வியாழன், 10 அக்டோபர், 2013

தமிழ் அறிந்தவர்கள் பாக்கியசாலிகள்

நமக்காக  நமது முன்னோர்கள் எத்தனையோ ஞான பொக்கிசங்களை தந்தருளியுள்ளனர்.

தமிழ் அறிந்தவர்கள் உண்மையில் மிகவும் பாக்கியசாலிகள் .

இங்கே ஞான நூல்கள் வேறு எங்கும் இருப்பதாக தெரிய வில்லை.

இங்கே இருக்கும் ஞான பெருமக்கள் வேறு எங்கு இருப்பதாக
 தெரிய வில்லை.

தமிழ் நாட்டில் தடுக்கி விழுந்தால் ஒரு சமாதியின் மேல் விழ வேண்டி உள்ளது.  தமிழ் நாட்டில் ஆங்கங்கே குரு பூஜை  நடக்கும். அங்கே சமாதி கொண்டிருக்கும் மகானுக்கு நடக்கும் விழாதான் குரு பூஜை.

ஒரு சில கோயிலில் சித்தர் பெருமக்கள் சமாதி மேல் தெய்வ திரு உருவங்கள் பிரதிஷ்டை செய்ய பட்டு உள்ளது.

பல கோயிலில் படிக்கட்டுகளிலும் , சுற்று புறங்களிலும் மலையிலும் சமாதிகள் நிறைய இருக்கின்றனர்.

இதன் மூலம் ஒன்றை மற்றும் புரிந்து கொள்ளுங்கள். இறைவனாம் ஆதிக்கு சமமானவர்கள் அதிகம்.

ஆதியை நெருங்க துடிப்பவர்களும் அதிகம். இது தான்  இந்த மண்ணின் மகத்துவம்.

இது ஞான பூமி.


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts