீ உன்னில் தான் காண வேண்டும்! உனக்குள் தான் இறைவன் இருக்கிறார்!

  உனக்குள் இறைவன் இருப்பதை கண்ணாடி - கண் - ஆடி வழியாகத்தான் பார்க்க முடியும் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்! இதுவே ஞானம்! கண்ணில் மணியில் மத்தியில் ஜோதியாகிய இறைவன் இருப்பதை உணர்க! என்பதே ஞானிகள் கூற்று.

நிலைக் கண்ணாடியை கும்பிடும் மக்களே, உங்கள் மனம் நிலைக்குமானால் கண்ணிலே - ஆடிக்கொண்டிருக்கும் ஜோதியை காண்பீர்கள்! இதை விளக்க சாட்சி பாவனையே புறத்தில் எல்லா கோயில்களிலும் வைக்கப்பட்டுள்ளது நிலைக்கண்ணாடி!

நிலைக்கண்ணாடியிலே நம் புற உருவம் தெளிவாகத் தெரியுமல்லவா? அதுபோல நம் மனம் கண் -  ஆடி -  ஜோதியிலே 👀 நிலைக்குமானால் நம் அக உருவம் தெளிவாக காணலாம். இந்த பூத உடலுக்குள் உள்ள சூட்சும உடலை காணலாம்! சாதனை சாதனை சாதனை எனத் தொடந்து செய்தால் காணலாம் நம்முள் நம்மையே!!

 👁️🔥👁️


உலக குருவின் திருவடிகளே சரணம்🙏🏻

ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்🙏🏻

அடிகள் உறையும் அறனெறி நாடு



"முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்"

ஞானவிளக்கம் :

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த -

ஒவ்வொரு மனிதனும் என்று பிறக்க வேண்டும் எப்படி அதன் முடிவு அமைய வேண்டும் என்பதை முன்னரே வகுப்பவன் யாராக இருக்க முடியும் ? எல்லாவற்றையும் நடத்துபவன் இயக்குபவன் தானே இறைவன் ! இதுவே தேவ இரகசியம் !

நாம் என்று ? எங்கு ? யாருக்கு ? பிறக்க வேண்டும் என தீர்மானித்து நம்மை இந்த உலகில் பிறப்பிக்க அருள்பவன் இறைவன் அல்லாமல் வேறு யார் ? அடிகள் உறையும் அறனெறி நாடு -

அடிகள் - திருவடிகள் இறைவனின் திருவடிகள் தான் நம் கண்கள் என பற்பல ஞானிகள் பகர்ந்துள்ளனர். வேதங்களும் அவ்வாறே கூறுகின்றன.

அங்ஙனம் திருவடியாகிய நம் கண்களில் உறையும் ஜோதியை உணர்ந்து தவம் செய்வதே உத்தமம் !

கண்களில் ஜோதி இருப்பதை உணர்ந்து அதை நினைத்து உணர்ந்து நெகிழ நெகிழ தவம் செய்வதே தூய நெறி என அற நெறி என இறைவனை அடைய வழி காட்டும் ஒப்பற்ற வழி நெறி என்று திருமூலரும் தெளிவாக உரைக்கின்றார்.


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

எட்டு எட்டாக வாழ்வை பிரித்துக் காட்டினார்கள்!


சாகாக்கல்வி நூலிலிருந்து : 45

🔥 ஒப்பற்ற ஞானம் ! 🔥

கடவுள், பக்தி என்று சாமியாராய் போகச் சொல்லவில்லை !
"களவும் கற்றுமற"
நல்ல உபதேசமல்லவா ?
ஞானம் இது என அறிய வேண்டாமா ?
நான் யார் என உணர வேண்டாமா ?

ஓர் எட்டில் வளர்ச்சி.
ஈரெட்டில் கல்வி.
மூவெட்டில் இல்லறம்.
நாலெட்டில் பிள்ளைப்பேறு.
ஐயெட்டில் சம்பாத்யம்.
ஆறெட்டில் கடமைசெய்தல்.
ஏழெட்டில் தீர்த்தயாத்திரை.
எட்டெட்டில் சந்நியாசம்.

இப்படி சித்தர்கள் நம் வாழ்வை எட்டுஎட்டாக பிரித்து அக்காலங்களில் செய்ய வேண்டியவைகளை மெய்யுள்ளபோது சிறப்பாக செய்ய அறிவுறுத்தினர் !

எட்டிலிருக்கும், மெய்யிலுள்ள மெய்ப்பொருளைத்தான் ! புரிந்து கொள்ள எட்டுஎட்டாக வாழ்வை பிரித்துக் காட்டினார்கள் !

மனிதா, ஏன் 10 பத்தாக பிரித்திருக்கக் கூடாதா ?

மெய்ப்பொருளை சொல்லும் எட்டாக, எப்படியாவது எட்டை ஞாபகத்தில் கொள்ள வேண்டி, மெய்ப்பொருள் நம் அறிவுக்கு எட்டவேண்டி எட்டு எட்டு என கட்டுரைத்தனர். சுட்டிக்காட்டினர்.

இது மெய்தானே !

பக்தியில் பலர் உடலை வருத்தி பல சாதனைகள் செய்கின்றனர் !
மனோதிடம் இல்லாத கடினமானவர்கள் செய்ய வேண்டியது தான் !
ஆனாலும் இது சரியல்ல !

அன்பே வடிவான இறைவனை, கருணைக்கடலான கடவுளை, அருள்மயமான ஆண்டவனை அடைய கடினபோக்கு தேவையில்லை !

அன்பே கடவுள் என்றனர் ஆன்றோர் ! கடவுளை அடைய அன்பு ஒன்றே வழி !

👁️ மெய்யினுள் மெய்ப்பொருளை அன்பால் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்வதே சும்மா இருக்கும் நிலையே ஒப்பற்ற ஞானம் !

👁️ மெய்யை வருத்தாது, மெய்யிலுள்ள மெய்ப்பொருளை மெய்ஞ்ஞான சற்குருமூலம் அறிந்து உணர்ந்து மேன்மை பெறலாம் !

இது மெய் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

Popular Posts