ஞாயிறு, 14 ஜூன், 2015

படித்த முட்டாளை விட படிக்காதவனே மேல்!

கல்லாத மூடருக்கு கல்லாதார் நல்லார் - திருமூலர் 

ஞான உபதேசம்  திருவடி உபதேசம் கேட்காதவன் அவனே மூடன்!

ஞான உபதேசம் திருவடி உபதேசம் கேட்ட பின்னரே ஒருவனின் துலங்க  அறிவு ஆரம்பிக்கும்!

அதனால் தான் கல்லாத மூடன் என உபதேசம் பெறாதவனை திருமூலர் கூறினார்!?

கல்லாதவர் - படிப்பறிவே  இல்லாதவன் - பாமரன் - படித்த முட்டாளை விட படிக்காதவனே மேல்!

இன்றைய நடை முறையை திருமூலர் அன்றே தெளிவாக கூறி விட்டார்!  இன்றைக்கு பல்கலை கழகங்களில் பட்டம் பெற்ற, மேதைகள் என தன்னை தானே கூறிக்கொள்ளும் படித்த முட்டாள்கள்  ஞானம் கிலோ
என்ன விலை என கேட்கும் ஆசாமிகள் தான்! கற்றது கைமண்ணளவு 
கல்லாதது உலக அளவு என்ற ஆப்த வாக்கியம் படிக்காத முட்டாள்களே!

படித்திருந்தால் நல்ல சற்குருவை நாடி ஓடியிருப்பார்களே! கெளரவம் - ஆணவம் - அந்தஸ்து - தடுத்திருக்கதே! லட்டு இனிக்கும் என சொல்லி கொண்டே இருப்பவர்கள்! சாப்பிட மாட்டார்கள் ஞான சூனியர்ங்கள்! பேராசிரியர்களாக உலாவரும் அணிந்துரை வாழ்த்துரை வழங்கும் அறிவிலிகள்! இன்றைய பேராசிரியர் பலரும் பேர் - பெரிய ஆசிரியல்லர்!  அ  - சிறியர்! சின்ன பசங்கள் தான்! இப்படி பட்டவர்களிடம் படிக்கும்
மாணவன் எப்படி உருப்படுவான்? உரை நூல்களை வைத்து ஒப்பேற்றும் 
 அ - சிறியர் கூட்டம் தான் அதிகம்!

ஞான கல்வி படியுங்கள்! ஞானத்தை போதியுங்கள்! புனிதமான தொழில் பயிற்றுவித்தல்! பண்படுங்கள்! பண்படுத்துங்கள்!

கல்லாத மூடர் - படித்து ஞானம் அறியாதவன்.அதாவது சற்குருவிடம் 
உபதேசம் கேட்காதவன் அவனே  மூடன்!  


ஞான சற்குரு சிவசெல்வராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts