"இணங்க வேண்டா இனியுல கோருடன்
நுணங்கு கல்வியும் நூல்களும் என்செயும்
வணங்க வேண்டா வடிவை யறிந்தபின்
பிணங்க வேண்டா பிதற்றை யொழியுமே"
மெய்ப்பொருள் உபதேசம் பெற்று தீட்சை பெற்ற ஆத்மசாதகன் தனித்திருக்கவே விரும்புவான் !
உலக சந்தைக் கூட்டத்தை விரும்பவே மாட்டான் !
உலகோருடன் ஒட்டமாட்டான் !
யாருக்கும் பயப்படமாட்டான் !
யாருக்கும் பணிய மாட்டான் !
"நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்"
என திருநாவுக்கரசர் நவில்கிறார் !
"பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்த பின்னே"
என்கிறார் அபிராமிபட்டர் !
🙏இறைவனை பணிந்தபின் இந்த உலகமே துச்சம் ஞானிகளுக்கு ! ஆத்ம சாதகர்களுக்கு !🙏
இது ஆணவமல்ல !! இறைவனை குருமொழியால் அறிந்து அனுபவம் பெற்றபின் இனி நூற்கள் எதற்கு ?
மேலும் மேலும் அனுபவம் பெற சாதனை ! சாதனைதான் வேண்டும் !
காயத்தினுள் கடவுளை கண்டபின் வேறு புறத்தே தெய்வ உருவங்களை வணங்க வேண்டாம் !
ஒளியாக உள்ளே கண்டபின் கல்செம்பு மரத்தை வணங்க வேண்டுமா ?
இதெல்லாம் பக்தியில் செல்லும் குழந்தைகளுக்கு !
ஞான சாதனை புரிபவருக்கல்ல !
முட்டாள்களோடு வாதம் பண்ண வேண்டாம்!
யாரோடும் சண்டை சச்சரவு போட வேண்டாம் !
அமைதியாயிரு ! பசித்திரு ! 👁️விழித்திரு !👁️
சிறு தெய்வ வழிபாடு வேண்டவே வேண்டாம் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
நூல் - மந்திரமணி மாலை
www.vallalyaar.com
காயத்தினுள் கடவுளை கண்டபின் வேறு புறத்தே தெய்வ உருவங்களை வணங்க வேண்டாம் !
ஒளியாக உள்ளே கண்டபின் கல்செம்பு மரத்தை வணங்க வேண்டுமா ?
இதெல்லாம் பக்தியில் செல்லும் குழந்தைகளுக்கு !
ஞான சாதனை புரிபவருக்கல்ல !
முட்டாள்களோடு வாதம் பண்ண வேண்டாம்!
யாரோடும் சண்டை சச்சரவு போட வேண்டாம் !
அமைதியாயிரு ! பசித்திரு ! 👁️விழித்திரு !👁️
சிறு தெய்வ வழிபாடு வேண்டவே வேண்டாம் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
நூல் - மந்திரமணி மாலை
www.vallalyaar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக