திங்கள், 28 நவம்பர், 2022

🔥 எட்டு இரண்டு 🔥


சாகாக்கல்வி நூலிலிருந்து : 35

🔥 எட்டு இரண்டு 🔥


ஊர்ப்புறங்களில் வீட்டிலுள்ளவர்கள் பக்கத்தில் எங்காவது போய் வரவேண்டுமானால் சொல்லிக் கொண்டுபோவர் ! எப்படி தெரியுமா ? இரண்டு எட்டு போய் வாரேன் என்பர் !!

இரண்டும் எட்டும் இரு மெய்ப்பொருளை குறிக்கும் சங்கேத வார்த்தைகள் ! இதெல்லாம் நம் அறிவுக்கு எட்டவேண்டும். புலப்படவேண்டும். எட்டை, மெய்ப்பொருளை பிடித்தால் எட்டிவிடலாம் இறைவனை பரம்பொருளை !

இறைவன் எங்கோ எட்டாத உயரத்தில் இல்லை. தூரத்தில் இல்லை. கூப்பிடுதூரத்தில் கைக்கு எட்டிய இடத்தில்தான் எட்டாக இரண்டாக மெய்ப்பொருளாக உள்ளார் !

இதுவரை இந்த உலகில் எல்லோரும் மெய்ப்பொருள் பரம்பொருள் கண்ணில் மணியில் ஒளியாக உள்ளார் என்பதை இரகசியமாகவே, மறைத்தே சொல்லி வந்துள்ளனர்.

திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆசியாலும் எல்லாம் வல்ல இறைவன் திருவருளாலும் இந்த உலகத்திலேயே அடியேன் தான் முதன்முதலாக இந்த இரகசியங்களை வெளிப்படுத்தி நூலாக வெளியிட்டுள்ளேன் !

மெய்ப்பொருளை சொல்லாத ஞானிகளே இல்லை !

ஆனால் எல்லாமே மறைபொருளாக பரிபாஷையாக சூட்சுமமாக குரு மூலம் அறியக்கூடிய வகையிலேயே உள்ளது !

உலகர் அனைவரும் ஞானம் பெற, மெய்ப்பொருள் அறிய உணர அடியேனை கருவியாக்கி இதோடு 24 ஞானநூற்களை எழுதவைத்து மெய்ப்பொருளை வெளிப்படுத்தியுள்ளனர் !

எல்லா ஞானிகளின் அருளும் அடியேனுக்கு துணை நிற்கிறது !

இயேசுபெருமானும் நபிபெருமானும் வள்ளல் பெருமானும் உபதேசித்தது ஒன்றே ! 
நன்றே ! மெய்ப்பொருளே !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts