திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
வெள்ளி, 9 ஜனவரி, 2026
ஆத்ம சாதகர்கள் செய்ய வேண்டியது ஒரே பூசை -அகஸ்தியர்
*அகஸ்தியர் பரிபூரணம் 1200 *
"பூசையென்ன சிவபூசை சத்திபூசை பூரணமாய் வாலையுட
பூசைமைந்தா நேசமுடன் வாலையவள் வாசமானால்
நிசமான மவுனமடா நிலைக்கும் பாரு
பக்தியுடன் பூசை புனஸ்காரங்கள் செய்தால் அந்தந்த தேவதைகள் அருள் கிட்டும். சிவபூசை சக்தி பூசை இப்படி பூசைகள் பல!
ஆனால் ஆத்ம சாதகர்கள் செய்ய வேண்டியது ஒரே பூசை ! அதுதான் வாலை பூசை! எல்லா சித்தர்களும் வழிபடும் ஒரே தெய்வம் வாலை! வாலையின் மகத்துவத்தை உணர்ந்ததால் தான் சித்தர்கள் வாலையை பணிகின்றனர். இவ்வுலகிலுள்ள எல்லா சித்தர்களும் இன்றும் சூட்சும தேகத்தோடு கன்னியாகுமரி வாலையை பணிய வந்து போகிறார்கள்! வாலையை வணங்குவதே எமக்கு வேலை! வாலை குடியிருக்கும் நம் முச்சுடர் முச்சந்தியிலே கண்டு பணிவதே நம் பிறவிப் பயனாகும் ! கண்டால் பணிந்தால் வாலை நம்மில் வாசமானால் வசமானால் அருள்மழை பொழிவாள் அமுத மழை அருள்வாள்! அதுவே கிடைத்தற்கரிய பெரும்பேறு! புண்ணியம்! மவுனமான கண்ணில் மணியில் ஒளியில் மனதை நிலை நிறுத்தி சும்மா இருந்தால்! அப்படியே தியானம் தொடர்ந்தால், நிசமான மவுனமடா உனக்குள் நிலைக்கும் பாரு! இதுதான் உண்மை! உணர்ந்தாயானால் எல்லா சித்துக்களும் கிட்டும்! மேலான பரகதியும் பெறுவாய்! பேரின்பம் !
நூல் -ஞானம்பெற விழி
பக்கம் - 11
லேபிள்கள்:
அகஸ்தியர்,
ஆத்ம சாதகர்,
கன்னியாகுமரி,
பூசை,
வாலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக