ஞாயிறு, 21 ஜூலை, 2013

காமம் - 0

காமம் தலைகேறியவன் கடைமடையனாவான் ! விந்து விட்டவன் நொந்து கேட்டான்! 72000 நாடி நரம்புகள் அதிர ஒழுகும் விந்தால் பெறுவதே சிற்றின்பம் ! காண நேர இன்பம்! அதன் பின்னர் துன்பமே! இழந்த சக்தியை மீட்க வேண்டாமா?  இதிலும் அளவோடு இரூ! அறிவோடு இரு! என ஞானிகள் பகர்ந்துள்ளனர் !

காமத்தால் விந்து கீழே இறங்கும் பிராண நஷ்டம் உண்டாகும் ! திருவடி தவத்தால் விந்து மேலேறும் ஒஜசாகும்! பிராணன் நிலைபெறும்! ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் உடல் நலமாகும் !

காம வயப்பட்டு தகாத செயல்கள் புரிந்தால் கொடூர நோய்கள் வந்து காலமெல்லாம் துன்பமுற்று முடிவில் இறக்க நேரிடும்! மெய் ஒழுக்கமும் மன நற்குணங்கள் இருந்தால் தான் மரணமில பெருவாழ்வு கிட்டும்! இது மெய்!

நம் உடல் உறுதி பெற உடல் என்றும் நிலைக்க பிரமச்சர்யம் அவசியம் தேவை! இல்லறம் புகும் வரை கட்டுபாடு நூறு பங்கு கண்டிப்புடன் இருக்க வேண்டும், இல்லறத்தான் 15 நாட்கள் ஒரு முறை மனைவியோடு மட்டுமே சுகித்திருக்கலாம்! எவன் ஒருவன் தன் மனைவியை தவிர மற்றெல்லா பெண்களையும் தாயாக கருதுகிறானோ அவனே ஞானம்
பெற தகுதி உள்ளவனாவான்! இதுவே மெய்!

இல்லறத்தானுக்கு விந்து உற்பத்தி ஊற்று கேணி ஞாயத்தை ஒத்தது என வள்ளல் பெருமான் கூறியாருள்கிறார்! பிரமச்சாரி தன் மனம் சலனமஅடையும் இடம் பொருட்களை தவிர்த்து சதா காலமும் இறை சிந்தனையோடு வாழ்வதே உத்தமம்!

1 கருத்து:

  1. சொல்லப்பட்டவைகள் "போய் சேரும் வயதில்" தோன்றுவது தான் கொடுமை...

    நற்சிந்தனைக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

Popular Posts