வியாழன், 16 அக்டோபர், 2025

ஞானதானம் செய்

ஞானம் பெற பக்தி வேண்டும்! பரிபூரண நம்பிக்கையுடன்,
வைராக்கியத்துடன்,தவம் செய்ய வேண்டும் ! பக்தி,யாரிடமாவது காட்டு!

அப்போது தான்,நீ பண்படுவாய்! பக்தியில்லையேல்,ஞானம் இல்லை !
குருவிடம் பக்தி 🔥செலுத்து ! உருப்படுவாய்! எப்படியோ,

🔥பக்தி வேண்டும்! அதுதான்,உனக்கு பணிவை கொடுக்கும்! ஒழுக்கத்தை கொடுக்கும்!

நல்ல நெறியோடு வாழ்வாய்! இறைவனின் பெரும் புகழை,

மனமுருகி பாடு! ஆடு!

👁️🔥👁️ இறைவனைப் பற்றி, உலகுக்கு எடுத்துக்கூறு !

✨ஞான தானம் செய்!✨

இறைவன்- ஒவ்வொரு மனித உடலிலும், உயிராகவே ஆத்ம ஜோதியாகவே தங்கஜோதியாகவே அருட்பெருஞ்ஜோதியாகவே துலங்குகிறான் என்பதை உலகுக்கு எடுத்துக்கூறு,

இதுவே ஞானதானம் ! இதை விளக்கும், மெய்ஞ்ஞான நூற்களை தானம் செய்!

- பக்கம் 66,67.

உலக குருவின் திருவடிகளே சரணம்
ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts