செவ்வாய், 23 டிசம்பர், 2014

பாவ விமோசனம் எப்படி பெறுவது?



கண்ணா கண்ணே என்று கதறாத ஞானிகள் இல்லை! கண் பெற்ற நாம் பாக்கிய சாலிகளல்லவா? கண் ஒரு உறுப்பு மட்டுமல்ல, இதே ஊனக்கண்ணே ஞானக்கண்ணாகவும் மாறும் என்பதை அறிந்தவன் எவ்வளவு பாக்கியசாலி

ஆன்மீக இரகசியங்களை உடைத்து தவிடு பொடியாக்கிய ஞானச் செல்வங்கள் மகான் ஸ்ரீ ராமானுஜரும் வள்ளல் ஸ்ரீ இராமலிங்கரும் தன் அடியேனுக்கு கண் போன்றவர்கள்! அவர்கள் காட்டிய பாதையில் அடியேன் முதல் முறையாக கண்மணிமாலை எனும் மெய் ஞான நூலை 1992-ல் வெளியிட்டேன்.

ஆன்மீ கம் குறிப்பிட்ட குறிப்பிட்ட மதத்துக்கோ குறிப்பிட்ட பிரிவினருக்கோ உரியது அல்ல! உலக மக்கள் 800 கோடிபெருக்கும் பொதுவானது! இறைவன் ஒருவன்தான்! 800 கோடி மக்களை பெற்ற தாயும் தந்தையும் அவன்! பரமாத்மா ஆவான்!


அவன் பெற்ற 800மக்களும் ஜீவாத்மாவே! இந்த உண்மை தெரியாதவன் உணராதவன் மனிதனே அல்ல!? பரமாத்மாவை உணரும் வரை மனிதன்-ஒரு ஜீவன் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து காலச்சக்கரத்தில் சம்சார சாஹரத்தில் சுழற்ன்று கொண்டே இருக்கும்! விமோசனம் வேண்டாமா?

இதுவரை இவ்வுலகில் இறை ரகசியத்தை மறைத்தே வைத்தனர்?! திருஅருட் பிரகாஷ வள்ளலார் ராமலிங்க சுவாமிகளே இறை ரகசியத்தை வெளிப்படுத்தி வெட்ட வெளியிலே சத்திய ஞான சபை கட்டி ஒளியான இறைவனை ஒளியாக எல்லோரும் காண கோயில் அமைத்து தந்தார்! தை பூச ஜோதி தரிசனம் காண வடலூருக்கு வாருங்கள் என்று கூவி அழைத்தார்!  வடலூரில் புறத்தே இறைவனை ஜோதியாக கண்டது போலே உங்கள் உடலூரில் அகத்தே அதே இறைவனான ஜோதியை காண்க என்று அறிவுறுத்தினார்!

இப்படி ஞானோபதேசம் செய்யும் அவர் அதற்க்கு வழியும் கூறுகிறார்! தகுந்த ஆச்சாரியன் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்க பெற்றுகொள்க என அறிவுறுத்துகிறார்!? விழியே நம் உடலூரில் உள்ளே புகும் வழியாகும். உடலூரின் அகத்தே ஆன்ம ஜோதியை காண கண் வழியே உணர்ந்து தவம் செய்ய வேண்டும் என்று மிக மிக ரகசியமாக இருந்த ஞானத்தை உலகுக்கு வெளிப்படுத்தினார் வள்ளலார் !


ஞானத்தை மட்டுமே வைத்து அந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் அப்போது தான் கண்ணனை நாம் அறிய முடியும் கண்ணன் யார் என்று தெளிவு கிட்டும். பின்னர்தான் கண்ணாலே காணலாம்! கண்ணாக இருக்கும் அவனே கண்ணன் என உணரலாம்!


மனம் ஒன்றி கண்ணனிடம் லயமானால் ஞானம்! மந்திரம் - மனதின் திறம் வெளிப்படும் இடம் கண்ணே! அந்த கண்ணனிடம் கண்ணில் லயமானால் கிட்டுமே ஞானம்(அறிவு) இதைப்பற்றி பாடினார்கள் ஆழ்வார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தமாக! அடியேன் மெய்ஞான உரை எழுத உட்கார்ந்த போது அருளினான் கண்ணன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts