ஞாயிறு, 5 ஜூலை, 2015

உருவ வழிபாடு தேவையா? - வள்ளலார்


உருவ வழிபாடு தேவையா? அல்லது வேண்டமா?
வள்ளலார் இராமலிங்கஅடிகள் வரலாறு
சன்மார்க்க தேசிகன் ஊரன் அடிகள் உருவ வழிபாட்டைப் பற்றிப் பிரம்ம சமாஜத்தாருடன் வாது தேதி 16-01-1897.

* உருவவழிபாடு அறவே கூடாதென்பர் பிரம சமாஜத்தார்.

*உருவ வழிபாடும் வேண்டியதே என்பவர் வள்ளற் பெருமான்.
*உருவ வழிபாடும் அருவ வழிபாடும் அவ்வப்பக்குவர்க்கு உரியவை
*உருவ வழிபாடு முதற்படி,அருவவழிபாடு முடிவான படி,
*அருவவழிபாடு எல்லாராலும் செய்ய இயலாது,
*அதற்குப் பெரும் பக்குவம் வேண்டும்,
*உருவ வழிபாடு எல்லாராலும் செய்ய இயலும்,
*உருவ வழிபாட்டிலிருந்தே அருவ வழிபாட்டு நிலைக்குரிய பக்குவத்தைப் பெறுதல் சாமானியர்க்குரிய சாதனமுறை,
*ஆதலால் உருவவழிபாடு இகழ்ச்சிக்குரியதன்று என்பது
வள்ளற்பெருமானின் கொள்கை.
*சாதாரண தரத்தவர்கள் செய்ய வேண்டிய தியானத்தைப் பற்றி உபதேசிக்கும்போது தியானஞ் செய்ய வேண்டுமானால் ஏதாவது ஓர் உருவத்தைத் தியானிக்க வேண்டும்.
*நிஷ்களமா யிருக்கப்படாது.
*உருவமாக இருக்க வேண்டும்.
அருவமாகத் தியானிக்கப்படாது.
*பின் உருவம் கரைந்து அருவமாகும் எனப் பெருமான்
உபதேசித் திருக்கன்றனர்.
*இவ்வாறு அருவ வழிபாடு,உருவ வழிபாடு,

இரண்டையும் ஆதரிக்கும்
வள்ளற்பெருமானுக்கு,
பிரம்ம சமாஜத்தார் உருவ வழிபாட்டை வன்மையாகக் கண்டித்துப் பொதுமக்களிடம் தம் கருத்தைப் பரப்புவது உடன்பாடில்லை.

இவைகளைப் பற்றி மேலும் விரிவாக

வள்ளலார் இராமலிங்க அடிகள் வரலாறு புத்தகத்தில் உள்ளது

*பக்கம் 294ம்முதல் 303ம் பக்கம் வரை உள்ளது.

ஊரன் அடிகளுக்கு தங்கஜோதி ஞான சபையின் நன்றிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts