செவ்வாய், 15 நவம்பர், 2022

🔥 பட்டினத்தார்க்கு குரு சொன்ன உபதேசம் 1 🔥

சாகாக்கல்வி நூலிலிருந்து : 31 

                  🔥 பட்டினத்தார்க்கு  குரு சொன்ன உபதேசம் 1 🔥

“வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கும் எட்டாத புஷ்பம் இறையாத தீர்த்தம் இனி முடிந்து கட்டாத லிங்கம் கருத்தினுள்ளே முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே" 

     இதையெல்லாம் என் குருநாதன் எனக்கு உபதேசித்து மெய்ப்பொருள் உணர்த்தி அருளினார் என்றார் சித்தர் பெருமகனார் ! என் அனைத்தும் பரிபாஷை ! 

சூட்சுமமாக சொல்லப்பட்டது ! 

அனைத்துமே ஒரே பொருள்தான் ! 

மெய்ப்பொருள் தான் !


⚫ வெட்டாத சக்கரம் : 
      சக்கரம்போல் உருண்டையாக வட்டமாக இருப்பது நம் கண்மணி ! சக்கரம் உருள்வது போல் கண்மணி சுழன்று கொண்டிருக்கிறது !      கண்மணியாகிய சக்கரம் வெட்டி உருவாக்கப்பட்டதல்ல ! வெட்டி ஒட்டாமல் முழுதாக இறைவனால் உருவாக்கப்பட்ட சக்கரமே கண்மணி ! அதனால்தான் கண்மணியை வெட்டாத சக்கரம் என்றனர் !


👀 பேசாத மந்திரம் :    மந்திரம் எனப்படுவது இறைவனை மனதில் திறமாக நினைந்து இருத்தச் சொல்லப்படும் வார்த்தை ! இது எண்ணிலடங்கா அளவில் உள்ளது !      " மாமறை நூல் ஏற்றிக்கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய் " என வள்ளல் பெருமான் கூறுகிறார் !      " பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் பலகோடி " என சிவவாக்கியர் கூறுகிறார் !  அப்படியானால், ஜபிக்க வேண்டாம் வார்த்தைகளை !  மந்திரம் என்றால் மனதை திறமாக திடமாக வைத்து விடுவது ! மனம் திடமான இருக்கும் இடம் ! அந்த - இடத்திலேயே இருத்திவிடுவது ! அது கண்மணியான இடமே ! கண்மணியின் ஊசிமுனை வாசலில் உள்ள மெல்லிய ஜவ்வே திரையே நம் மும்மலத்திரை ! அதிலிருந்து வெளிப்படுவதே மனம் ! கண்மணி முன்னர் சூட்சுமமாக இருப்பதே மனம் ! கண்மணியிலுள்ள மனதை அதிலேயே திறமாக வைப்பதால் "மந்திரம்" எனப்படுகிறது கண்மணி ! கண் பேசாது அல்லவா அதனால் தான் கண்மணியே பேசாத மந்திரம் !


🌼 வேறொருவர்க்கும் எட்டாத புஷ்பம் : 

புஷ்பம் என்றால் மலர் பூ. கண்மலர் என்று நாம் கூறுவோமல்லவா ? இந்த புஷ்பத்தை வேறு யாராவது எட்ட முடியுமா ?  அவரவர் கண் - மெய்ப்பொருள் அவரவர்க்கே எட்டும் இடத்தில் உள்ளது !  எட்டாக உள்ள புஷ்பம் வேறொருவர்க்கும் எட்டாத புஷ்பம் நம் கண்மணியே !


 இறைவன் திருவடிகளே நம் கண்கள் !! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts