ஞாயிறு, 20 நவம்பர், 2022

🔥 7 - திரை எங்கே இருக்கிறது? 🔥



சாகாக்கல்வி நூலிலிருந்து : 33

🔥 7-திரை எங்கே இருக்கிறது? 🔥

வள்ளல் பெருமான் கண்ணே, கண்மணியே என்று மெய்ப்பொருளை பல்லாயிரம் தடவை திருஅருட்பாவில் சுட்டிக்காட்டி நாமும் மரணமிலா பெருவாழ்வு பெற வழிகாட்டியுள்ளார்.


"தகுந்த ஆச்சாரியன் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்கப் பெற்றுக்கொள்வது நலம்"! என வள்ளல் இராமலிங்கர் உரைத்துள்ளார் ! நடுக்கண் - கண்மணியை திறக்கப்பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் ?! அப்படியானால் நடுக்கண் மூடப்பட்டுள்ளது என்று தானே பொருள் !

யார் மூடியது ? எதற்காக மூடியது ?
எதனால் மூடியது என அறிய வேண்டாமா மனிதா ?

கண்மணியின் மத்தியில் ஊசிமுனையளவு சிறிய துவாரம் உள்ளது !? அந்த ஓட்டை தான் மெல்லிய ஜவ்வால் மூடப்பட்டுள்ளது ! உள்ளே, ஊசிமுனை துவாரத்தின் உள்ளே ஊசிமுனையளவு ஒளி நம் ஆத்மஜோதி துலங்குகிறது !

ஓட்டையை மறைத்துக் கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வே. நமது மும்மலங்கள் ! வள்ளல்பெருமான் இதைத்தான் திரைகள் என்கிறார் !

இதையெல்லாம் சூட்சுமமாக சிருஷ்டித்தவன் எல்லாம் வல்ல இறைவன் ! இதனை கண்டு உணர்ந்து உய்தனர் ஞானிகள் !

திரைகளாகிய ஜவ்வே நாம் நீக்க வேண்டிய பொருள் ! திரை - நீங்கினாலே, மெய்ப்பொருளின் திரை நீங்கினாலே நம் ஆத்மஜோதியை நாம் காணமுடியும் ?! இதுவே, நாம் அடைய வேண்டிய மாபெரும் பேரின்ப பெருநிலையாகும் !

மனிதனாக பிறந்த நாம் பெறவேண்டிய அதி உன்னத நிலை இதுவே !

நம்மை நாம் காண உணர மெய்ப்பொருள் அறிந்து உணர்ந்து தவம் செய்ய வேண்டும் !

ஞான சற்குருவை பணிந்து தீட்சை பெற்று தவம் செய்து பெறவேண்டும்.



இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts