சனி, 17 ஆகஸ்ட், 2013

சோம்பல் தூக்கம் தவசீலர்களுக்கு ஆகாது!

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி
துதிக்கையால் உண்பார்க்கு சோரவும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்
கிறக்கவும் வேண்டாம் இருக்கலு  மாமே

இடக்கை இடது கண் வலக்கை  வலதுகண் இவ்விரண்டு கண்களாலும் உணர்வோடு ஒளியோடு   உள் செல்ல இரண்டும் சேர்ந்து ஒன்றாகி ஆத்ம ஸ்தானத்தில் ஒளி பெருகும் உணர்வு உண்டாகும். யானையின் துதிக்கை  போன்று உள்ளிருந்து நீண்டு வெளியே  வந்து அனுபவங்கொள்ளும்இதுவே துதிக்கையால் உண்பதாகும். துதிக்கை உருவாக வேண்டும்
நீண்டு வளரவும் வேண்டும்! பின்னரே துதிக்கையால் உண்பது! கண்மணி ஒளியிலே நிற்க நிற்க சோர்வு வரும் ஆரம்பத்தில்! தூக்கம் வரும்! சோர்ந்து போகாதீர்! தூங்காதீர் ! ஆத்மஸ்தானத்தை பற்றி துதிக்கை வளர்ந்து விட்டால் சோர்வு இல்லை! தூக்கம் இல்லை! உணர்வோடு இருந்து தூங்காமல் தூங்கி இருப்பதே தவம் ! அங்ஙனம் இருந்தால் இறப்பு இல்லை! சோம்பல் தூக்கம் தவசீலர்களுக்கு ஆகாது! தூக்கத்தை குறைத்து  சோம்பலின்றி
தவம் செய்க! அருள் பெருக !

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts