புதன், 27 ஏப்ரல், 2016

ஓங்காரம்


 பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும் நின்றோங்கும்
பெருங்கருணை திருவடிகள ........ கதவு திறப்பித்தருளி
அழைத்து சரணமுற்று வருந்திய என் மகனே
மரணமற்று வாழ்க! - வள்ளலார்

 ஓங்காரத்தின் அடிமுடி நடு - இறைவன் பிரணவஸ்வரூபன் - நாதமயமானவன் - ஒளிமயமான இறைவனின் ஒருபக்கம் நாத மயமே! ஒளியான இறைவன் சரிபாதி இடப்பக்கம் ஒலியே!சிவத்தின் இடப்பாகம் சக்தி! ஒளி ஒலி  இணைந்தேதான் உள்ளது! சிவம் சக்தி என்ற இரண்டும் சேர்வது சேர்ப்பது அக்னி!  இதுவே தத்துவம்! 'அ' - வலது கண் சிவன் சூரிய கலை! இடது கண் சக்தி 'உ' சந்திர கலை! முச்சுடரும்  சேர்வதே ஓங்காரம்!  அ - உ -ம்  இதுவே ஓங்காரம்! ஓங்காரத்தில் நின்றோங்குவதே இறைவனின்
கருணை மிகு ஒளித் திருவடிகள்! நம் கண்மணி கதவை திறப்பித்து திருவடியே கதி என சரணடைந்த நம்மை அழைத்து மரணமற்று வாழ்க!மரணமற்று வாழ்க என்று  வாழ்த்தியும் அருள்வார்! அருளினார் வள்ளலாரை! திருவடியை சரண் அடைந்தோர் மரணமற்று வாழ்வார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts