திங்கள், 27 ஜூலை, 2015

சும்மா இரு - முடிந்த முடிபான ஞான நிலை

இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றார். அப்படி எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை அடைவதற்கு நாம் காடு மலை
கோயில் அபிசேகம் ஆராதனை மந்திரம் சொல்வது யாகம் போன்றவற்றை செய்து கொண்டிருக்கிறோம்.

இவை எல்லாம் ஆரம்ப படிநிலைகளே தவிர முடிந்த முடிபான
ஞான நிலையை தெரிந்து கொள்ள இயலாது.

இறைவனை காண்பதற்கான ஒரே வழி ஞான தவம் செய்து தன்னை உணர்வதுதான்! இது தவிர வேறு வழி இல்லை! தன்னை அறிவது இன்னும் எளிமையாக சொல்வது என்றால் "நான் யார்"? என்று தெரிந்து கொள்வது தான்! நான் யார் என்பதை நீ சும்மா இருந்துதான் தெரிந்து கொள்ள தவிர வேறு எது செய்தும் உணர முடியாது!

எல்லா ஞானிகளும் சித்தர்களும் சும்மா இருந்துதான் இறைவனை கண்டார்கள்!

சொல்லும் பொருளும் அற்று சும்மா இருப்பதற்க்கே
அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே! - தாயுமானவர்


இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்றொண்டு வருமோ அறியேன் எங்கோவே துன்று மல வெம்மாயை அற்று
வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்! - வள்ளலார்

ஆதிகுரு தட்சினாமூர்த்தி சனகாதி முனிவர்களுக்கும்
ஞான பண்டிதன் முருகன் அருணகிரி நாதருக்கும்

ராமலிங்க அடிகளாரும் மற்றும் அனைத்து ஞானிகளும்
உலக மக்களுக்கு கருனையோடு சொன்னது
சும்மா இரு

சும்மா இரு என்பது தன் கடமைகளை எல்லாம் செய்து கொண்டே
குரு கூறிய உபதேசத்தின் படி இறைவன் திருவடிகளாகிய
இரண்டு கண்களில் உணர்வோடு இருபதுவே.

இந்த சும்மா இரு என்கின்ற ஞான தவத்தை பற்றி ஆன்மீக செம்மல் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் புத்தகங்கள் DVD மற்றும் இனைய தளம் மூலமாக மெய்ஞான இரகசியங்களை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

உபதேசம் மற்றும் தீட்சை   பெற 
www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts