திருவாவடுதுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவாவடுதுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 டிசம்பர், 2022

🔥 மெய் அனுபவம் பெற வேண்டுமா ? 🔥

சாகாக்கல்வி நூலிலிருந்து : 41


நமது மெய் சூடாக இருக்கிறதல்லவா ? ஏன் ?

பேரொளியான இறைவன் சிற்றொளியாகி நம் உயிராகி நம் உடலினுள் இருப்பதால்தான் !

சராசரி மனிதனின் உயிர் உஷ்ணம் ஒரே சீராக இருக்க வேண்டும் !
கூடினால் ஜுரம் குறைந்தால் ஜன்னி காலனை பார்க்க போய்விட வேண்டியதுதான் !

உயிரின் தன்மை உஷ்ணம் தான், சூடு தான் ஒளிதான் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.

உயிர் இருக்கின்ற நம் உடல் சூடாக இருக்கிறது.
உயிர் போன உடல் குளிர்ந்து போய் விடுகிறதல்லவா ?
உயிர் இருந்தால் சூடு இருக்கிறது. அப்படியானால் உயிரின் தன்மை சூடு தானே ! உயிர் ஒளி தானே !

மெய்ப்பொருளில் கண்மணியில் ஒளி இருக்கிறது, உயிர் துலங்குகிறது என்பது மெய்யே !

" சூடு கொண்ட திருவாவடுதுறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே "
என துறையறி விளக்கத்தில் அகஸ்திய மாமுனிவர் கூறியருளியது மெய்தானே !

திருவாகிய இறைவன் ஆடிக்கொண்டிருக்கும் துறை - இடமான, சூடு கொண்ட இரு கண்களுமே பார்க்கும்போது அனுபவத்தில் உணரலாம் !

வலது கண் சூரியனாகவும் இடது கண் சந்திரனாகவும் தோன்றி ஒளி ஒன்றாகும்.
இங்கு தவ நிலையையும் கூறியருள்கிறார் அகத்திய மாமுனிவர் :

நம் இரு கண்களையும் சூடு கொள்ள, உணர்வால் சூடு பெருகிட செய்து பார்க்கையில் சூரிய சந்திரனாகிய இரு கண் ஒளி ஒன்றுசேர்ந்துவிடும். அக அனுபவம் கிட்டும் !

வள்ளல்பெருமான், நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து விழித்திருந்து தவம் செய்ய சொல்கிறார் !
மெய் அனுபவம் பெற வேண்டுமாயின் மெய்யிலே விளங்கும் மெய்ப்பொருளைப் பற்ற வேண்டும் !

மெய்ஞ்ஞானம் இது எனவே சித்தரும் முத்தரும் உரைத்ததை அடியேன் எழுதியிருக்கிறேன் !

இது ஒன்றே மெய் !

மெய்யாலுமே இதுவே மெய் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வெள்ளி, 18 நவம்பர், 2022

🔥 மெய்ப்பொருள் காண்பது அறிவு 🔥



சாகாக்கல்வி நூலிலிருந்து : 34

🔥 மெய்ப்பொருள் காண்பது அறிவு 🔥

நமது மூதாதையர்கள் நாமெல்லாம் ஞானம் பெற வேண்டி வாழ்க்கையின் எல்லாநிலையிலும் காணுகின்ற பொருட்களிலும் ஞானம் விளங்கும்படி எல்லாவற்றையும் அமைத்து வைத்தனர்.

பல ஊர் பெயர்கள் மெய்ப்பொருள் விளக்கம் :

திருக்கண்ணபுரம், எண்கண், எட்டுக்குடி, திருவாவடுதுறை, குறுங்குடி இப்படி ஊர் பெயர்கள்.
திருவாகிய இறைவன் குடியிருப்பது கண் ஆகிய இடத்தில் அது திருக்கண்ணபுரம் !
எண் ஆகிய எட்டும் இரண்டும் கண் எனக் குறிக்கும் எண்கண் !

எட்டுக்குடி என்பது எட்டாகிய கண்ணில் குடியிருக்கும் இறைவன் !
திருவாகிய ஜோதி ஆடிக்கொண்டிருக்கும் இடம் அதுவே திருவாவடுதுறை !
ஊசிமுனையளவு குறுகிய சின்ன இடத்தில் குடியிருப்பவன் இறைவன் எனவே குறுங்குடி !
இப்படி ஊர் பெயரும் மெய்ப்பொருள் விளக்கமே !

தாம்பரம் - தாம் அதாவது நாம் தான்பரம் எனக் குறிக்க வந்ததே தாம்பரம் !
சிதம்பரம் சின்ன அம்பரம் சின்னகோவில் அதுதான் சிதம்பரம்.
கண்ணன் என்ற பெயர் மெய்ப்பொருளே !

கண் ஆகிய அவன் கண்ணிலே இருக்கும் ஒளியாகிய இறைவன். கண் அவன் கண்ணன் - கிருஷ்ணமணி ! கண்மணி !

கணபதி - கண்ணின் பதி - கணங்களின் பதி கணநாயகன் ! திருக்கண்ணை மங்கை !

நேத்திர தரிசனம் திருப்பதியில் கண்டவர் மோட்சம் பெறுவர் !

நேத்திரம் நயனம் என்றாலும் கண்.

உபநயனம் ஒரு சடங்கு. பூணூல் பூட்டும் வைபவம் !

துணை, இரு என்பது உப எனப்படும். நயனம் என்றால் கண். இரு கண்பற்றி அறிவதே அறிவிப்பதே உபநயன வைபவத்தின் நோக்கம் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

Popular Posts