வெள்ளி, 20 செப்டம்பர், 2013

குருவைப் பணி

ஒருவன் குருவிடமிருந்து திருவடி உபதேசம் பெறும் போது குருவின் உடலில் இருந்து உள்ளத்தில் இருந்தும் தெய்வீக சக்தியானது சிஷ்யனுடைய உடலுக்கும் உள்ளத்திற்கும் பாய்கிறது!? தெய்வத்தின் குரல் மனித உருவிலே குருவாக இருந்து பேசும்.



குருவை சாதாரணமாக கருதாமல், உலகிலேயே ஒப்பற்ற ஞானோபதேசம் ஞான தீட்சை அருளிய மகானுபாவன் எனக்கருதி பணிந்தால் சரணடைந்தால் எப்போதும் குருவை நினைந்து வாழ்ந்தால் ஞானம் வழங்கிய சூட்சும ஞானசற்குரு வள்ளலாரும் ஞானத்தாய் வாலையும் கூடவே இருந்து காத்தருள்வார்கள்! ஞானம் பெறலாம்! மோட்சம் பெறலாம்! ஸ்தூல குருவை பணிவதே சூட்சும குருவை பணிவதாம்! குருவை போற்று! நற்குணமெலாம் வாய்க்கப்பெறுவாய்! குருவே சகலம் என வாழ்! வாலையருள் பூரணமாக கிட்டும்! கன்னி 'ய' விலே தோன்றுவாள் குமரியாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts