புதன், 10 டிசம்பர், 2025

மரண அவஸ்தை இன்றி உயிர் பிரிய


"இடப்பக்கமே இறை நொந்தது என்றார் கிடக்கப்படுத்தார் கிடந் தொழிந்தாரே"

- பாடல்: 148

மனிதன் பிறந்து வளர்ந்து சொத்து சுகம் சேர்த்து மனைவியோடு கூடி மகிழ்ந்து இன்பமாக கழியும் வேளை நெஞ்சு வலிக்குதே என்றார் வைத்தியரிடம் போகும் முன் உயிர் போயிற்றே என்பர்!

ஒரு கணத்தில் முடிந்து போகின்ற வாழ்க்கை! மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்!

காலன் வருமுன்னே கண் பஞ்சடைமுன்னே கடவுளை👁️🔥👁️காண்! உருப்பட வழி தேடு!

உனக்கு தெரியுமா உன் மரணம் எப்போது என்று?

நீ பிறந்ததும் உனக்கு தெரியாது? ஏன் பிறந்தாய்? எதற்கு பிறந்தாய்? எப்படி பிறந்தாய்? ஏன் வாழ்கிறாய்? எப்படி சாவாய்? சாகாமல் இருக்க முடியுமா? இந்த கேள்விக்கெல்லாம் விடை 🙏🏻சற்குருவிடம்🙏🏻 உபதேசம் பெற்று அறியலாம்!

நல்ல சாவு வருமா உனக்கு?

"நோயில் கிடவாமல் நொந்து மனம் வாடாமல், பாயில் கிடவாமல், பாழும் உடல் துடிதுடிக்காமல் சதா காலமும் நம்மை படைத்த பரம்பொருளை 👁️🔥👁️எண்ணி தவம் செய்து நல்லபடியாக உயிர் பிரியவோ
மரண அவஸ்தை இன்றி உயிர் பிரியவோ, ஆதாரங்களில் உயிர் ஒடுங்கவோ அல்லது ஒளியாகி 🔥இறைவனோடு இரண்டர கலக்கவோ செய்யலாம்! எது வேண்டும் நீயே தீர்மானித்து அதன் படி நட!

பக்கம் :42,43

உலக குருவின் திருவடிகளே சரணம்
ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts