திங்கள், 18 ஜூன், 2012

வினை திரை எங்கு உள்ளது ?

காணாத கண்ணில் படலமே கண்ணொளி
காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி
காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.


 நம் கண்மணியில் மத்தியில் ஊசிமுனையளவு ஓட்டை உள்ளது!?
அதை மறைத்து ஒரு மெல்லிய கண்ணாடி போன்ற ஜவ்வு-படலம் உள்ளது!?
இதெல்லாம் பெரும் ரகசியம்! இதை தக்கலை பீர் முகமதுவும் பல பாடல்களில் குறிப்பிடுகிறார்! இறைவா என் இரு கண் படலத்தை நீக்கியருள் என வேண்டுகிறார்? ஞானிகள் கூற்று என்பதற்கு இதுவும் சாட்சி!

இறைவனை-ஒளியை காணாத கண்ணில் உள்ளவர் ஒளி படலம் வழியாகவே வெளியே தெரியும்! படலம் தான் நம் மும்மல திரை! (ஆணவம் கன்மம் மாயை) படலம் வழி பார்க்கின்ற மனிதனின் படலம் - வினை எப்படி
உள்ளதோ அப்படி அவன் செயல்படுகின்றான்! பார்வையே வினையாய் செயல்படுத்துகின்றது! 

படலம் இருக்கும் வரை  வினையிருக்கும் வரை சராசரி மனிதனே! சற்குருவை சரணடைந்து உபதேசம் கேட்டு தீட்சை பெற்று படலமாகிய வினை திரை அகல கண்மணி ஒளிபெருக்க தவம் செய்யவேண்டும்! படலம் அகன்றாலே நம் கண்மணி ஒளி நாம் காண நம் கண்முன் தோன்றும்! காணாத காட்சி எல்லாம் கண்ணில் காணுமடா என்கிறார் காகபுசுண்டர் ! உலகில் உள்ள மனிதர் அனைவருக்கும் உள் ஒளியாக துலங்கும் அந்த இறைவனை எல்லோருக்கும் பொதுவில் விளங்கும் பேரொளி, இருகண்ணும் உள்
சேரும் இடத்தில் பெருங்கண்ணாக நெற்றி கண்ணாக  அக்னி ததும்பும் அருட் கண்ணாக துலங்குகிறார் ! அதை கண்டவர் தீச்செயலை விட்டுவிடுவர்! தீச்செயலை விட்டாலே அவ்வொளியை காண்பார்! இதுவரை காணாத அம்மானுடர் கண் படலம் நீங்க பெற்று கண்ணொளி கண்டு தண்ணொளி கண்டு பேரின்பம் அடைவர்! பெறுதற்கரிய பெரும் பேறு இதுவே! குருவை நாடு! கண்ணை மூடிய படலம் நீக்க வழியறி! விழித்திரு!




ஞான சற்குரு சிவசெல்வராஜ்
தங்க ஜோதி ஞான சபை
கன்னியாகுமரி

1 கருத்து:

Popular Posts