மாணிக்கவாசகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாணிக்கவாசகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 செப்டம்பர், 2026

16. திருப்பொன்னூசல்

 16. திருப்பொன்னூசல்

“முன்னீறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்
தன்னீறு எனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி உத்தரகோச மங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகாபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ”

இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன்! தாயும் தந்தையும் இல்லாதவன்! காலத்திற்கு அப்பாற்பட்டவன்! முனிவர்கள் ரிஷிகள் சித்தர்கள் ஞானிகள் தவசீலர்கள் இப்படிப்பட்ட பலநூறு கோடி இமையை இமைக்காதவர்கள், தேவர்கள்! நாம் ஒரு வினாடிக்கு பலமுறை கண் இமைக்கிறோம்! தேவர்கள் விழித்திருந்து விழிந்திருந்து

விழி திறந்து தவம் செய்துகொண்டே இருப்பவர்கள் ஆதலால் அவர்கள் இமை மூடாது! தூங்கமாட்டார்கள். நாமும் மனிதநிலையிலிருந்து உயர்ந்து தேவராக வேண்டுமாயின் இமையாமல் விழித்திருக்க வேண்டும்! எல்லோரும் இருக்க, பார்க்க எனக்கு தன் இணையிலா திருவடி தாமரையை எனக்கு அருளினான்! தன் கருணை வெள்ளத்தில் திளைக்க வைத்து பேரின்பம் நல்கினான்! ஒளி பொருந்திய உள்ளே உத்தரகோசமங்கை வாலைதாய் சக்தி அமுதம் தரும் மணிமாடத்தியில் ஆணிப்பொன்னம்பலத்தில் அற்புதமான அந்த மாளிகையினுள் அமர்த்தினான்! பொன்போல் ஒளிரும் ஒளியை பெற்ற முலையீர் - மார்புபோல் கண் இருப்பதால் கண்ணே முலையாகும்! நாமெல்லாம் ஆத்மாக்கள் பெண்கள் எனவேதான் நம்மை - உலகர் அனைவரையும் பெண்ணாகவே கருதி முலையீர் பொன்னூஞ்சல் ஆடவாரீர் ஆடுங்கள் என கூறுகிறார் மாணிக்கவாசகர்! இதுவே மெஞ்ஞான விளக்கமாகும்! இமையாதீர்! விழித்தேயிருங்கள்!

“ஆரா அமுதின் அருட்டா ளிணைபாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ”

ஆரா அமுதாகிய எவர்க்கும் எளிதில் கிட்டாத யாரும் பருகாத ஞானதவத்தால் மட்டுமே அவரவரே தம் மெய்யுளே பருகும் அமுதாகிய, வாலைத்தாய் அருளும் அமுதாகிய தித்திக்கும் தேனை பெற அருள்வது நம் இரு கண்களேயாகும்! அதில் துலங்கும் இறைவனின் பொற்பாதங்களாகும்! தங்கமான ஜோதியாகும்! தங்கஜோதி! அந்த கண்கள் போரிலே வீரர்கள் தாங்கும் வேல் போல முருகப்பெருமான் கைவேல்போல விளங்குகிறதாம்! முக்கூறாக விளங்கும் சூரிய சந்திர அக்னி கலைகள் ஒன்றாகும்போது - மூன்று கூறும் சூலாயுதத்தின் மூன்று முனைகளும் ஒன்று சேர்ந்தால் அது வேலாயுதமாகுமல்லவா? ஆக்குங்கள் பொன்னூஞ்சல் ஆடுங்கள்! ஊஞ்சல் முன்னும் பின்னும் போய் வருவது போல் உங்கள் உணர்வால் கண் ஒளி முன்னும் பின்னுமாக வரவேண்டும் அங்ஙனம் பயிற்சி செய்ய வேண்டும். ஒரு சமயத்தில் உள்ளே அக்னி கலையில் சேர்ந்து விடும். நின்றுவிடும் அங்கே இறங்கிக் கொள்ளலாம்! மாணிக்கவாசகர் ஞானதவம் புரிய எப்படியெல்லாம் உவமைகாட்டி பாடுகிறார் பாருங்கள்! எப்படியாவது ஞானதவம் செய்யணும்! எல்லோரும் ஞானம் பெறணும்!

“ஆணா அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சு தனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ”

இறைவன் பரம்பொருள் ஆணா பெண்ணோ அலியா அல்லது எது யார் என திருமாலும் நான்முகனும் தேடியும் காணாத கடவுள், தேவர்கள் அனைவரையும் காக்க வேண்டி, கருணையினால் உலகை காக்க வேண்டி ஆலகால விஷத்தை தானே உட்கொண்டு காத்தருளினார்! இதேபோல் ஞானதவம் செய்வோருக்கு அவர்களை அருள்புரிந்து ஆண்டு காத்தருளி அவர்களின் மும்மலமாகிய ஆலகால விஷத்தை உண்டு ஜீவர்களை காத்தருள்வான்! அப்படிப்பட்ட அருள் வள்ளலாம் இறைவன் நம் கண் உள்ளே சேரும் இடத்தில் உத்தரகோச மங்கை பாகனாக இருக்கிறார்! கோணலான பிறைச்சந்திரனை தலையில் சூடி நடமிடும் கூத்தபிரான் கருணையை அருளித் திறத்தை நாம் பாடி ஆடுவோமாக! பொன்னூஞ்சல் ஆடுவோமாக!



Upadesam - Deeksha  - www.vallalyaar.com

சனி, 13 ஜூன், 2026

சத்திய ஞானசபையில் வழிபாடு !!


மாணிக்கவாசகரை தெய்வமாகவே போற்றிய வள்ளலார் அவர் ஆசியோடு ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளோடு உலகிற்கு வழங்கிய ஞானதானமே "சத்திய ஞான சபை ".25-01-1872 பிரஜோற்பத்தி வருடம் தை மாதம் 13-ம் நாள் வியாழக்கிழமை பூச நட்சத்திரத்தன்று முதன்முதலாக சத்திய ஞானசபையில் வழிபாடு தொடங்கப்பெற்றது.


நாம் செய்த தவப்பயன் திருவருட்பிரகாச வள்ளல் இராமலிங்க சுவாமிகள் தமிழ்நாட்டில் வடலூரில் சத்திய ஞான சபையை உருவாக்கினது !!ஒரு ஆண்டாக தானே முன்னின்று சபையை உருவாக்கினார் . "சத்திய ஞான சபையை என்னுடல் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்'என்று பாடுகிறார்!நம் தலையின் அமைப்பு தான் சத்திய ஞானசபை!உள்ளே நடுவே சுடர்விட்டு பிரகாசிக்கும் அருட்பெருஞ்ஜோதி !

முன் இருபுறமும் அஞ்செழு பொன்னஞ்செழு ! வள்ளல் பெருமான் சத்திய ஞானசபை இயற்கை விளக்கம் என்பார்! நம் அகத்தே நம் தலையின் உள் நடுவே விளங்கும் நம் ஆன்மஜோதியை காணுதற்குரிய அனுபவத்தைப் புறத்தே அடையாளமாகக் காட்டுவதே சத்திய ஞான சபை!!

நாம் ஜோதி தரிசனம் காண முடியாமல் தடுத்த மாயா திரைகள் ஏழு மறைத்துள்ளது !வடலூரில் சத்திய ஞானசபையில் ஏழு திரை நீக்கிய பின் தானே ஜோதி தரிசனம் காண்கிறோம்? அதுபோல நம் கண்களை மறைத்துக் கொண்டிருக்கும் மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஏழு நிலைகளாக ஏழு திரைகளாக உள்ளது! நாம் அஞ்செழு பொன்னஞ்செழுவாகிய நம் இரு கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்யச் செய்ய இருகண் சூரியசந்திர ஜோதி உட்புகுந்து ஆன்மஜோதியை அடையும் அம்முயற்சியின் போது ஒவ்வொரு திரையாக விலகும்!

என்னென்ன கலர் ஒளி தெரியும் என்றும் நம் உலகிற்கு வள்ளலார் தெளிவாக கூறுகிறார்!முடிவில் நம் ஆன்மஜோதி தரிசனம் நாமே காணலாம்!! ஒவ்வொருமனிதனும் இப்படித்தான் ஞான தவம் செய்யணும்1 இன்னின்ன மாதிரி அனுபவம் கிட்டும் என வள்ளல் பெருமான் மிகமிக தெளிவாக ஞான அனுபவங்களை புட்டு புட்டு வைக்கிறார்! "சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு" என்றும் அகவலில் ஒவ்வொரு திரையின் தன்மையும் கூறி நம்மை பரவசத்திலாழ்த்துகிறார்!

உலகில் இதுவரை இதுபோல் யாருமே இவ்வளவு தெளிவாக ஞான உபதேசம் சொன்னதில்லை !!அதை பாமரனுக்கும் விளங்கும்படி உன் தலை அமைப்பே சத்திய ஞானசபை , அதன் உள் நடுவே ஜோதி தரிசனம் காண்பதை போல உன்தலை உள்நடுவே உள்ளுள் ஆத்மஜோதியை காண்!என்றார்!இதுவே ஈடு இணையில்லா ஒப்பற்ற ஞானம் !முதன் முதலாக உலகுகு சொன்னதோடு இம்மாதிரி இருக்கும் என்று சத்திய ஞான சபையையும் கட்டி தத்துவ விளக்கமும் தந்து தம்மை மரணமிலா பெருவாழ்வுக்கு கூட்டிப்போகிறார். யார் செய்வார் இப்படி ஒரு உதவியை ?!ஞானிக்கெல்லாம் பரமஞானி வள்ளலார்!!ஈடு இணையில்லா ஞானி!!

'என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி
என்னைவாழ் விக்கின்ற பதியைப் பொன்செயல்
வகையை உணர்த்தினன் உளத்தே பொருந்திய
மருந்தையென் பொருளே வன்செயல் அகற்றி
உலகெலாம் விளங்க வைத்தசன் மார்க்கசற் குருவைக்
கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக் கோயிலில்
கண்டுகொண் டேனே"

6-ம் திருமுறை - திருவருட்பா

இதுதான் ஞானம் !இதுதான் வழி! இதைத்தான் எல்லா ஞானிகளும் இரகசியமாக மறைபொருளாக இதுகாறும் சொல்லிபட்டும் படாமலும் ஞானத்தை வெளிப்படுத்தி சென்றனர்!ஆனால் வள்ளலார் உலககுரு ஆயிற்றே !உலகருக்கு உள்ளதை உள்ளபடி உணர்த்தினார்! எந்த மறைவுமின்றி !பகிரங்கமாக இரகசியம் ஏதுமின்றி இதுதான் இதுதான் என்று போட்டுடைத்துவிட்டார்! காலாகாலமாக உலகை சூழ்ந்த ஆணவ இருள் விலகியது! உலக குரு வள்ளலார் ஏற்றிய ஞானதீபம் பிரகாசிக்கின்றது!!

சன்மார்க்கம் சூதுவாதுவிளையாடும் களமல்ல?!சத்திய ஞானசபையினரேதான்! சாதிமதமா சன்மார்க்கம் ! சாதிப்பற்றோடுங்கொண்டிருப்பவன் சன்மார்க்கன் அல்ல?!உண்மையான சன்மார்க்கரே பசித்திரு தனித்திரு விழித்திரு!வள்ளலாரைப் போல வேடம்போடாதே! வள்ளலார் சொன்னபடி விழித்திருந்து ஞானதவம் செய்!

உலககுரு வள்ளலாரின் கொள்கைகள் ஆன்மநேய ஒருமைப்பாடு ஜீவகாருண்யமுமே!! எவ்வுயிரையும் தம்முயிர்போல் கருதினாலே ஆன்மநேய ஒருமைப்பாடு உனக்குள் உண்டாகும்! பிற உயிரைப்போல உன் உயிரும் ஜீவனும் கடைத்தேறவேண்டுமானால் உன் ஜீவனை கருணையோடு பார் அதுவே ஜீவகாருண்யம்!சாப்பாடு போடுவது , யார் யாருக்கு என்ன தேவையோ அதை கொடுத்து உதவுவது எல்லாமே சாதாரண விஷயம் !? உலககுரு வள்ளலார், நீ உன் ஜீவனை அறிந்து உணர்ந்து ஞானதவம் செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அடையவே வழிகாட்டுகிறார்

!விழித்திரு விழித்திருக்க சொன்னாரே! கண்ணை மூடி செய்யும் எந்த பயிற்சியும் ஞானத்தை தராது?! முதலில் புறக் கண்ணைத்திற புறத்தே ஜோதி தரிசனம் காணமுடியும்!! புறக்கண் விழித்து தான் உன் அகத்திலும் ஆத்மஜோதியை காணமுடியும்!! கண்ணைமூடினால் தூங்குவாய், முடிவில் ஒரேயடியாய் நெடுந்தூக்கம்தான் முதலில் புறக்கண்ணைத்திற !உன் அறிவு கண்ணைத்திற!
உன் மனக்கண்ணைத் திற! பின்னர் உன் ஊனக்கண்ணே ஞானக்கண்ணாக மாறும்!!

#உலககுரு வள்ளலார் நூல் 




Popular Posts