சாகாக்கல்வி நூலிலிருந்து : 41
நமது மெய் சூடாக இருக்கிறதல்லவா ? ஏன் ?
பேரொளியான இறைவன் சிற்றொளியாகி நம் உயிராகி நம் உடலினுள் இருப்பதால்தான் !
சராசரி மனிதனின் உயிர் உஷ்ணம் ஒரே சீராக இருக்க வேண்டும் !
கூடினால் ஜுரம் குறைந்தால் ஜன்னி காலனை பார்க்க போய்விட வேண்டியதுதான் !
உயிரின் தன்மை உஷ்ணம் தான், சூடு தான் ஒளிதான் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.
உயிர் இருக்கின்ற நம் உடல் சூடாக இருக்கிறது.
உயிர் போன உடல் குளிர்ந்து போய் விடுகிறதல்லவா ?
உயிர் இருந்தால் சூடு இருக்கிறது. அப்படியானால் உயிரின் தன்மை சூடு தானே ! உயிர் ஒளி தானே !
மெய்ப்பொருளில் கண்மணியில் ஒளி இருக்கிறது, உயிர் துலங்குகிறது என்பது மெய்யே !
" சூடு கொண்ட திருவாவடுதுறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே "
என துறையறி விளக்கத்தில் அகஸ்திய மாமுனிவர் கூறியருளியது மெய்தானே !
திருவாகிய இறைவன் ஆடிக்கொண்டிருக்கும் துறை - இடமான, சூடு கொண்ட இரு கண்களுமே பார்க்கும்போது அனுபவத்தில் உணரலாம் !
வலது கண் சூரியனாகவும் இடது கண் சந்திரனாகவும் தோன்றி ஒளி ஒன்றாகும்.
இங்கு தவ நிலையையும் கூறியருள்கிறார் அகத்திய மாமுனிவர் :
நம் இரு கண்களையும் சூடு கொள்ள, உணர்வால் சூடு பெருகிட செய்து பார்க்கையில் சூரிய சந்திரனாகிய இரு கண் ஒளி ஒன்றுசேர்ந்துவிடும். அக அனுபவம் கிட்டும் !
வள்ளல்பெருமான், நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து விழித்திருந்து தவம் செய்ய சொல்கிறார் !
மெய் அனுபவம் பெற வேண்டுமாயின் மெய்யிலே விளங்கும் மெய்ப்பொருளைப் பற்ற வேண்டும் !
மெய்ஞ்ஞானம் இது எனவே சித்தரும் முத்தரும் உரைத்ததை அடியேன் எழுதியிருக்கிறேன் !
இது ஒன்றே மெய் !
மெய்யாலுமே இதுவே மெய் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
திங்கள், 26 டிசம்பர், 2022
🔥 மெய் அனுபவம் பெற வேண்டுமா ? 🔥
லேபிள்கள்:
கண்கள்,
திருவாவடுதுறை,
மெய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக