ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

திருமந்திரம் - முட்டை இரண்டு

"இம்  முட்டை  இரண்டையுங் கட்டிட்டு
  ஊன்றி  இருக்க  உடம்பழியாதே"

முட்டை யிரண்டையுங் கட்டிட்டு - முட்டையை உடைத்து  சாப்பிடச்  சொல்லவில்லை ! கட்ட  வேண்டும்  என்கிறார் !

முட்டை  என்றால்  கண் ! முட்டை  போல்  இருப்பதால்  முட்டையிலே
கரு  இருப்பதைப்  போல்  கண்மணியே  கருவிலே  உருவான  முதல்  உறுப்பு  அதில்  ஒளி  இருக்கிறது  அதுவே  கரு !

இரு  கண்ணான  முட்டையையும்  புறத்தே பார்வை செல்லாமல் கட்டி  அகத்தே செலுத்துவதாகும் !

இரு  கண்களையும்  சூரிய  சந்திர  ஜோதிகளை இணைப்பதே  கட்டுவதாகும் !

இங்ஙனம்  இரு  கண்  ஒளியிலும்  நினைவை  நிறுத்தி  உணர்ந்து  உள்கொண்டு  சேர்த்தால் இவ்வுடம்பு  அழியாமல்  இருக்கும் !

சிரஞ்சீவியாக  வாழலாம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts