மனிதனாகுக!?
உண்பதும், உறங்குவதும், இனவிருத்தி செய்வதும் மட்டும்தான் மனிதனின் வேலையா? மிருகங்களும் இதைத்தானே செய்கிறது!
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது! என ஒளவையார் கூறியது எதற்காக? அறிய வேண்டாமா?
குறையின்றி நல்ல படியாக பிறந்த நாம் பிறவிப்பயனை அடைய வேண்டாமா பிறந்தது சாவதற்கா? வாழ்வதற்கா?
பிறந்து செத்து! பிறந்து செத்து! இப்படியே போனால் அறிவு - பகுத்தறிவு உள்ளவன் - மனிதன் என்று கூற முடியுமா?
மனிதன் என்பவன் யார்?
மனதை இதம் செய்ய - பக்குவப்படுத்த தெரிந்தவனே மனிதன்! அதற்குத்தான் பகுத்தறிவு!
எப்படி பக்குவப்படுத்துவது?
இதைச் சொல்லித்தரும் குருவைத் தேடு!
நாம் சாகப்பிறக்கவில்லை!
வாழப்பிறந்திருக்கிறோம்!
எப்படி வாழ வேண்டும்?
பஞ்சமா பாதகங்கள் பொய் - கொலை - களவு - கள் - காமம் புரியாது நல்ல பழக்க வழக்கம் - ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்!
மீன் முட்டை இறைச்சி உணவுகளை உண்ணாதே! உடலை கெடுக்காதே?
மது, புகை முதலிய போதை பொருட்களை உபயோகிக்காதே! நோய்க்கு இடங்கொடேல்!
எல்லா உயிர்களிடமும் அன்பாயிரு!
எப்போதும் உண்மையையே பேசு!
"ஒருவனுக்கு ஒருத்தி" என வாழ்!
மண், பெண், பொருள் ஆசையை விடு!
இறைவன் திருவடியில் சரண் புகு!?
அப்போதுதான் நீ மனிதனாவாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக