செவ்வாய், 8 நவம்பர், 2022

🔥 புருவ-மத்தி 🔥



சாகாக்கல்வி நூலிலிருந்து : 29

🔥 புருவ-மத்தி 🔥


புருவ மத்தியில் தியானம் செய் என எல்லோரும் கூறுவர்.
புருவமத்தி எது என தெரிய வேண்டாமா ?

சாதாரணமாக யாரிடம் கேட்டாலும் புருவமத்தி நாம் நெற்றியில் பொட்டு
வைக்கும் இடத்தையே காட்டுவர் ! அதாவது இரு புருவங்களுக்கிடையே தான் காட்டுவர்.

ஞானிகள் இரு புருவ மத்தி எனக் கூறவில்லையே !
புருவமத்தி என்று ஒருமையில் தானே கூறினர்.
ஒரு புருவம் அதன் மத்தி ஒன்றுமில்லை,

அதன் கீழேயிருப்பது கண்.
இப்படி சிந்திக்க வேண்டும், யூகிக்க வேண்டும்.

புருவமத்தி என்று சொன்னார்களே அதன் கீழ் உள்ள கண்ணைப் பற்றித்தான்
சொல்லியிருப்பர். அதன் விளக்கம் இதுவாகத்தான் உள்ளது என சிந்தித்து அறியவேண்டும்.

கண்ணின் தன்மையை அறியவேண்டும்.

புருவமத்தி என்றால் கண்தான் என மற்றொரு சித்தர் உண்மையை போட்டு உடைக்கிறார்.

ஒரு சித்தர் போட்ட பூட்டை இன்னொரு சித்தர் திறந்துவைக்கிறார் ! இப்படியேதான் எல்லா சித்தர்களும் ஞானிகளும் மெய்ப்பொருளை பரிபாஷையாக சூட்சுமமாக பலப்பலவிதமாக கூறி அருளியிருக்கிறார்கள் !

" புருவமத்தி ஏதென்றக்கால் பரப்பிரம்மமானதோர் அண்ட உச்சி ".
எவ்வளவு சிறந்த சூட்சுமமான - பரிபாஷை சங்கேத வார்த்தை ! - படிக்கப் படிக்க பேரானந்தம் !
புருவமத்தி பரப்பிரம்மமான அண்ட உச்சி !

அண்டம் போல் அழகான, பூமிபோல அழகான கண்மணி, உச்சி என்றால் கண்மணி மத்தியாகும் !
அது பரப்பிரம்மமானது. அதாவது ஒளியானது.

புருவமத்தி கண்மணி மத்தியிலுள்ள ஒளி !
இப்படியே தான் எப்பொருளும் மெய்ப்பொருளே !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts