புதன், 30 மார்ச், 2016

பிரணாயமம் செய்கின்றவர் அறிந்து கொள்ள வேண்டியது

நாடிகள் பத்தும் நலந்திழல் வாயுவும்
ஓடிய காலி லொடுங்கி யிருந்திடுங்

நம் உடலில் முக்கியமான நாடிகள் பத்து .
முக்கியமான வாயுகள்  பத்து. நாடிகளுள்
வாத நாடி பித்த நாடி சிலேத்துமநாடி இவை மூன்றும்
மிக முக்கியமானவை. இம்மூன்று நாடியும் சீராக இருந்தாலே
உடல் ஆரோக்கியமாக திகழும். வாயுக்களில் பிராணன்
அபானன் இரண்டும் முக்கியமானவையாகும்.

இவைகள் ஓடிய காலில் ஒடுங்குமாம்! எப்படி? கால்- திருவடி - நம் கண்கள்.
ஓடிய கால் என்றால்? நம் கண்மணி ஒளி உள் ஓடுமல்லவா? இரு
கண்ணும் உள் ஓடி சென்று முட்டும் இடமே அக்னிகலை! அப்படி
உள்  ஓடும் ஒளிக்களைகளிலே ஒடுங்கி விடும் அவை!

நாம் வாயுவை பிடிக்க வேண்டாம்! கண்மணி ஒளியை பெருக்கினாலே போதும் வாயு அதிலே அடங்கி விடும். பிரணாயமம் செய்கின்றவர் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமானது இவ்விஷயம்! கண்மணி ஒளியை பற்றினாலே போதும்!

1 கருத்து:

  1. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    பதிலளிநீக்கு

Popular Posts