செவ்வாய், 1 நவம்பர், 2022

அண்டம் போல் அழகியதாம் கண் மூன்றுடையதாம் - பரிபாஷை


சாகாக்கல்வி நூலிலிருந்து : 28
🔥 பரிபாஷை 🔥 பட்டினத்தார் கூறுகிறார்,

"அண்டம் போல் அழகியதாம் கண் மூன்றுடையதாம் ஒற்றி கடலருகே நிற்கும் கரும்பு" என்று.
நமது கண்மணி நாமிருக்கும் பூமியைப் போல அழகாகத்தானே உள்ளது !

கண் மூன்றுடையதாம், வெள்ளைவிழி கருவிழி கண்மணி என புறத்தே மூன்று நிலைகளாக உள்ளது.
வலது கண் இடதுகண் இரண்டும் உள்ளே கூடும் நெற்றிக்கண் என கண் மூன்று உள்ளது.

பட்டினத்தார், திருவொற்றியூர் கடற்கரையிலே நிற்குமாம் கரும்பு என்கிறார்.
நேரடியாக பொருள் காணமுடியாது !

இதுதான் பரிபாஷை !

கடற்கரையிலே கரும்பு விளையாதே !
கடல்போல நீர் பெருகும் கண்களிலே ஒற்றியிருக்கும் கண்மணி ஒளி என்பதே !

கரும் - பு !
அதாவது கருப்பு பூ !
அது நம் கண் மலரை குறிப்பதாகும் !

உலகத்தில் எங்காவது கருப்பு பூ உண்டா ?
கண்மலர் என கண்ணை சொல்வோமல்லவா ?
பட்டினத்தார் கூறியது கண்மணியே !

கருப்பு பூ என்றும் அது இந்த பூமியை போல அழகானது என்றும் அது மூன்று கண் என்றும் நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார்.

இப்படியே எல்லா சித்தர்களும் ஞானிகளும் பரிபாஷையாக சூட்சுமமாக இறைவன் ஒளியாக துலங்கும் கண்மணியை, மெய்ப்பொருளை பலப்பல விதமாக கூறியருளியிருக்கிறார்கள் 

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts