வெள்ளி, 6 டிசம்பர், 2013

பசித்திரு


                                                           :: பசித்திரு::

தர்ம சாலை கட்டி சாப்பாடு போட்ட வள்ளலார் “பசித்திரு” என்றாரே என்ன பொருள்? சாப்பிடாமல் பட்டினி கிடக்க சொல்ல வில்லை.

யாரும் சாபிடாமல் இருக்காதீர்கள்! அது நம் ஜீவனை வதைப்பதாகும் என்றும், தேவை அறிந்து சுத்த சைவ உணவு உட்கொள்ளுங்கள் என்றார்.

அப்படியானால்! வயிற்று பசியை பற்றி வள்ளலார் பசித்திரு என்று சொல்லவில்லை? பின் எதை பற்றி? ஆன்ம பசியை பற்றியே!

எத்தனையோ பிறவி எடுத்து துன்பப்படும் ஆத்மா ,என்று தான்? இந்த பிறவிச் சுழலில் இருந்து விடுதலை கிடைக்குமோ என ஏங்கி
தவிக்கும் !

அதன் தேவை விடுதலை பேரின்பம் ! இது தான் ஆன்மாவின் பசி ! அதற்கு உணவு கொடு !

ஏ மனிதா உனக்கு தேவை ஆன்ம பசி !நீ உன் ஆன்மாவை உணா் !

பேரின்பம் பெற வழிபாரு !

ஆன்மபசியோடு இருக்கும் உனக்கு வயிற்றுப்பசி ஒரு பொருட்டாக இருக்கக் கூடாது என்பதற்காக கட்டினார் தர்மசாலை.

ஆக தர்ம சாலையும் சத்திய ஞான சபை போல ஆன்ம பசி நீக்கவே கட்டினார்.

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts