ஞாயிறு, 13 நவம்பர், 2022

நடுக்கண் புருவபூட்டு - வள்ளலார்

சாகாக்கல்வி நூலிலிருந்து : 30
🔥 புருவமத்தி - வள்ளலார் 🔥


வள்ளல் பெருமான் புருவம் கண் என்று தெளிவாக கூறி விட்டார்.
"கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டுகளி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு” என வெட்ட வெளிச்சமாக்கி விட்டார் ! "நடுக்கண் தான் புருவபூட்டு"

இதற்கு விளக்கமும் வேண்டுமோ ?!
 
“பூட்டை திறப்பது கையாலே மனப்பூட்டை திறப்பது மெய்யாலே"
 என்றொரு சித்தர் பாடுவார். நடுக்கண் புருவபூட்டை திறக்க வேண்டும் !

எப்படி ? கையாலே இங்கே கை என்பதும் நமது கண்களே ! கண்கள் தான் நமக்கு கை !
 
கண்கள்தான் இறைவனின் திருவடி - கால்கள் !
 
இந்த சித்தர் கண்ணாலே பூட்டை திறக்க கூறியுள்ளார்.

அங்கே மனமாகிய பூட்டும் உள்ளதாம் அதை மெய்யாலே திறக்கணுமாம் !

இங்கே இன்னொரு இரகசியமும் வெளிப்பட்டது.

மனம் இருப்பதும் கண்ணில் தான் !
அதை மெய் கொண்டு திறக்கணுமாம் !

மெய் எது உண்மை. சத்தியம் அழியாதது. ஒளி ஒன்றுதானே !
அதாவது கண்மணியில் உள்ள மனதை அகற்ற கண்மணியின் உள் உள்ள ஒளியை பிடி !
ஒளியை வைத்து மனதை திற !

கண்மணி வாசலை திறந்துவிடலாம் என்பதே ஞான இரகசியம் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts