திங்கள், 2 மே, 2016

ஞானம் பெற பக்தி வேண்டும்

ஞானம் பெற பக்தி வேண்டும்! பரிபூரண நம்பிக்கையுடன் வைராக்கியத்துடன்
தவம் செய்ய வேண்டும்! பக்தி யாரிடமாவது காட்டு அப்போது தான் நீ பண்படுவாய் !

பக்தியில்லையேல் ஞானம் இல்லை! குருவிடம் பக்தி செலுத்து! உருப்படுவாய்! பக்திதான் ஒழுக்கத்தை பணிவை கொடுக்கும்! பக்தியே முக்திக்கு முதல் படி!

மூட நம்பிக்கையில் மூழ்கி விடாதே!? பரிகாரங்கள் செய்வது உலக மாயையில் சிக்கி அதற்காக அலைவது பக்தி அல்ல! ஜம்பத்துக்காக பக்தி செலுத்துவது  அன்னதானம் செய்வது பக்தியல்ல! இறைவன் பெரும் புகழை மனமுருகி பாடு!

இறைவனை பற்றி உலகுக்கு எடுத்துக்கூறு! ஞான தானம் செய்! இறைவன்
ஓவ்வொரு மனித உடலிலும் உயிராகவே ஆத்ம ஜோதியாகவே தங்க ஜோதியாகவே அருட்பெரும் ஜோதியாகவே துலங்குகிறான் என்பதை உலகுக்கு எடுத்துக் கூறு இதுவே ஞான தானம்!இதை விளக்கும் நூல்களை ஞான தானம் செய்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts