வெள்ளி, 18 நவம்பர், 2022

🔥 மெய்ப்பொருள் காண்பது அறிவு 🔥



சாகாக்கல்வி நூலிலிருந்து : 34

🔥 மெய்ப்பொருள் காண்பது அறிவு 🔥

நமது மூதாதையர்கள் நாமெல்லாம் ஞானம் பெற வேண்டி வாழ்க்கையின் எல்லாநிலையிலும் காணுகின்ற பொருட்களிலும் ஞானம் விளங்கும்படி எல்லாவற்றையும் அமைத்து வைத்தனர்.

பல ஊர் பெயர்கள் மெய்ப்பொருள் விளக்கம் :

திருக்கண்ணபுரம், எண்கண், எட்டுக்குடி, திருவாவடுதுறை, குறுங்குடி இப்படி ஊர் பெயர்கள்.
திருவாகிய இறைவன் குடியிருப்பது கண் ஆகிய இடத்தில் அது திருக்கண்ணபுரம் !
எண் ஆகிய எட்டும் இரண்டும் கண் எனக் குறிக்கும் எண்கண் !

எட்டுக்குடி என்பது எட்டாகிய கண்ணில் குடியிருக்கும் இறைவன் !
திருவாகிய ஜோதி ஆடிக்கொண்டிருக்கும் இடம் அதுவே திருவாவடுதுறை !
ஊசிமுனையளவு குறுகிய சின்ன இடத்தில் குடியிருப்பவன் இறைவன் எனவே குறுங்குடி !
இப்படி ஊர் பெயரும் மெய்ப்பொருள் விளக்கமே !

தாம்பரம் - தாம் அதாவது நாம் தான்பரம் எனக் குறிக்க வந்ததே தாம்பரம் !
சிதம்பரம் சின்ன அம்பரம் சின்னகோவில் அதுதான் சிதம்பரம்.
கண்ணன் என்ற பெயர் மெய்ப்பொருளே !

கண் ஆகிய அவன் கண்ணிலே இருக்கும் ஒளியாகிய இறைவன். கண் அவன் கண்ணன் - கிருஷ்ணமணி ! கண்மணி !

கணபதி - கண்ணின் பதி - கணங்களின் பதி கணநாயகன் ! திருக்கண்ணை மங்கை !

நேத்திர தரிசனம் திருப்பதியில் கண்டவர் மோட்சம் பெறுவர் !

நேத்திரம் நயனம் என்றாலும் கண்.

உபநயனம் ஒரு சடங்கு. பூணூல் பூட்டும் வைபவம் !

துணை, இரு என்பது உப எனப்படும். நயனம் என்றால் கண். இரு கண்பற்றி அறிவதே அறிவிப்பதே உபநயன வைபவத்தின் நோக்கம் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts