வியாழன், 25 ஜூன், 2015

அந்தணர் - பார்ப்பார் யார்?


பாரப்பா பலவேத நூலும் பாரு -  அகத்தியர்.

இங்ஙனம் வேதத்தை படித்து அதன் நுண் பொருளை உணர்ந்து தவம் செய்பவரே அந்தணர் ஆவார்!  

அந்தணர் என்போர் அறவோர் - திருவள்ளுவரும் கூறுகிறார்!.

குடுமி வைத்து கொண்டு பூணூல் போட்டவன் அந்தணன் அல்ல!

வேதம் ஓதி உணர்ந்த அந்தணர் 'பார்ப்பார்' எதை? தன் கண்மணி ஒளியை! தூய வெள்ளொளியை! பால் போன்ற தண்ணொளியை! தவம் செய்து பார்ப்பார்! காண்பர்!

தன் உயிராக அந்த பரமனே இருப்பதை தன் உடலிலுள்ளே பார்ப்பார்! அதனால்தான், தன்னையே பார்ப்பவரைத் தான் பார்ப்பவர்! பார்ப்பனர்கள் என அழைத்தனர்! அந்தணரின் மற்றொரு பெயரே பார்ப்பார் நம்முள்ளே !

பரமாகிய பகவான் நம் உயிராகி ஒன்றானவனாக துலங்கி, அவரே நம் கண் இரு கண் மணி ஒளியாகவும் இரண்டாகவும் துலங்குகிறார்! ஒன்றான ஜீவன் இரண்டாக இரு கண் சூரிய சந்திர ஒளியுடன் சேர , மூன்றும் சேர்ந்தாலே அதுவே ஓங்காரம் ஆகும் ! 

அ உ ம் என்ற முச்சுடரும் தான் ஒன்றான ஓங்காரம்! வேதம் ஓதி , தவ உணர்வால் நாமும் அந்தணர் ஆகலாம்!

பார்ப்பார் -பார்! - பார்! என்ற குரு உபதேசத்தை கேட்டு தன்னையே கண்மணி ஒளி வழி உற்று பார்ப்பவரே , பார்த்துகொண்டு இருப்பவரே பார்ப்பார்!?
உள் ஒளியை  சதா காலமும் பார்ப்பவரே, பார்த்துக் கொண்டிருப்பவரே பார்ப்பார்!

பூவிலே கண்மலரிலே உள் உள்ள நூல் போன்ற நரம்பினை இணைத்து, தவத்தால் ஒளிக்கலைகளை இணைப்பவரே அந்தணர்! பார்ப்பார்!
கண் உள் உள்ள நூல் போன்ற நரம்பினை இணைத்து பூன வேண்டும்!

இதுவே பூணூல் சூரிய சந்திர அக்னி ஒளிக்கலைகளை இணைத்து ஒன்றாக வேண்டும் இதுவே குடுமி! புறத்தில் வேஷம் போடுபவர் வேடர்! அகத்திலே கொண்டவரே அந்தணர். புறத்திலே வேஷம் போட்டுக் கொண்டு தான்
உயர்ந்த ஜாதி என்கின்றனர் மூடர்கள்! பூ நூலை  தரித்து முச்சுடரை சேர்த்து ஒளியோடு இருப்பவரே  உண்மையான அந்தணர்! பார்ப்பார்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts