வியாழன், 25 ஆகஸ்ட், 2022

🔥 ஆன்மீகவாதி🔥 சாகாக்கல்வி நூலிலிருந்து


🔥 ஆன்மீகவாதி🔥

உணவு உடலுக்கு இன்றியமையாதது. உயிர் வாழ உணவு நீர் காற்று அவசியமல்லவா ?
நீரை நன்றாக காய்ச்சியே குடிக்க வேண்டும் !

நாம் இருக்கும் வீட்டைச் சுற்றி அந்த பகுதிகளில் நிறைய மரங்களை நட்டு தூய்மையான காற்று கிடைக்க வழி ஏற்படுத்துங்கள்.

உணவு சுத்தசைவ உணவையே உட்கொள்ளவேண்டும் !


"கொல்லான் புலாலை மறுத்தானைக்
கைகூப்பி எல்லா உயிரும் தொழும்"


எவ்வுயிரையும் கொல்லாதவன் ! எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாதிருப்பவன் ! புலால் உணவு உண்ணாதவன் தான் மனிதன் ! அவனை இவ்வுலக உயிர்கள் அனைத்தும் கைகூப்பித் தொழும் !

எல்லா உயிரும் கும்பிட வேண்டாம் குறைசொல்லும் படி நாம் நடக்க வேண்டாமே !

எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி ஒழுகும் உத்தம சீலரே உண்மையான நல்ல ஆன்மீகவாதி !

ஆன்மநேய ஒருமைப்பாடு உடையவராவார் !

உயிர் இறைவனல்லவா ?

எல்லா உயிரும் இறைவன் தானே ! அப்படியாயின் எவ்வுயிரும் வணக்கத்திற்க்குரியது தானே ! இந்த உண்மையை உணர்ந்தவனே ஞானி ! சித்தன் !

ஆத்திச்சூடியில் ஒளவையார் உரைத்த வாழ்க்கைநெறியை கடைபிடித்தால் நாமும் மனிதனாகலாம் !


"நெய் உருக்கி நீர் கருக்கி மோர் பெருக்கி உண்பவர் தம் பேர் உரைக்கில் போமே பிணி"

என தேரையர் சித்தர் கூறுகிறார் !

நெய்யை நன்றாக உருக்கியே உபயோகிக்கணும். தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்தே பருகணும். தயிர் சாப்பிடக்கூடாது. தயிரில் எவ்வளவு அதிகமாக வேண்டுமானாலும் தண்ணீர் சேர்த்து மோர் ஆக்கி சாப்பிட சுகம் கிடைக்கும்.

இறைவன் திருவடிகளே நம் கண்கள்!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts