திங்கள், 4 ஏப்ரல், 2016

உடலில் பாற்கடல் எங்கு உள்ளது?

காரினமல்கு கடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிடமென்பார்! 

Image result for பாற்கடலை கடை

தேவர்கள் பாற்கடலை கடைந்தார்களாம்! எதற்கு அமுதம் உண்பதற்காக!
அமுதம் உண்பவனே நீடுடி வாழ்வான்! இது புராணம்.
நாம் ஞான விளக்கத்திற்கு வருவோம்?

நம் வெள்ளை விழியே பாற்கடல்! நாம் அமுதம் உண்டு
 இறைவனை அடைய கண்மணியில் வைத்து உணர்ந்து
இருப்பதுவே பாற்கடல் கடைதலாம்! எப்படி? கண்மணி தான் மேரு மலையென நடுவே இருந்து சுழலுமாம்!

கண்மணி சுழல சுழல மேரு மலையை சுற்றிய
வாசுகி பாம்பு தன் விஷத்தை கக்குமாம்!  நம் முன் பிறவி வினையாகிய
கர்மம் தான் அது! நம்மை காக்கும் பொருட்டு சிவன் - கண்மணி ஒளி அதை
அருந்துமாம்!

ஒளி தான் ஒளிபெறுகி தான் நம் பாவமாகிய கர்மதிரை அகலும்!
தொடர்ந்து பாற்கடலை கடைந்தோமானால் - தொடர்ந்து நினைந்து உணர்ந்து 
நெகிழ்ந்து கண்மணி ஒளியை தியானம் செய்தோமானால் அமுதம் கிட்டும்
பருகினால் நாமும் தேவராகலாம் சாகாமலிருக்கலாம் ஞானம் கிட்டும்!

இப்படி நம் நஞ்சாகிய நம் கர்மங்கள் உண்டு தீயில் அழித்து நம்மை காக்கும்
சிவம் -ஒளி நம் உள்ளே தான் கண்மணி நடு உள்ளே நம் சிரநடு உள்ளே
தான் என சம்பந்தர் பெருமான் கூறுகிறார்! இது ஞானம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts